மு.பெ.​சாமி​நாதன்: பத்​திரி​கை​யாளர்​களுக்கு சலுகை விலை​யில் வீட்டு மனை ​பட்டா..!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்களுடன் பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனைப்பட்டா வழங்குவது குறித்து பேசி வருவதாக பேரவையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மதுராந்தகம் தொகுதி அதிமுக MLA மரகதம் குமாரவேல் பேசும்போது, ‘‘பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார்.

கேள்விக்கு பதிலளித்த செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், “பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனைப்பட்டா வழங்குவது குறித்து எங்கள் துறையின் செயலர், இயக்குநர் ஆகியோர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்களுடன் பேசி வருகின்றனர். விரைவில் நல்ல சூழல் ஏற்படுத்தப்படும்’’ என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

40க்கும் மேற்பட்ட வீட்டு மனைகளை முறைகேடாக பதிவு சார்-பதிவாளர் பணியிடை நீக்கம்

விழுப்புரம் மாவட்டம் வானூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் வீட்டு மனைகளை முறைகேடாக பதிவு செய்ததாக சார்-பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று 50 பேர் போராட்டம் நடத்தினர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் வானூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் 40க்கும் மேற்பட்ட வீட்டு மனைகளை முறைகேடாக பதிவு செய்ததாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து வானூர் சார்-பதிவாளர் பத்திரப்பதிவில் முறைகேடு செய்ததாக வானூர் சார்-பதிவாளர் மணிவண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.