3 வயது சிறுவனை கண்மூடித்தனமாக தாக்கும் தாயார்… சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ..!

3 வயது சிறுவனை தாயார் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம், ஜக்தியால் பகுதியை சேர்ந்த ரமாதேவிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ராமதேவியின் கணவர் ஆஞ்சநேயர் வேலை நிமித்தமான துபாய் சென்று பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் ராமதேவி அவரது இளைய மகனை தினந்தோறும் அடித்து கொடுமை படுத்தி வருகிறார். இதனை அக்கம் பக்கத்தினர் சில நாட்களாக எச்சரித்தும் அவர் கண்டு கொள்ளவில்லை. ஆகையால், ராமதேவி மகனை அடித்து கொடுமை படுத்துவதற்கு முடிவு கட்ட நினைத்தனர். அதையடுத்து அக்கம் பக்கத்தினர் மகனை அடிப்பதை விடியோவாக பதிவு செய்து காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதனை பார்த்த காவல்துறை உடனடியாக ராமதேவியின் வீட்டிற்கு சென்று குழந்தையை மீட்டு குழந்தைகள் நல வாரியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காவல்துறையினர் ராமதேவியின் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

மனிதநேயம் இன்னும் சத்தமாக பேசியது… சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ..!

காஷ்மீர் வன்முறையாளர்களால் வரையறுக்கப்படவில்லை… மனிதநேயம் இன்னும் சத்தமாக பேசியது காயமடைந்த சுற்றுலாப் பயணியை மீட்க தனது உயிரைப் பணயம் வைத்துள்ளார் ஒரு காஷ்மீரி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்தியாவின் முக்கிய கோடை கால சுற்றுலாத்தலமாக ஜம்மு – காஷ்மீர் கடந்த சில ஆண்டுகளாக மாறி வருகிறது. உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் காஷ்மீருக்கு சுற்றுலா வந்த வண்ணம் இருக்கிறார்கள். மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பரந்த புல்வெளிகளை கொண்ட அழகிய ஊர்.

இந்த பஹல்காம் பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாது. இங்குள்ள பைசரன் குன்றில் ஒரு ஏரியும், மலையேற்ற வீரர்களுக்கான இடமும் இருக்கிறது. இந்த பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கால்நடையாகவும், குதிரைகளில் சவாரி செய்தும் மட்டுமே சென்று வருகிறார்கள்.

இங்கு நேற்று பிற்பகல் 3 மணி அளவில் பைசரன் மலைப்பகுதியில் பைன் மரக்காட்டு பகுதியில் இருந்து பல பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் அதிவேகமாக களம் இறங்கினார்கள். அப்போது திடீரென அங்கு கூட்டமாக நின்ற சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டுள்ளனர். இதில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதனிடையே சம்பவம் குறித்து கேள்விப்பட்டு ராணுவம், மத்திய ஆயுதப்படை மற்றும் காவல்துறை விரைந்து சென்று பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுண்ட்டர் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். காயமடைந்த சுற்றுலாப் பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சிலர் சமூக வலைத்தளங்களில் காஷ்மீர் குறித்தும், முஸ்லிம் மக்கள் குறித்து வெறுப்புகளை பரப்பி வருகிறார்கள். அவர்களுக்கு பதிலடி தரும் வகையில் தான் காஷ்மீரின் நடந்த மனித நேய சம்பவங்களை பலர் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில், காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவரை தனது தோளில் சுமந்தபடி காஷ்மீரி ஒருவர் காப்பாற்றினார். இதை பகிர்ந்த நெட்டிசன், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, மனிதநேயம் இன்னும் சத்தமாக பேசியது. காயமடைந்த சுற்றுலாப் பயணியை மீட்க தனது உயிரைப் பணயம் வைத்துள்ளார் ஒரு காஷ்மீரி – இதுதான் உண்மையான காஷ்மீர்.

காஷ்மீர் வன்முறையாளர்களால் வரையறுக்கப்படவில்லை.. அதேநேரம் இரக்கம், தைரியம் மற்றும் அன்பு ஆகியவற்றால் காஷ்மீர் இருக்கிறது. நாம் உண்மையில் யார் என்பதை உலகம் பார்க்கட்டும். இதுதான் இந்தியாவின் சகோதரத்துவம் என நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சூதாட்ட வீடியோ வைரல் எதிரொலி 6 காவலர்கள் பணியிடை நீக்கம்..!

மத்தியப்பிரதேசத்தில் சூதாட்ட வீடியோ வைரல் எதிரொலி அதில் இருந்த 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்தியப்பிரதேசத்தின் திகம்கர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் 6 காவலர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ நேற்று முன்தினம் மாலை சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோகித் கஷ்வானி கவனத்துக்கு வந்த நிலையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.