“நீயெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு உயிரோடு இருப்பே..!?” சொத்துக்காக தாயை அடிக்கும் கொடூர மகள்..!

“நீயெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு உயிரோடு இருப்பே?” என்று ஏளனமாக பேசிக்கொண்டே அம்மாவின், தலைமுடியை இழுத்து அடிக்கும் கொடூர மகள் வலி தாங்க முடியாமல், என்னை விட்டுடும்மா என்று மகளை பார்த்து, இரு கைகளையும் கூப்பி கெஞ்சும் வீடியோ இணையத்தில் வெளியாகி காண்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.

அரியானா மாநிலம் ஹிசாரில் கையெடுத்து கும்பிட்ட தாய் நிர்மலாதேவி, ஒரு படுக்கையில் உட்கார்ந்து, அழுதுகொண்டு இருக்கிறார். அப்போது மகள் ரீட்டா, தன்னுடைய அம்மாவை திட்டிவிட்டு, அவரை காலிலேயே கடுமையாக தாக்குகிறார்… தாயின் அலறல்களைப் பொருட்படுத்தாமல் அவரது தொடையிலேயே அடிக்கிறார்… தன்னுடைய அம்மாவின், தலைமுடியை இழுத்து அடிக்கிறார்… இதனால் வலி தாங்க முடியாமல், அம்மா கதறி துடிக்கிறார்…

https://x.com/MeghUpdates/status/1895019024972452161

என்னை விட்டுடும்மா என்று மகளை பார்த்து, இரு கைகளையும் கூப்பி கெஞ்சுகிறார்… அப்போதும் மகள் விடுவதாக இல்லை.. “நீயெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு உயிரோடு இருப்பே?” என்று ஏளனமாக பேசிக்கொண்டே மகள் மீண்டும் அம்மாவை துன்புறுத்துகிறார். ஒருகட்டத்தில் மேலும் ஆவேசம் அடைந்த மகள், “உன்னுடைய ரத்தத்தையே குடிப்பேன்” என்று சொல்லி மீண்டும் மீண்டும் அம்மாவை அடிக்கிறார்.

இந்த கொடூர செயலில் ஈடுபட்ட அந்த பெண் மீது, அவரது சகோதரர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கின்றார்கள். அந்த புகார் மனுவில், “என்னுடைய சகோதரியான ரீட்டாவுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணமானது. ஆனால், கணவனை பிரிந்து மறுபடியும் எங்கள் வீட்டிற்கே வந்துவிட்டார்..

ஏற்கனவே, ஒரு சொத்தை ரூ.66 லட்சத்துக்கு விற்றவர், இப்போது குடும்பத்தின் பெயரிலுள்ள வீட்டை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்குமாறு, என்னுடைய அம்மாவை, என் சகோதரி ரீட்டா அடித்து துன்புறுத்துகிறார். ரீட்டாவால் என்னுடைய அம்மா பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளார்.. என்னுடைய அம்மாவை, சகோதரி சிறைபிடித்தும் வைத்திருக்கிறாள். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துகிறார்.

எனவே, என் சகோதரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பிஎன்எஸ் 2023 பிரிவுகள் 115, 127(2), 296, 351(3), மற்றும் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம், 2007 இன் பிரிவு 24 இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. ரீட்டாவை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

டொனால்ட் ட்ரம்பின் ‘பொண்ணு’ நான்..!

அமெரிக்க தேர்தல் முடிவுகள் பல்வேறு தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் இளம்பெண் ஒருவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான் தன்னுடைய தந்தை என்று கூறி பகீர் கிளப்பியுள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்வாகியுள்ள நிலையில், தேர்தல் வெற்றி எப்படி சாத்தியமானது? வெற்றிக்காக இவர் வகுத்த வியூகங்கள் என்ன? கமலா ஹாரிஸை தோற்கடிக்க எந்த மாதிரியான யுக்தியை கையில் எடுத்தார்? என்கிற கேள்விகளின் மீது விவாதங்கள் எழுந்துள்ளன.

ஆனால் இதையெல்லாம் மத்தியில் பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண், தன்னை டொனால்ட் ட்ரம்பின் தனது தந்தைக்கு கூறியுள்ளார். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் இளம்பெண், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “எனது தந்தை ட்ரம்ப் மிகவும் கடினமானவர். என்னை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என்று, தாய் இவானாவை அவர் எப்போதும் கடிந்துக்கொண்டே இருப்பார். இவானா மிகவும் கவனக்குறைவாக இருக்கிறாய். என் மகளை உன்னால் கவனிக்க முடியாது என்றும் திட்டிக் கொண்டிருப்பார்.

வெளிநாட்டினர் இங்கு வந்து என்னை பார்த்துவிட்டு போகிறார்கள். நான் இங்கு என்ன செய்துக் கொண்டிருக்கிறேன் என ஆதங்கப்படுகிறார்கள். நான் எனது தந்தையை சந்திக்க அமெரிக்கா செல்ல இருக்கிறேன்” என தெரிவித்தார். இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.