பொங்கல் பண்டிகை அன்று நடக்க இருந்த CA பவுண்டேசன் தேர்வு தேதி மாற்றம்

நாடு முழுவதும் பட்டய கணக்காளர் எனப்படும் CA பவுண்டேசன் தேர்வுகள் ஜனவரி 12, 14, 16 மற்றும் 18-ஆம் தேதிகளில் நடைபெறும் என ICAI அறிவித்துள்ளது. இதற்கு தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அமுமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியில் தேதியை மாற்றம் செய்ய வலியுறுத்து கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகை அன்று நடக்க இருந்த CA பவுண்டேசன் ஜனவரி 12, 16, 18, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளில் C A தேர்வு..! தேதியை மாற்ற டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!

பொங்கல் பண்டிகையின் போது C A தேர்வுகள் நடைபெறுவது தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால் அட்டவணையை மாற்றியமைக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில், 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 -ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களும் தமிழகம் முழுவதும் தைத் திருநாள் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இந்திய பட்டயக் கணக்காளர்களின் நிறுவனத்தின் (ICAI) சிஏ பவுண்டேசன் தேர்வுகள் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாட்டின் முக்கியமான தேர்வுகளில் ஒன்றாக கருதப்படும் சிஏ தேர்வுகள் தமிழகத்தில் 28 மையங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அத்தேர்வுகளுக்கு இடைவிடாது தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு, தேர்வுகள் நடைபெறும் தேதி அட்டவணை அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ஒட்டுமொத்த தமிழக மக்களின் தனிப்பெரும் திருவிழாவான பொங்கல் பண்டிகை நாட்களில் தேர்வுகள் நடைபெறுவது, கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என தேர்வர்களும், தேர்வர்களின் பெற்றோர்களும் கருதுகின்றனர். எனவே, தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏதுவாக, தேர்வர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் இரு தேர்வுகளையும் வேறு ஒரு தேதிக்கு மாற்றியமைக்க வேண்டும் என மத்திய அரசையும், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தையும் (ICAI) வலியுறுத்துகிறேன் என டிடிவி தினகரன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழர் திருநாளை முன்னிட்டு திமுக சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி திமுக அரசு சார்பில் பொங்கல் பரிசுத்தொகை மற்றும் நலத்திட்ட தொகுப்புகள் வழங்கப்படவுள்ள நிலையில், திமுக சார்பிலும் ஆங்காங்கே நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, நமது சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவல்லிக்கேணி பகுதியில் அரிசி, கரும்பு, வெல்லம், புத்தாடை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.