மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72-வது பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாட்டம்

1970-களில் மதுரையிலிருந்து சினிமா ஆசையோடு சென்னைக்கு வந்து சினிமா துறையில் அடிமட்டத்தில் இருந்து போராடி வாய்ப்புகளைப் பெற்று, படிப்படியாக ஒரே ஆண்டில் 18 திரைப்படங்களில் நடித்து உச்ச நடிகராக விஜயகாந்த் விளங்கியவர். கடந்த ஆண்டு டிசம்பர் 28 -ஆம் தேதி 71 வயதில் விஜயகாந்த் மறைந்தார். தனது கொடைத் தன்மையால் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த விஜயகாந்த்தின் 72-வது பிறந்தநாள் இன்று. விஜயகாந்த் பிறந்த இன்றைய நாள் தேமுதிக சார்பில் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், கடலூர் மாவட்டம், தேமுதிக வடலூர் நகர செயலாளர் சாகிர் உசேன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக தேமுதிக மாவட்ட மாணவரணி செயலாளர் எழிலரசன் கலந்துகொண்டு சிறப்பித்தார். பின்னர் வடலூர் நகராட்சி அலுவலகம் எதிரே ஆபத்தானபுரம் மற்றும் வெங்கடகுப்பம் ஆகிய வடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேமுதிக கழக கொடி ஏற்றப்பட்டது.

தொடர்ந்து வெங்கடக்குப்பம் அரசு பள்ளியில் பயிலும் சுமார் 100 பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் ,பேனா வழங்கப்பட்டது. மேலும் வடலூர் பேருந்து நிலையத்தின் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகமாக தேமுதிகவினர் கொண்டாடினர்.

நிகழ்வில் வடலூர் நகரத் துணைச் செயலாளர்கள் பன்னீர்செல்வம், ஏழுமலை, கந்தன் மாவட்ட பிரதிநிதி குமரவேல், வேல்முருகன் தேமுதிக நிர்வாகிகள் சுதாகர், ரவி, சுப்பு உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

வடலூரில் பல்வேறு கட்சியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் எடப்பாடிக்கு பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

கடலூர் மாவட்டம், வடலூர் பகுதியில் பல்வேறு கட்சியின் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அதிலிருந்து விலகி அதிமுக வில் தங்களை இணைத்துக் கொண்டனர். வடலூர் பகுதியில் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நபர்கள் பல்வேறு கட்சியில் இருந்து விலகி வடலூர் நகர செயலாளர் சி எஸ் பாபு தலைமையில் அதிமுக கடலூர் மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின்படி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.

வடலூர் பகுதியில் இருந்து சேலத்திற்கு வடலூர் நகர செயலாளர் சி எஸ் பாபு ஏற்பாட்டில் சென்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடிக்கு பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்த 300-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.