3 வயது சிறுவனை தாயார் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம், ஜக்தியால் பகுதியை சேர்ந்த ரமாதேவிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ராமதேவியின் கணவர் ஆஞ்சநேயர் வேலை நிமித்தமான துபாய் சென்று பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் ராமதேவி அவரது இளைய மகனை தினந்தோறும் அடித்து கொடுமை படுத்தி வருகிறார். இதனை அக்கம் பக்கத்தினர் சில நாட்களாக எச்சரித்தும் அவர் கண்டு கொள்ளவில்லை. ஆகையால், ராமதேவி மகனை அடித்து கொடுமை படுத்துவதற்கு முடிவு கட்ட நினைத்தனர். அதையடுத்து அக்கம் பக்கத்தினர் மகனை அடிப்பதை விடியோவாக பதிவு செய்து காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதனை பார்த்த காவல்துறை உடனடியாக ராமதேவியின் வீட்டிற்கு சென்று குழந்தையை மீட்டு குழந்தைகள் நல வாரியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காவல்துறையினர் ராமதேவியின் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.