உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கணவனின் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி மற்றும் மாமியார்..!

கர்நாடகாவில் மாமியாருடன் சேர்ந்து கணவரின் கழுத்தை அறுத்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியாயி ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு நகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் லோக்நாத் சிங் பெங்களூரிலுள்ள சிக்கபனாவரா பகுதியில் இருந்த ஒரு காரில் சடலம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இந்த கொலை தொடர்பாக லோக்நாத் சிங்கின் மனைவி மற்றும் மாமியாரை காவல்துறை கைது செய்தனர்.

லோக்நாத் சிங்கின் மனைவி, மாமியார் ஆகியோர் அவரது உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து மயங்கிய பிறகு அவரது கழுத்தை அறுத்து கொலை செய்ததாக காவல்துறை தெரிவித்தனர். திருமணத்தை மீறிய உறவு, சட்டவிரோத வணிக நடவடிக்கைகளில் லோக்நாத் சிங் ஈடுபட்டு வந்ததால் அவரை கொன்றதாக மனைவி வாக்குமூலம் கொடுத்துள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.

பாராசிட்டமால் மாத்திரைகளும் தரமற்றவையா..! தர பரிசோதனையில் அதிர்ச்சி..!

நாடு முழுவதும் சளி, காய்ச்சல், தலைவலி போன்று அனைவரும் பாதிக்கப்படும் பொதுவான உடல் பிரச்னைகளுக்கு பாராசிட்டமால் பரிந்துரைக்கப்படுகிறது. இந்நிலையில் பாராசிட்டமால், சர்க்கரை, உயர் ரத்த அழுத்த மாத்திரைகள் உட்பட 53-க்கும் அதிகமான மருந்துகள் இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளரின் தர சோதனையில் தோல்வியடைந்துள்ளன. இந்த மருந்துகளின் பட்டியலில் தினசரி எடுக்கும் பல மருந்துகளும் அடங்கியுள்ளன.

வைட்டமின் சி மற்றும் டி3 மாத்திரைகள் ஷெல்கால், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் சி சாப்ட்ஜெல்கள், ஆன்டிஆசிட் பேன்-டி, பாராசிட்டமால் ஐபி 500 மிகி, நீரிழிவு எதிர்ப்பு மருந்து க்ளிமிபிரைடு, உயர் ரத்த அழுத்த மருந்து டெல்மிசார்டன் மற்றும் பல அடங்கும். பாராசிட்டமால் மாத்திரைகளும் தரமற்றவையாக இந்த சோதனையில் உறுதி செய்யப்பட்டு, மக்கள் இவற்றை எடுக்கக்கூடாது என மத்திய மருந்துகள் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது.