கருணாஸ் பேச்சு: பாலியல் குற்றங்கள் கடந்த 15 ஆண்டுகளாகவே அதிகரித்து கொண்டே வருகிறது..!

சமீப காலமாக அதிகரித்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பான கேள்விக்கு, சமீபமாக அதிகரிக்கவில்லை. கடந்த 15 ஆண்டுகளாகவே அதிகரித்து கொண்டே வருகிறதுஎன முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். கடந்த இரு வாரங்களாக பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி என்று பல்வேறு மாவட்டங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன.

இதன் காரணமாக தமிழக அரசு சட்டம் ஒழுங்கை சரி வர கவனிக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. எதிர்க்கட்சிகள் தரப்பில் பெண்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து கருணாஸ் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, எனது பிறந்தநாளை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஆசி பெற வந்தேன். இந்த பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர்கள் மத்தியில் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் சிவகாசியில் வரும் பிப்ரவரி 22, 23 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிறைவாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் எந்த தவறும் நடக்கக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். தொடந்து சமீப காலமாக அதிகரித்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பான கேள்விக்கு, சமீபமாக அதிகரிக்கவில்லை. கடந்த 15 ஆண்டுகளாகவே அதிகரித்து கொண்டே வருகிறது. அதற்கு காரணம் இன்றைக்கு நாம் வாழும் வாழ்க்கை முறைதான். செல்ஃபோன் பயன்பாடு அதிகரிப்பால் தவறான விஷயங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது.

இதனை ஊடகங்கள் பெரிதுபடுத்தும் போது, அதனை பார்த்து மற்றவர்கள் அதே தவறை செய்கிறார்கள். இதனால் பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகரிக்கிறது என்பதே எனது கருத்து. ஆகவே, அப்படி நடக்கக் கூடிய ஒவ்வொரு விஷயங்களிலும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது என கருணாஸ் தெரிவித்தார்.

தேவர் அரங்கம் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கருணாஸ் நன்றி..!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் புதிய அரங்கத்தை கட்டி திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, முக்குலத்தோர் புலிப்படை கட்சீி தலைவர் கருணாஸ் நன்றி தெரிவித்துள்ளார். முக்குலத்தோர் புலிப்படைக்கட்சி தலைவர் சே. கருணாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பசும்போன் முத்துராமலிங்க தேவர் நினைவை போற்றும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 30-ல் தேவர் ஜெயந்தி விழாவை தமிழ்நாடு அரசு விழாவாக கொண்டாடுகிறது.

அவரது நினைவிடம் அருகில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டு வந்தது. அது தற்பொழுது தமிழ்நாடு அரசால் நிரந்தர அரங்கமாக மாறியிருப்பது பாராட்டுக்குரியது. ரூ.1.55 கோடி மதிப்பீட்டில், அமைக்கப்பட்ட அரங்கத்தை தமிழக முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மக்கள் கோரிக்கையை ஏற்று இவ்வரங்கத்தை திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கருணாஸ் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாஸ்: “அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்க வைப்பது பாஜகவின் சர்வாதிகார போக்கு…! ”

மதுரையில் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் நடிகர் கருணாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் உண்மையைப் பேசியதை சகித்துக்கொள்ள முடியாமல் மன்னிப்பு கேட்க வைப்பது சர்வாதிகார போக்கு. இதை ஒட்டுமொத்த தமிழக மக்கள், தமிழக வியாபாரிகளுக்கு நேர்ந்த அவமானம்” என முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், “முத்துராமலிங்க தேவரின் குருபூஜையையொட்டி, தேசத்துக்கு போராடியவர்களின் போராட்டங்கள், தியாகங்கள் குறித்து எடுத்துரைத்து பேச தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக பயணித்து சொற்பொழிவாற்ற திட்டமிட்டுள்ளேன். சமூக வலைதளங்களில் தற்போதைய இளைஞர்கள் மத்தியில் தவறான வரலாறு சென்றடைவதை மாற்றி உண்மை வரலாற்றை மக்களை சந்தித்துப் பேசுவேன். இதற்காக தமிழக காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளேன்.

நாட்டின் குடிமகனாக ஜிஎஸ்டியை நியாயமாக ஏற்கிறேன். நான் சம்பாதித்ததில் 18% ஜிஎஸ்டி வரியாகக் கொடுக்கிறேன். இதனை நாட்டு மக்களுக்காக செலவிடவில்லை. இந்த ஜிஎஸ்டியை அம்பானிக்கும், அதானிக்கும் கொடுக்கிறார்கள். அவர்களை வளர்க்க ஏன் நான் வழங்க வேண்டும்? அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் உண்மையைப் பேசியதை சகித்துக்கொள்ள முடியாமல் மன்னிப்பு கேட்க வைப்பது சர்வாதிகார போக்கு. பாஜக என்பது ஏமாற்றுக்கூட்டம். இதை ஒட்டுமொத்த தமிழக மக்கள், தமிழக வியாபாரிகளுக்கு நேர்ந்த அவமானமாகவே கருதுகிறேன் என கருணாஸ் பேசினார்.

கருணாஸ்: “விஜய் கொள்கை சித்தாந்தம் குறித்து சொன்னால் பின்னர் பார்ப்போம்…! ”

மதுரையில் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் நடிகர் கருணாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “விஜய் கட்சி மற்றும் கூட்டணி குறித்த கேள்விக்கு விஜய் கொள்கை சித்தாந்தம் குறித்து சொன்னால் பின்னர் பார்ப்போம். ” என முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், “முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவருமான கருணாஸ் தமிழம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். இதற்காக மாவட்டம் தோறும் தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறேன். மேலும் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையையொட்டி, தேசத்துக்கு போராடியவர்களின் போராட்டங்கள், தியாகங்கள் குறித்து எடுத்துரைத்து பேச தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக பயணித்து சொற்பொழிவாற்ற திட்டமிட்டுள்ளேன். சமூக வலைதளங்களில் தற்போதைய இளைஞர்கள் மத்தியில் தவறான வரலாறு சென்றடைவதை மாற்றி உண்மை வரலாற்றை மக்களை சந்தித்துப் பேசுவேன். இதற்காக தமிழக காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளேன்.

விஜய் கட்சி மற்றும் கூட்டணி குறித்த கேள்விக்கு விஜய் கொள்கை சித்தாந்தம் குறித்து சொன்னால் பின்னர் பார்ப்போம். இப்போதைய நிலையில் விஜய் கூட தனித்து நிற்க முடியாது. நான் தனித்து நின்றால் நானும் எனது மனைவியும் தவிர யாரும் ஓட்டு போடமாட்டார்கள். இது தான் களத்தில் யதார்த்தம் என கருணாஸ் தெரிவித்தார்.

கருணாஸ்: “மதுவுக்கு எதிராக எல்லோரையும் வரவழைத்து தமிழனாக மது ஒழிப்பு மாநாடு நடத்த வேண்டும்”

மதுரையில் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் நடிகர் கருணாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “விசிக ஜாதி கட்சி இல்லையா? இதற்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் எந்த அமைப்பாக செயல்பட்டு வந்தது. மதுவுக்கு எதிராக எல்லோரையும் வரவழைத்து தமிழனாக மது ஒழிப்பு மாநாட்டை நடத்த வேண்டும் ” என முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், “முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவருமான கருணாஸ் தமிழம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். இதற்காக மாவட்டம் தோறும் தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறேன். மேலும் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையையொட்டி, தேசத்துக்கு போராடியவர்களின் போராட்டங்கள், தியாகங்கள் குறித்து எடுத்துரைத்து பேச தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக பயணித்து சொற்பொழிவாற்ற திட்டமிட்டுள்ளேன்.

சமூக வலைதளங்களில் தற்போதைய இளைஞர்கள் மத்தியில் தவறான வரலாறு சென்றடைவதை மாற்றி உண்மை வரலாற்றை மக்களை சந்தித்துப் பேசுவேன். இதற்காக தமிழக காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளேன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாடு குறித்த கேள்விக்கு மதுவுக்கு எதிராக பாமக போராட்டம் நடத்தி வந்துள்ளது. ஆனால் மது ஒழிப்பு மாநாட்டிற்கு ஜாதி கட்சியையும், மத கட்சியையும் ஒதுக்கி வைத்துவிட்டு மாநாட்டை திருமாவளவன் நடத்துகிறார். மது ஒழிப்பு மாநாட்டிற்கு பாமகவையும் அழைத்து இருக்க வேண்டும்.

திருமாவளவன் உள்நோக்கத்துடன் மாநாட்டை நடத்துகிறார். அப்படி பார்த்தால் விசிக ஜாதி கட்சி இல்லையா? இதற்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் எந்த அமைப்பாக செயல்பட்டு வந்தது. மதுவுக்கு எதிராக எல்லோரையும் வரவழைத்து தமிழனாக மது ஒழிப்பு மாநாட்டை நடத்த வேண்டும் என கருணாஸ் தெரிவித்தார்.