நீதிபதிகள்: தமிழக ஆளுநர் – அரசு மோதலுக்கு சுமுக தீர்வு காணாவிட்டால் நீதிமன்றம் தலையிட நேரிடும்..!

தமிழக அரசுக்​கும், ஆளுநருக்​கும் இடையிலான மோதல் போக்கு விவகாரத்​தில் நீங்களே சுமுக தீர்வு காணா​விட்டால், நாங்கள் தலையிட்டு தீர்வு காண் போம் என உச்ச நீதி​மன்ற நீதிப​திகள் அறிவுறுத்தி உள்ளனர்.

தமிழக ஆளுநராக ஆர்.என்​.ரவி கடந்த 2021-ஆம் ஆண்டு நியமிக்​கப்​பட்​டத்தில் இருந்தே, தமிழக அரசுக்​கும், அவருக்​கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்தி மொழி, நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரி​வித்து வரும் நிலை​யில், அதற்கு ஆதரவான கருத்துகளை ஆளுநர் ஆர்.என்​.ரவி தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

தமிழக அரசு தயாரித்து வழங்​கும் ஆளுநர் உரையை சட்டப்​பேர​வை​யில் வாசிக்​காமல், சில பகுதிகளை நீக்கியும், சேர்த்​தும் படித்து சர்ச்​சையை ஏற்படுத்​தினார். மேலும் அவை நிகழ்ச்​சிகளில் பங்கேற்​காமல் வெளியேறினார். தமிழகத்​தில் அரசு நிகழ்ச்​சிகளின் தொடக்​கத்​தில் தமிழ்த்​தாய் வாழ்த்​தும், நிறைவாக தேசிய கீதமும் பாடப்​பட்டு வரும் நிலை​யில், நிகழ்ச்​சி​யின் தொடக்​கத்​தி​லும் தேசிய கீதம் பாட வேண்​டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

இதற்​கிடையே, சட்டப்​பேர​வை​யில் நிறைவேற்​றப்​படும் மசோதாக்கள் மற்றும் பல்வேறு திட்​டங்​களுக்கான அரசாணை​களுக்கு ஒப்புதல் அளிக்​காதது உள்ளிட்ட பிரச்​சினை​களுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்​.ரவிக்கு எதிராக உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இதேபோல, தமிழகத்​தில் உள்ள பல்கலைக்​கழகங்​களில் துணைவேந்​தர்களை நியமிக்​கும் விவகாரம் தொடர்பாக​வும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்​துள்ளது. உச்ச நீதி​மன்ற நீதிப​திகள் ஜே.பி.பர்​திவாலா, ஆர்.ம​காதேவன் அமர்​வில் இந்த வழக்​குகள் நேற்று விசா​ரணைக்கு வந்தன.

அப்போது, மத்திய அரசு தரப்​பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்​கடரமணி,ஆளுநருக்கு எதிரான வழக்​குகளை ஒரு வாரத்​துக்கு தள்ளிவைக்க வேண்​டும். ஆளுநருக்​கும், தமிழக அரசுக்​கும் இடையிலான மோதல் போக்கு விவகாரங்​களில் தீர்வு காணப்​பட்​டுள்ளதா, அல்லது பழைய நிலையே தொடர்​கிறதா? தமிழக அரசு தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர்கள் பி.வில்​சன், அபிஷேக் சிங்வி, ஆளுநருக்​கும், தமிழக அரசுக்​கும் இடையிலான மோதல் போக்கு தொடர்​கதை​யாகவே உள்ளது. இன்னும் முடிவுக்கு வரவில்லை.

தற்போதுகூட துணைவேந்​தர்கள் நியமனத்​தில் பிரச்​சினை எழுந்​துள்ளது. தமிழக அரசின் அனைத்து அதிகாரங்​களி​லும் ஆளுநர் தலையிடு​கிறார். இதில் உச்ச நீதி​மன்றம் தலையிட்ட பிறகும், அவரது போக்​கில் முன்னேற்றம் இல்லை. துணைவேந்​தர்கள் நியமனம் தொடர்பான கூடுதல் மனுவை​யும் இந்த வழக்​குடன் சேர்த்து விசா​ரித்து, ஆளுநர் தரப்​பில் பதில் அளிக்க நோட்​டீஸ் பிறப்​பிக்க வேண்​டும். இவ்வாறு வாதம் நடந்​தது.

இதையடுத்து நீதிப​தி​கள், ‘‘தமிழக அரசின் இந்த கூடுதல் மனுவுக்கு தனியாக நோட்​டீஸ் பிறப்​பிக்க வேண்​டியது இல்லை. இந்த வழக்​கோடு சேர்த்து விசா​ரிக்​கப்​படும். மேலும், ஆளுநருக்​கும், தமிழக அரசுக்​கும் இடையிலான மோதல் போக்கு விவகாரத்​தில் நீங்களே சுமுக தீர்வு காணா​விட்​டால், நாங்கள் தலையிட்டு தீர்வு காண்​போம்’’ என ஆளுநருக்​கும், தமிழக அரசுக்​கும் அறிவுறுத்தி விசா​ரணையை அடுத்த வாரத்​துக்கு தள்ளி​வைத்​தனர்.

இப்போதெல்லாம் லஞ்சம் என்பது நாகரீகமாகிவிட்டது – இதற்கு காரணமே உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருப்பதுதான்

மதுரையில் காவல் அதிகாரியாக பணியாற்றிய ஓ.பாஸ்கரன் என்பவர் ரூ.1,500 லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து கடந்த 2014-ம் ஆண்டு மதுரை காவல் ஆணையர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்தார்.

அதன்பின்னர், பாஸ்கரன் மீது துறை ரீதியான ஒழுங்கு விசாரணையை அதிகாரிகள் நீண்டகாலமாக மேற்கொள்ளவில்லை. அதையடுத்து பாஸ்கரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, பணியிடை நீக்கத்தை ரத்து செய்து, முக்கியத்துவம் இல்லாத பணியை அவருக்கு வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., மதுரை காவல் ஆணையர் ஆகியோர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

அந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்து உத்தரவில், பாஸ்கரனை பணியிடை நீக்கம் செய்த பின்னர் துறை ரீதியான விசாரணையை மதுரை காவல் ஆணையர் மேற்கொள்ளவில்லை. அவரை விசாரணை மேற்கொள்ளவிடாமல் எது தடுத்தது என்று தெரியவில்லை. இந்த விவகாரத்தில் எங்களுக்குப் பல சந்தேகங்கள் உள்ளன.

பொது ஊழியரை பணியிடை நீக்கம் செய்துவிட்டு, அவருக்கு எதிரான துறை ரீதியான விசாரணையை பல ஆண்டுகளாக மேற்கொள்ளவில்லை என்றால், எந்த ஒரு நீதிமன்றம், பணியிடை நீக்கத்தை ரத்து செய்து பணி வழங்கத்தான் உத்தரவிடும். எனவே, தனி நீதிபதி உத்தரவில் தலையிட முடியாது.

அதேநேரம், பாஸ்கரனுக்கு எதிரான துறை ரீதியான நடவடிக்கையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடத்த வேண்டும். மேலும், இப்போதெல்லாம் லஞ்சம் என்பது நாகரீகமாகிவிட்டது. இதுபோன்ற கேவலமான செயல் சம்பந்தப்பட்ட துறை மற்றும் பணியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. முன்பெல்லாம் கூடுதலாக பணி செய்வதற்காக வருவாய்த்துறை, பத்திரப்பதிவு துறை, உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்சம் கேட்கப்பட்டது.

ஆனால், இப்போது அரசுத் துறைகள் அனைத்திலும் லஞ்சம் புகுந்துவிட்டது. இதற்கு காரணமே உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருப்பதுதான். லஞ்சம் தன்னுடைய வேர்களைப் பரப்பி, சமுதாயத்தை கரையான் போல் அரித்து வருகிறது என தெரிவித்தனர்.