அரியலூர் வட்டத்திற்கான ஜமாபந்தி நிகழ்ச்சியில் பயனாளிக்கு உடனடி அ- பதிவேட்டை ஆட்சியர் பொ. இரத்தினசாமி வழங்கினார். அரியலூர் மாவட்டத்தில் 1434-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் இன்று முதல் அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று முதல் நாளில் அரியலூர், பொட்டவெளி, பெரிய இலுப்பையூர், இராயம்புரம், சென்னிவனம், ஓட்டக்கோவில், கோவிந்தபுரம், அமீனாபாத், அரியலூர் வடக்கு, அரியலூர் தெற்கு, வாலாஜாநகரம், கயர்லாபாத், கல்லங்குறிச்சி, கடுகூர், அயன் ஆத்தூர், நாகலூர், தேளுர், காவனூர் மற்றும் விளாங்குடி உள்ளிட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு முதியோர் உதவித்தொகை பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 260 மனுக்களை வழங்கினர்.
மேலும் இந்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு கண்டு ஒரு பயனாளிக்கு உடனடி அ- பதிவேட்டை மாவட்ட ஆட்சியர் .பொ. இரத்தினசாமி அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அரியலூர் மாவட்ட ஆட்சியரக மேலாளர் குமரையா, அரியலூர் வட்டாட்சியர் முத்துலட்சுமி, தனி வட்டாட்சியர் கண்ணன், துணை வட்டாட்சியர்கள், நில அளவை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.