ஒரு தேங்காயை ரூ.10 லட்சத்திற்கு ஏலம் எடுத்து அசத்திய ஆசாமி..!

ஸ்ரீ தேவ் ரகுகோன்ஷெட் கோயில் ஒரு தேங்காயை ரூ.10 லட்சத்திற்கு ஏலம் எடுத்து அசத்திய ஒரு பக்தர். கோவா மாநிலம், வடக்கு கோவா மாவட்டம், பெர்னெம் நகருக்கு அருகே உள்ள கோர்காவ் கிராமத்தில் ஸ்ரீ தேவ் ரகுகோன்ஷெட் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஐந்து நாட்கள் நடைபெற்றும் வருடாந்திர திருவிழா நடைபெற்றது.

இவ்விழாவில் பெர்னெம் நகரம் மட்டுமல்லாது அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர். திருவிழாவின்போது, வாழைப்பழம், தற்பூசணி, அன்னாசி உள்ளிட்ட பழங்கள் சுவாமிக்கு படைக்கப்படுவது வழக்கம். விழாவின் முடிவில் இவை அனைத்தும் கோயில் நிர்வாகக் குழுவினரால் ஏலத்தில் விடப்படும். இதன்மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு கோயில் நிர்வாகப் பணிகள் மற்றும் சமுதாய சேவைகள் செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், .திருவிழாவின் இறுதியாக, சுவாமிக்கு படைத்த தேங்காய் ஏலத்தில் விடப்பட்டது. அப்போது, ஒரு பக்தர் அந்த புனித தேங்காயை ரூ.10 லட்சத்துக்கு வாங்கி சென்றுள்ளார். இந்தக் கோயிலில் கடந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவின்போது, புனித தேங்காய் ரூ.11 லட்சத்துக்கு ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கது.