வீணா ஜார்ஜ்: பிரியாணி, பொரிச்ச கோழி அங்கன்வாடி உணவு பட்டியலில் சேர்க்க பரிசீலனை..!

அங்கன்வாடி சத்துணவில் பிரியாணி, பொரிச்ச கோழி வேண்டும் என சிறுவன் விடுத்த வேண்டுகோளை கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் ஏற்றுக் கொண்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த சிறுவன் சாங்குவனுக்கு பிரியாணி மிகவும் பிடித்த உணவு. ஆனால் இவன் செல்லும் அங்கன்வாடியில் அடிக்கடி உப்புமா வழங்குகின்றனர்.

இது சிறுவனுக்கு பிடிக்கவில்லை. ‘‘அங்கன்வாடியில் உப்மாவுக்கு பதில் பிரியாணியும், பொரிச்ச கோழியும் வேண்டும்’’ என சிறுவன் சாங்கு கூறியதை அவனது தாய் செல்போனில் வீடியோ எடுத்து சமூக ஊடகத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

இந்த வீடியோவை பார்த்த கேரளாவின் சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், அங்கன்வாடி உணவு பட்டியல் மறுபரிசீலனை செய்யப்பட்டு பிரியாணி சேர்க்கப்படும் என கூறியுள்ளார்.

சிறுநீர் கலந்த உணவு..! ரகசிய கேமராவில் சிக்கிய பணிப்பெண்..!

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் தொழில் அதிபர் குடும்பத்தினருக்கு கடந்த சில நாட்களாக கல்லீரல் பிரச்சனை இருந்து வந்துள்ளது. மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்ற நிலையிலும் சரியாகவில்லை.

இதனால் 8 வருடமாக வேலை செய்து வரும் சமையல் செய்யும் பணிப்பெண் சாப்பாட்டில் எதாவது கலந்து இருப்பாரோ? என்ற சந்தேகம் எழுந்தது.  இதை கண்டுபிடிப்பதற்காக செல்போனில் கேமராவை ஆன் செய்து சமையல் அறையில் மறைத்து வைத்திருந்தார்.

அப்போது சமையல் வேலையும் செய்யும் பெண் சமையல் அறையில் ஒரு பாத்திரத்தில் சிறுநீர் கழிக்கிறார். சிறிது நேரம் கழித்து அதே பாத்திரத்தில் சமையல் செய்கிறார்.

இந்த வீடியோவை பார்த்து தொழில் அதிபர் அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து தொழில் அதிபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.