கோவை மாவட்டம், பொள்ளாச்சி – உடுமலை சாலை தேர்முட்டி பேருந்து நிறுத்தத்தில் ஸ்ரீ பாலமுருகன் விலாஸ் நெல்லை லாலா ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி மற்றும் மிதுன் டீ ஸ்டால் அமைத்துள்ளது. இந்த ஸ்ரீ பாலமுருகன் விலாஸ் நெல்லை லாலா ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரியில் காரசாரமான மிளகு பூந்தி, மசாலா கடலை, கடலை மிட்டாய், கை முறுக்கு, சுட சுட பக்கோடா, காப்பி, ஜிலேபி, ரஸ்குல்லா மற்றும் இனிப்பு வகைகள் அந்த பகுதி மக்களின் வரவேற்பை பெற்றது. இதனால் இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் அலை மோதுவது வழக்கம்.
இத்தனை சாதகமாக பயன்படுத்தும் இந்த ரீ பாலமுருகன் விலாஸ் நெல்லை லாலா ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரியினர் பொது மக்களைப்பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் பேருந்து நிறுத்தம் முழுவதையும் ஆக்கிரமிப்பு கொண்டனர். பேருந்து நிறுத்தம் இல்லாத காரணத்தால் பொது மக்கள் ஆபத்தான நிலையில் சாலையின் நடுவே நின்று பேருந்தில் ஏற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பொது மக்கள் சாலையின் நடுவே நின்று பேருந்தில் ஏறுவதால் எப்போது வேண்டுமானாலும் பெரிய விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே விபத்துகள் ஏற்படும் உயிர் சேதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் உயிர் சேதம் ஏற்படாமல் தடுப்பார்களா என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.