10 -ஆம் வகுப்பு தேர்வில் குளறுபடி..! எல்லா பாடங்களிலும் ஃபெயில்..!

10 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களும் தேர்வெழுதிய மாணவிக்கு ஆப்சன்ட் என்பதால் ஃபெயில் என ரிசல்ட் வந்ததால் மனைவி அதிர்ச்சி அடைத்துள்ளார். குஜராத்தில் கடந்த மே 8 -ஆம் தேதி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சோட்டா உதேபூரில் வசிக்கும் அகிக்ஷா பர்மர் என்ற மாணவி தனது 10 ஆம் வகுப்பு முடிவுகளை பார்த்து அதிர்ச்சியில் உரைந்தார்.

அதாவது, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களும் தேர்வெழுதிய தனக்கு, ஆப்சன்ட் என்பதால் ஃபெயில் என ரிசல்ட் வந்ததால் அவர் குழப்பம் அடைந்தார். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் கொடுத்த பிறகு, சிசிடிவியை ஆய்வு செய்ததில் மாணவி எல்லா பாடங்களையும் எழுதியிருப்பது தெரியவந்தது. சோட்டா உதேபூர் மாவட்ட கல்வி அதிகாரி ஆனந்த் பர்மர், தேர்வு மேற்பார்வையாளர் ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர் உட்பட ஆறு பேருக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.