மாற்றுதிறனாளி குழந்தைக்கு காதொலி கருவினை ஆட்சியர் பொ. இரத்தினசாமி வழங்கல்

தமிழத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் நடைபெறுவது வழங்கமான ஒன்றாகும். இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் அளித்து வருகின்றனர்.

இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்கள் , உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். சில சமயங்களில் குறைதீர்வு கூட்டங்களில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அங்கிருக்கும் அதிகாரிகளுடன் தகராற்றில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்வதுண்டு. மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் செவித்திறன் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இலவச காதொலி கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், அரியலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடைபெற்று வருகின்றது. அந்த கூட்டத்தில் ஆட்சியர் பொ.இரத்தினசாமி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது, அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைக்கு காதொலி கருவினை மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி அவர்கள் வழங்கினார்.