குப்பை எடுக்கலையா.. இந்த குப்பையை பரிசாக வைத்துக்கொள்..!

குப்பைகள் நீண்ட நாட்களாகியும் அகற்றப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நகராட்சித் தலைவர் நித்தியா மனோகர் மற்றும் ஆணையர் பாரதிக்கு குப்பைகளை பார்சலாக பரிசளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், கருமத்தம்பட்டி நகராட்சிப் பகுதியில் வீதிகளில் குப்பைகள் குவிந்து காணப்படுகின்றன.

இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், இங்கு தூய்மைப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக கடந்த ஜனவரியில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஆனாலும், அப்பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமலேயே இருந்துள்ளது. இப்பிரச்சினை தொடர்ந்து வந்ததால் கருமத்தம்பட்டி நகராட்சிப் பொதுமக்கள் தங்கள் பகுதியிலிருந்து குப்பைகளை சேகரித்து, பரிசுப் பொருளை சுற்றிவைக்கும் காகிதத்தில் சுற்றி, நகராட்சி தலைவர் மற்றும் ஆணையருக்கு பரிசாக வழங்கியாதல் அங்கு பரபரப்பு ஏற்பட்டது