பாகிஸ்தான் ‘உளவு’ பார்த்த இளம்பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது..!

இந்தியாவில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த சமூக வலைதளங்களில் பிரபலமாக டிராவல் வித் ஜோ சேனலை நடத்தி வரும் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை காவல்துறை கைது செய்யப்பட்டு இருப்பது தான் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜம்மு – காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்தியா மீது பாகிஸ்தான் அத்துமீறி ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

இந்தியா, பாகிஸ்தான் மீது கடுமையான பதில் தாக்குதலை மேற்கொண்டது. தாக்குதலை எதிர்கொள்ள முடியாத பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து, மே 10 ஆம் தேதி இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. எனினும் அன்று இரவும் பாகிஸ்தான் இந்தியாவில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதன் பிறகு தற்போது பதற்றம் சற்று தணிந்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை களை எடுக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்து வந்தவர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், இவர்கள் பாகிஸ்தானுக்கு ஏஜெண்டுகளாகவும், ரகசியங்களை சேகரித்துக் கொடுப்பவர்களாகவும், நிதி பரிமாற்றம் செய்பவர்களாகவும் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. டிராவல் வித் ஜோ என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வரும் ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் உள்பட 6 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.

இளம்பெண் ஜோதி மல்ஹோத்ரா, 3,77,000 க்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். கடந்த 2023-ஆம் ஆண்டு கமிஷன் ஏஜெண்ட் மூலம் விசா பெற்று பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட தளங்களில் பாகிஸ்தானியருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்திய பகுதிகள் குறித்த ரகசியங்களை அவர்களுக்கு பகிர்ந்து வந்ததுடன், சமூக வலைதளங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக அவரை கைது செய்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோதி மல்ஹோத்ரா மீது அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம், 1923 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) இன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெய்ராம் ரமேஷ் கேள்வி: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு என்ன..?

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் அமெரிக்காவின் பங்கு என்ன என ஜெய்ராம் ரமேஷ் எழுப்பியுள்ளார். தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சி எம்.பி.யான ஜெய்ராம் ரமேஷ் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏன் அறிவித்தார் என கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சி கேட்டு வருகிறது. இது முதல் முறையாக நடக்கிறது. பிரதமர் மோடி இது குறித்து எதுவும் கூறவில்லை.

அமெரிக்காவின் பங்கு மிகவும் முக்கியமானது, அவர்களால்தான் இந்தப் போர் நின்றது என அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ கூறுகிறார். வெளியுறவு மந்திரி டாக்டர் ஜெய்சங்கர் இதற்குப் பதிலளிக்கவில்லை. அமெரிக்காவின் பங்கு என்ன என்பது குறித்து பிரதமர் மோடியும், வெளியுறவு மந்திரியும் இதுவரை ஏன் இதுவரை ஏன் பதிலளிக்கவில்லை என நாங்கள் தொடர்ந்து கேட்டு வருகிறோம் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

Danish Kaneria: வெட்கமாக இல்லையா..? பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு எந்தப் பங்கும் இல்லை..!?

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உண்மையிலேயே எந்தப் பங்கும் இல்லை என்றால், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஏன் இன்னும் அதைக் கண்டிக்கவில்லை? வெட்கமாக இல்லையா? என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனரீயா கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவின் முக்கிய கோடை கால சுற்றுலாத்தலமாக ஜம்மு – காஷ்மீர் கடந்த சில ஆண்டுகளாக மாறி வருகிறது. உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் காஷ்மீருக்கு சுற்றுலா வந்த வண்ணம் இருக்கிறார்கள். மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பரந்த புல்வெளிகளை கொண்ட அழகிய ஊர்.

இந்த பஹல்காம் பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாது. இங்குள்ள பைசரன் குன்றில் ஒரு ஏரியும், மலையேற்ற வீரர்களுக்கான இடமும் இருக்கிறது. இந்த பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கால்நடையாகவும், குதிரைகளில் சவாரி செய்தும் மட்டுமே சென்று வருகிறார்கள்.

இங்கு நேற்று பிற்பகல் 3 மணி அளவில் பைசரன் மலைப்பகுதியில் பைன் மரக்காட்டு பகுதியில் இருந்து பல பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் அதிவேகமாக களம் இறங்கினார்கள். அப்போது திடீரென அங்கு கூட்டமாக நின்ற சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டுள்ளனர். இதில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதனிடையே சம்பவம் குறித்து கேள்விப்பட்டு ராணுவம், மத்திய ஆயுதப்படை மற்றும் காவல்துறை விரைந்து சென்று பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுண்ட்டர் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். காயமடைந்த சுற்றுலாப் பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தல்களால் பாதிக்கப்பட்ட காஷ்மீருக்கு, அண்மைக்காலமாகவே சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்தார்கள். மெல்ல மெல்ல நிலைமை மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த எண்ணத்தை பயங்கரவாதிகள் அழிக்க வேண்டும் என்று நினைத்து தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனரீயா தனது எக்ஸ் பக்கத்தில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உண்மையிலேயே எந்தப் பங்கும் இல்லை என்றால், அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஏன் இன்னும் அதைக் கண்டிக்கவில்லை? திடீரென உங்கள் படைகள் ஏன் திடீரென்று அதிக எச்சரிக்கையுடன் இருப்பது ஏன்? ஏனென்றால், நான்கு யோசித்து பார்த்தால் உங்களுக்கு உண்மை தெரியும் – நீங்கள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வளர்க்கிறீர்கள். உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என டேனிஷ் கனரீயா எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள்..!

அல்-காதர் அறக்கட்டளை முறைகேடு தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் இம்ரான் கான் குற்றவாளி என அறிவித்து அவருக்கு 14 ஆண்டுகளும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்து இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார். இதையடுத்து எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து, புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் தம்பி. பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டதில் இருந்து, இம்ரான் கான் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஏற்கனவே காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் கடந்த 2023 -ஆம் ஆண்டு மே மாதம் அவர் கைது செய்யப்பட்டபோது,​​ அவரது ஆதரவாளர்கள் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தையும், லாகூரில் உள்ள கார்ப்ஸ் கமாண்டர் இல்லத்தையும் சூறையாடினர். இதனால் பெரும் சேதம் ஏற்பட்டது. மேலும், தோஷகானா எனப்படும் அரசு கருவூல ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றம் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால் இம்ரான்கான் தனது எம்.பி. பதவியையும் இழந்தார். பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு மத்தியில் கடந்த வருடத்தின் பெரும்பகுதியை சிறையில் கழித்தார் இம்ரான் கான்.

அல்-காதர் அறக்கட்டளை வழக்கு, இம்ரான் கானும், அவரது மனைவியும் சட்டவிரோதமாக பஹ்ரியா டவுன் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து பல பில்லியன் கணக்கான ரூபாய் மற்றும் நிலத்தை சட்டவிரோதமாகப் பெற்று, அதற்கு ஈடாக இங்கிலாந்து அரசால் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்ட 50 பில்லியன் பவுண்டுகளை சட்டப்பூர்வமாக்கியதாக குற்றம் சாட்டப்படுவது தொடர்புடையதாகும். என்.ஏ.பி, டிசம்பர் 2023 இல் இம்ரான் மற்றும் புஷ்ரா பீபி ஆகியோருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

190 மில்லியன் பவுண்டு அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அடியாலா சிறையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நசீர் ஜாவேத் ராணா இன்று தீர்ப்பை அறிவித்தார். மேலும், இம்ரான் கானுக்கு 1 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் மற்றும் புஷ்ரா பீபிக்கு அரை பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இம்ரான் கானின் மனைவி நீதிமன்றத்தில் கதறல்..! நீதிக்கு இடமில்லை..!

பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நீதிக்கு இடமில்லை. நீதி கேட்டு, இனி நீதிமன்றத்துக்கு வரவே மாட்டேன்’ என, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவி கண்ணீருடன் நீதிமன்றத்தில் கதறியழுத காட்சி அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது.

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன் கோரி இஸ்லாமாபாத் மாவட்ட மாஜஸ்திரேட் நீதிமன்றத்துக்கு புஷ்ரா பீபி நேற்று வந்திருந்தார். அப்போது, நீதிபதி முன் கண்ணீர் மல்க, புஷ்ரா பீபி பேசுகையில், ‘கடந்த 9 மாதங்களாக, நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு ஜாமீன் கேட்டு அலைந்து கொண்டிருக்கிறேன். சிறையில் அடைக்கப்பட்டுள்ள என் கணவர் இம்ரான் கான், மனிதர் இல்லையா? இந்த அநீதியை எந்த நீதிபதியும் கண்டுகொள்வதில்லை.

இந்த நீதிமன்றத்தில் நீதிக்கு இடமில்லை; இனி, நீதிகேட்டு நீதிமன்றத்துக்கு வரவே மாட்டேன்’ என்றார். முன்னாள் பிரதமரின் மனைவி, நீதிமன்றத்தில் கதறியழுத காட்சியால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது.

Pakistan: தலையில் கேமரா…! மகள் தலையில் சிசிடிவி மாட்டிய தந்தை..!

பாகிஸ்தானில், பெற்ற மகளுக்காக தந்தை செய்த காரியம் இணையத்தில் வைரலாகி இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் ஏராளமான கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.

சமீபகாலமாகவே இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மலிந்து கொண்டேயிருக்கின்றன. பெண் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே சென்றால், அவர்கள் வீடு திரும்பும்வரை பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. சமீபகாலமாகவே பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது.

அதிலும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புகள் குறைந்து கொண்டே வருவதுடன், பெண்கள் மீதான வன்முறை தாக்குதல்களும் அதிகரித்தபடியே உள்ளன. சில கல்வி நிறுவனங்களிலேயே பாதுகாப்பு இல்லாதபோது, மிகப்பெரிய கலக்கம் பெற்றோர்களை சூழ்ந்து வருகிறது.

இதுஒருபுறமிருந்தாலும், பாகிஸ்தானில் ஒரு அப்பா, தன்னுடைய மகளுக்காக செய்துள்ள காரியம்தான், வியப்பை தந்து வருகிறது. தன்னுடைய செல்ல மகள், எங்கு சென்றாலும் அதை கண்காணிப்பதற்காகவே, மகளின் தலையில் ஒரு சிசிடிவி கேமராவை பொருத்தியிருக்கிறாராம்.

இந்த கேமராவை எங்கிருந்து வேண்டுமானாலும் தன்னுடைய செல்போன் மூலமாக 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும். இப்போதெல்லாம் அந்த பெண், பாகிஸ்தானின் தெருக்களில் எங்கு போனாலும், தலையில் கேமராவுடன்தான் நடமாடி வருகிறாராம். இதை அம்மக்களே ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். இந்த விஷயம் மீடியா வரைக்கும் சென்று, செய்தியாளர் ஒருவர் அந்த பெண்ணை பேட்டி எடுத்துள்ளர்.

இப்படி தலை மேலே, கேமராவை மாட்டியிருப்பது உங்களுக்கு அசௌகரியமாக இல்லையா? என்ற செய்தியாளர் கேள்விக்கு, “இந்த கேமராவுக்கான அக்ஸஸுடன் வீட்டிலிருந்தபடியே,, நான் எங்கெல்லாம் செல்கிறேன் என்ன செய்கிறேன் என்பதை என் அப்பா கண்காணித்து வருகிறார். என்னுடைய அப்பா எது செய்தாலும், அது என்னுடைய நல்லதுக்குதான் செய்வார். அதனால் என்னுடைய அப்பாவின் முடிவுக்கு நான் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என அந்த பெண் தெரிவித்தார்.

ICC T 20 World Cup: பாகிஸ்தான் அணி வெற்றி பெற 152 ரன்கள் நிர்ணயித்தது இந்திய அணி

உலக கோப்பை திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று குரூப்-1 பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்கா அணியையும் இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியையும் வீழ்த்தி இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இந்நிலையில் குரூப்-2 பிரிவில் இன்று மதியம் 3.30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் இலங்கை-வங்கதேச அணிகள் மோதும் ஆட்டத்தில் வங்காளதேச அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது. இந்நிலையில் குரூப்-2 பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில், பாபர் அசாம் தலைமையிலான பரம எதிரியான பாகிஸ்தானை துபாயில் எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி தலைவர் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் களமிறங்கினர். ஆனால் ஷாகின் ஷா அப்ரிடி வீசிய முதல் ஓவரின் 4-வது பந்தில் ரோகித் சர்மா ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து வெளியேற மீண்டும் ஷாகின் ஷா அப்ரிடி வீசிய இரண்டாவது முதல் பந்தில் லோகேஷ் ராகுல் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற இந்திய அணி 2.1 ஓவரில் 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாற விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தனர். ஆனால் ஹசன் அலியின் 5.4 ஓவரில் சூர்யகுமார் யாதவ் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய ரிஷப் பன்ட், விராட் கோலியுடன் ஜோடி சேர்த்தார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை சரிவிலிருந்து மீட்டனர். ஷதாப் கானின் 12.2 ஓவரில் ரிஷப் பன்ட் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா, விராட் கோலியுடன் ஜோடி சேர்த்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 151 ரன்கள் எடுத்தது.

ICC T 20 World Cup : இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி உலக கோப்பை திருவிழாவை வெற்றியுடன் தொடங்குமா…!?

உலக கோப்பை திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகளில் குரூப்-1ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம் மற்றும் குரூப்-2ல் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்நிலையில் நேற்று குரூப்-1 பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்கா அணியையும் இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியையும் வீழ்த்தி இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இந்நிலையில் குரூப்-2 பிரிவில் இன்று மதியம் 3.30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் இலங்கை-வங்கதேச அணிகள் மோதுகின்றன. மேலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில், பாபர் அசாம் தலைமையிலான பரம எதிரியான பாகிஸ்தானை துபாயில் எதிர்கொள்கிறது. இந்தியா, பாகிஸ்தான் மோதல் என்றாலே வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் உணர்ச்சி பிழம்பாகி விடும் நிலையில், உலக கோப்பை என்பதால் அனல் பறக்கும்.

உலகக்கோப்பை வரலாற்றில் ஒருநாள் போட்டி உட்பட இந்திய அணியை, பாகிஸ்தான் அணி இதுவரை வீழ்த்தியதே இல்லை. தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் தலைவர் விராட் கோலி, ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் போன்ற அதிரடி பேட்டிங் வரிசையில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்குர், வருண் சக்ரவர்த்தி போன்ற தரமான பந்து வீச்சாளர்களும் அணிவகுத்து நிற்கிறார்கள்.

மகேந்திரசிங் தோனி ஆலோசனையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒருங்கிணைந்து திறமையை வெளிப்படுத்தினால் 2-வது முறையாக ஐ.சி.சி. T 20 கோப்பையை வென்று எத்தனையோ சாதனைகளை படைத்த விராட் கோலியின் ஏக்கத்தை தணிக்கலாம்.

உலக கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக இந்தியாவிடம் உதை வாங்கி வரும் பாகிஸ்தான் இந்த முறை அந்த சோகத்துக்கு முடிவு கட்டும் வேட்கையுடன் வியூகங்களை தீட்டி வருகிறது. அணி தலைவர் பாபர் அசாம், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், சோயிப் மாலிக், முகமது ஹபீஸ், பஹார் ஜமான் ஆகியோர் அந்த அணியின் பேட்டிங் வரிசை உள்ளனர். மேலும் ஹாரிஸ் ரவுப், ஷகீன் ஷா அப்ரிடி இருவரும் பந்து வீச்சில் மிரட்டக்கூடியவர்கள். மொத்தத்தில் இரு அணிகளும் சம பலத்துடன் உள்ளதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை கணிப்பது கடினம்.

இந்தியா உத்தேச அணி: ரோகித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி (தலைவர்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பன்ட், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர், முகமது ஷமி.

பாகிஸ்தான் உத்தேச அணி: முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (தலைவர்), சோயிப் மாலிக், பஹார் ஜமான், முகமது ஹபீஸ், ஆசிப் அலி, ஹசன் அலி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஹாரிஸ் ரவுப், ஷாகின் ஷா அப்ரிடி.

T20 world cup 2021: பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தினால் பாகிஸ்தான் கிர்க்கெட் வாரியத்துக்கு பணம் நிரப்பபடாத பிளாங் “செக்”

2007ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐசிசி T 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. இதுவரை நடைபெற்ற 6 முறை நடைபெற்றுள்ள தொடர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 முறையும், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் தலா ஒரு முறையும் உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் T 20 உலகக் கோப்பை போட்டி 2018-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருந்த தொடரைக் கைவிடுவதாக ஐசிசி அறிவித்ததால் 4 ஆண்டுகள் கழித்த பிறகு 2020-ஆம் ஆண்டு T20 உலகக் கோப்பை போட்டி கொரோனா காரணமாக வரும் அக்டோபர் 17 தேதி கொரோனா அச்சம் காரணமாகப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கின்றது.

பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிகள் என்றால் கிரிக்கெட் ராசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமையும் நிலையில் T 20 உலகக் கோப்பை போட்டி என்றால் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு பிறகு முதல்முறையாக சந்திக்க இருக்கின்றன. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் சூப்பர் 12 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. நீண்ட காலத்திற்குப் பிறகு இரு அணிகளும் மோதவுள்ளதால், T20 உலகக் கோப்பை மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய செனட் நிலைக்குழுவுடனான சந்திப்பில் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா கலந்து கொண்டார். அப்போது பேசிய பா ரமீஸ் ராஜா, வரவிருக்கும் T20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தினால் பாகிஸ்தான் கிர்க்கெட் வாரியத்துக்கு பணம் நிரப்பபடாத பிளாங் “செக்” தருவதாக ஒரு வலுவான முதலீட்டாளர் என்னிடம் கூறி உள்ளார் என தெரிவித்துள்ளார்.