சென்னை உயர்நீதிமன்றம்: போக்சோ வழக்கில் கைதான மத போதகருக்கு நிபந்தனை ஜாமின்.. !

போக்சோ வழக்கில் கைதான மதபோதகர் ஜான் ஜெபராஜை நிபந்தனை ஜாமினில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் துடியலூர் அருகே உள்ள ஜி.என். மில்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜான் ஜெபராஜ். கடந்த ஆண்டு மே மாதம் ஜான் ஜெபராஜ் வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் 17 வயது மற்றும் 14 வயது மதிக்கத்தக்க 2 சிறுமிகள் பங்கேற்றுள்ளனர். அந்த 2 சிறுமிகளையும் ஜான் ஜெபராஜ் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது எனவும் சிறுமிகளை அவர் மிரட்டியதாக தெரிகிறது. இதில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த விவரங்களை கூறி கண்ணீர் விட்டு அழுதார். இதனால் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளின் தரப்பில் இருந்தும் ஜான் ஜெபராஜ் மீது கோயம்புத்தூர் காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் ஜான் ஜெபராஜ் மீது காவல்துறை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஜான் ஜெபராஜை காவல்துறை தேடிச் சென்றபோது அவர் தலைமறைவாகி விட்டார். இதனால் அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஜான் ஜெபராஜின் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை என்பதால் தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு தனிப்படையினர் விரைந்தனர்.

மேலும் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கும் சென்று காவல்துறை ஜான் ஜெபராஜை தேடி வந்தனர். அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக்-அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டது. இவ்வாறு ஜான் ஜெபராஜை காவல்துறை தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் கேரள மாநில சுற்றுலா பகுதியான மூணாறில் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற காவல்துறை ஜான் ஜெபராஜை கைது செய்தனர். அதன்பின்னர் கோயம்புத்தூர் காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டார்.

ன்னர் மகளிர் காவல் நிலையத்தில் ஜான் ஜெபராஜிடம் விசாரணை நடத்தப்பட்டு பின்னர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்தனர். இதனை தொடர்ந்து ஆஜர்படுத்தப்பட்ட ஜான் ஜெபராஜுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போக்சோ வழக்கில் கைதான மதபோதகர் ஜான் ஜெபராஜை நிபந்தனை ஜாமினில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போக்சோ வழக்கில் லஞ்சம் பெற்ற மகளிர் காவல் ஆய்வாளர் மற்றும் ஏட்டு பணியிடை நீக்கம்

போக்சோ வழக்கில் 3 பேரை லஞ்சம் பெற்று விடுவித்த காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி, ஏட்டு சிவசக்தி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவியை 17 வயது சிறுவன் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அதேபோல் சிறுமியின் உறவினர் ஒருவரும் மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தாக கூறப்படுகின்றது.

இது பற்றி சிறுமி விருத்தாசலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 17 வயது சிறுவன், சிறுமியின் உறவினர், தாய் உள்பட மேலும் சிலரிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், சிறுமியை 17 வயது சிறுவன், சிறுமியின் உறவினர் ஆகிய 2 பேர் பலாத்காரம் செய்ததும், அதற்கு உடந்தையாக சிறுமியின் தாய் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து காவலர்கள் அவர்கள் 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட 3 பேரை காவலர்கள் விடுவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. விடுவித்த 3 பேரிடமும், காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி, ஏட்டு சிவசக்தி ஆகியோர் லஞ்சம் கேட்டு பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த விவகாரம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து ஜெயக்குமார் ரகசிய விசாரணை நடத்தினார். இந்நிலையில் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஏட்டும், எழுத்தருமான சிவசக்தியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நடவடிக்கை எடுத்தார். மேலும் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க விழுப்புரம் சரக காவல்துறைத் துணைத்தலைவருக்கு பரிந்துரை செய்தார்.

இதை ஏற்ற காவல்துறைத் துணைத்தலைவர் திஷா மித்தல், விருத்தாசலம் மகளிர் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இச்சம்பவம் கடலூர் மாவட்ட காவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

12 வயது மகளுக்கு தொடர்ந்து 4 வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோவில் கைது!

12 வயது மகளுக்கு தொடர்ந்து 4 வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கண்ணன் நகர் பகுதியை சேர்ந்த ஆண்டனி விக்டர் நோயல் தனியார் அக்ரிகல்ச்சர் நிறுவனத்தில் பீல்ட் ஆபீஸ் ஆக பணியாற்றி வருகிறார்.

இவர் தனது 12 வயது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுபற்றி அவரது மனைவி, தாராபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அல்லிராணி இன்று ஞாயிற்றுக்கிழமை சிறுமியிடம் விசாரணை நடத்தினார். அப்போது தந்தை தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ்,ஆண்டனி விக்டர் நோயல் கைது செய்து. தாராபுரம் குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி , சிறையில் அடைத்தனர்.

13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வழக்கில் தலைமறைவாகிய மூன்று பேரை தனிப்படை கைது..!

திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டதில் நடந்த இச்சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், 13 வயது சிறுமி ஒருவர் கடந்த 17-ஆம் தேதி இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டின் அருகே உள்ள புதர் பகுதிக்கு சென்றுள்ளார். ஆனால் 13 வயது சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் மகளை தேடி சிறுமியின் தந்தை சென்றுள்ளார்.

அப்போது கல்குவாரி அருகே மகளின் அலறல் சத்தம் கேட்க அந்த இடத்தை நோக்கி சிறுமியின் தந்தை சத்தமிட்டபடி ஓடியுள்ளார். இதனை அறிந்த அந்த மர்ம ஆசாமிகள், சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். அவர்களை பிடிக்க முடியாமல் திரும்பி வந்து மகளை பார்த்தபோது மகளின் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளார். இந்த சம்பவம் இது வெளியே தெரிந்தால் தனது குடும்பத்துக்கு அவமானம் என நினைத்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்காமல் உறவினர் வீட்டுக்கு தனது மகளை அனுப்பி வைத்துள்ளார்.

உறவினர் வீட்டில் சிறுமிக்கு உடல்நிலை சரியாகாமல் இருந்ததால் உறவினர்கள் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் சம்பவம் வேப்பங்குப்பம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி நடந்துள்ளது ஆகையால் நீங்கள் வேப்பங்குப்பம் காவல் நிலையத்திற்கு செல்லுங்கள் என கூறியுள்ளனர்.

ஆனால் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போது அவர்கள் பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு திரும்ப அனுப்பியுள்ளனர். இப்படி பள்ளிகொண்டா காவல் நிலையமும் வேப்பங்குப்பம் காவல் நிலையம் மாறி மாறி அலைக்கழித்து உள்ளனர்.

செய்வதறியாது சிறுமின் உறவினர்கள் இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணனுக்கு தகவல் தெரிந்த பின் அவர் உத்தரவின் பேரில் சிறுமியின் தந்தை வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வேலூர் அனைத்து மகளிர் காவல்துறை தேடுவதை தொடர்ந்து குற்றவாளிகள் தலைமறைவு ஆகினர்.

இதன் தொடர்ச்சியாக, துணைக் காவல் கண்காணிப்பாளர் சாரதி தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் சித்தூர் பகுதியில் பதுங்கி இருப்பது தனிப்படைக்கு தகவல் கிடைக்க சித்தூர் விரைந்த தனிப்படை சின்ராஜ், வீரப்பன், இளமதன் ஆகிய மூன்று பேரை கைது செய்து வேலூர் அனைத்து மகளிர் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனை அடுத்து, ஆய்வாளர் காஞ்சனா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றம் சுமத்தப்பட்ட மூன்று பேரையும் வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.