Mehbooba Mufti: சமூக ஊடகங்களில் வெறுப்பை பரப்பும் பிளவுவாத சக்திகளை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு சமூக ஊடகங்களில் வகுப்புவாத வெறுப்பை பரப்பும் பிளவுவாத சக்திகளை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை வேண்டும் என ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெஹபூபா முப்தி தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள காஷ்மீர் மாணவர்கள் இடமிருந்து “தொடர்ந்து ஏற்படும் அமைதியின்மை காரணமாக அச்சத்தில் வாழ்கிறோம்” என்று துயர அழைப்புகள் வருகின்றன. சில கல்வி நிறுவனங்கள் தேர்வுகளை ஒத்திவைத்து, இயல்பு நிலை திரும்பும் வரை மாணவர்கள் வீடு திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளன,

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களும் தலையிட்டு, அனைத்து காஷ்மீர் மாணவர்களும் பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் மெஹபூபா வலியுறுத்தினார்.

சமூக ஊடகங்களில் வகுப்புவாத வெறுப்பைப் பரப்புபவர்களுக்கு ஒரு வலுவான செய்தி அனுப்பப்பட வேண்டும். அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேண இதுபோன்ற பிளவுவாத சக்திகளை அடையாளம் கண்டு, கடும் நடவடிக்கை வேண்டும் என மெகபூபா முப்தி தெரிவித்தார்.

ஷேக் அப்துல் ரஷீத் பாஜகவின் பி டீம் என உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி குற்றச்சாட்டு..!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் செப்டம்பர் 18 -ஆம் தேதி 24 தொகுதிகள் 25 -ஆம் தேதி 26 தொகுதிகள் மற்றும் அக்டோபர் 1 -ஆம் தேதி மீதமுள்ள 40 தொகுதிகள் என மொத்தமுள்ள 90 சட்டப் பேரவை உறுப்பினர்கலுக்கு 3 கட்டங்களாக தேர்தல்கள் நடைபெற உள்ளன. மேலும் அக்டோபர் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், தீவிரவாத செயலுக்கு நிதியுதவி வழங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையிலிருந்த இட்டிஹாட் கட்சி எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத், தேர்தல் பிரச்சாரத்துக்காக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் வாக்குகளை பிரிப்பதற்காகவே ரஷீத் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் பாஜகவின் பி டீம் என காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்களான தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லாவும் மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா முப்தியும் குற்றம் சாட்டினர்.