மு.க. ஸ்டாலின்: “திமுக 200+ தொகுதிகளில் வெல்லும்..” மகிழ்ச்சியில் சேகர்பாபு..!

2026 சட்டசபைத் தேர்தலில் திமுக 200+ தொகுதிகளில் நிச்சயம் வெல்வோம்” என மு.க. ஸ்டாலின் தெரிவிக்க, சட்டென முதலமைச்சரின் பேச்சைக் கேட்டதும் மகிழ்ச்சியில் கைதட்டி கொண்டாடிய சேகர்பாபு. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தான் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இருப்பினும், இப்போதே பல்வேறு கட்சிகளும் அரசியல் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர். இதற்கிடையே சட்டசபைத் தேர்தல் குறித்த கேள்விக்கு திமுக 200+ தொகுதிகளில் நிச்சயம் வெல்லும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் சட்டசபைக்கு அடுத்தாண்டு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இருப்பினும், இப்போதே பல்வேறு கட்சிகளும் அரசியல் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர். தேர்தலை மனதில் வைத்துக் கொண்டே இங்கு அரசியல் கட்சிகள் காய்களை நகர்த்தி வருகின்றன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எப்போதும் மாதம் ஒரு முறையாவது தனது தொகுதியான கொளத்தூருக்குச் செல்வதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். இன்று சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். 2026 சட்டசபைத் தேர்தல் குறித்து கேள்விக்கு, “அடுத்த தேர்தலில் திமுக 200+ தொகுதிகளில் நிச்சயம் வெல்வோம்” என மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். அப்போது அருகே இருந்த சேகர்பாபு, சட்டென முதல்வரின் இந்தப் பேச்சைக் கேட்டதும் மகிழ்ச்சியில் கைதட்டி சபாஷ் என்பது போலக் கொண்டாடினார்.

மேலும், திமுக அரசு மக்கள் வரிப் பணத்தைச் சூறையாடுவதாக பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனத்தது குறித்த கேள்விக்கு, “அவர்களுக்கு வேற வேலை இல்லை.. அதனால் இப்படித் தான் பேசிக் கொண்டு இருப்பார்” என்றார். தமிழ்நாட்டில் மக்கள் தொகை குறையும் நிலையில், மூன்றாவது குழந்தையைப் பெறும் குடும்பத்தினருக்குச் சலுகைகள் அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை திமுக MLA பர்கூர் மதியழகன் சட்டசபையில் கோரிக்கை விடுத்த கேள்விக்கு, “மக்கள் தொகை சரிவால் அதற்கு அவசியம் ஏற்படலாம்.. அதேநேரம் 3-வது குழந்தை என்பது கட்டாயம் இல்லை” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.