வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை வைத்தது சீமானுக்கு எங்க எரியுது..!?

விடுதலைக்காக போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனை சீமான் இழிவு படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை வைத்தது சீமானுக்கு எங்க எரியுது என தெலுங்கு முன்னேற்ற கழகம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ், தமிழன் என்பதை முன்னிருத்தி தனது அரசியல் பயணத்தை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மேற்கொண்டு வருகிறது.

அவரது ஒரே கொள்கை தமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டும் என்பதாகும். இப்படி தமிழை உயிர் மூச்சாக கொண்டு அரசியல் களத்தில் சீமான் நிற்கிறார். இதனால் சீமான் அனைத்து மேடைகளிலும் தமிழர்களை போற்றியும், பிற மொழி மக்களை தூற்றியும் பேசி வருகிறார்.

இதற்கு பிற மொழி பேசும் மக்கள் சீமானை அவ்வப்போது விமர்சித்து வருகின்றனா். மேலும் எச்சரிக்கையும் விடுத்து வருகின்றனா். இந்நிலையில் தெலுங்கர்கள் குறித்து பேசிய சீமானை, தெலுங்கு பேசும் மக்கள் தற்போது எச்சரித்துள்ள சம்பவம் நடந்துள்ளது. சீமானுக்கு எதிராக தெலுங்கு முன்னேற்ற கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில்,” விடுதலைக்காக போராடிய வீரபாண்டிய கட்டபொம்மை சீமான் இழிவுப்படுத்துவதை பொறுக்க முடியாது. சீமானின் மனைவி கயல்விழியே தெலுங்கர் தான். தெலுங்கர்கள் வேண்டாம் என்றால் சீமான் தனது மனைவி கயல்விழியை வீட்டைவிட்டு அனுப்புவாரா?. நாங்கள் எந்த சாதியை பற்றியும் தவறாக பேசியது கிடையாது. நீங்களும் மனிதன், நானும் மனிதன். நாங்கள் சீமானை பற்றி பேசுகிறோமா.?

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை வைத்தது சீமானுக்கு ஏன் எரிகிறது. சீமான் வீட்டில் தெலுங்கு பெண் இருக்கிறார். அவரை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா.? சீமான் பாஞ்சாலன்குறிச்சி படத்திற்கு நாங்கள் உதவியாக இருந்தோம். ஆனால் சீமான் மேடைக்கு மேடை தெலுங்கு மக்களை இழிவாக பேசுகிறார். இதுபோன்று சீமான் இனி செய்தால், நாங்கள் என்ன செய்வோம் என்று தெரியாது” என சரமாரி கேள்வி எழுப்பினா். மேலும் சீமானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

கஸ்தூரி கேள்வி: நான் சொன்னது என்ன, நீங்கள் திரித்து போட்ட தலைப்பு என்ன..!

சென்னை போயஸ் தோட்டத்தில் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நான் பேசிய கருத்து நான் சொன்னது என்ன, நீங்கள் திரித்து போட்ட தலைப்பு என்ன? என நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார்.

பிராமணர்களை வந்தேரிகள் எனக் கூறும் நபர்கள் தமிழர்களா என்றுதான் நான் பேசினேன். என் மாமியார் வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள்தான். என்னை தெலுங்கு பேசும் மக்கள் மருமகளாகவும் அவர்கள் வீட்டு மகளாகவும் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழும் தெலுங்கும் எனக்கு இரு கண்கள் போன்றது. பொய்யான குற்றச்சாட்டுக்கு ஓடி ஒளியும் ஆள் நான் இல்லை. எனக்கு குடிப்பழக்கமே கிடையாது. என்னை ஓசி குடி என்கிறார்கள், குடிகாரி என சித்தரிக்கிறார்கள். எத்தனையோ பொய்களை பார்த்துவிட்டேன் என கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கோரி நேற்றைய தினம் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில்  ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசுகையில், நான் ஹைதராபாத்துக்கு குடிபெயர்ந்து 4 வருஷம் ஆகுது.. இங்க சினிமாவை விடுங்க.. தொலைக்காட்சிகளில் நடுவர் ஆக கூட எனக்கு வாய்ப்பு தரக் கூடாது என மேலிடத்தில் இருந்து பிரஷர் தருவதாக சொல்கின்றனர். சுதந்திரப் போராட்டத்தில் உயிரைக் கொடுத்தவர்கள் பெரும்பாலானவர்கள் அந்தணர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ் அந்தணர்கள். தமிழர்கள். ஆரிய வந்தேறி.. ஆரிய வந்தேறி என்கிறார்கள்.. யார் ஆரிய வந்தேறி? கைபர் போலன் வழியாக பல மதத்தினர் வந்தாங்க..

அதை எல்லாம் பேச ஆரம்பிச்சா உங்க ஓட்டுதானே குறையும்.. 4,000 வருஷத்துக்கு முன்னாடி வந்ததாக சொல்லப்படுவதைப் பற்றி சொல்றீங்களே.. ஆரியர்கள் இங்கே வருகை தந்த போது ஷத்ரியர்கள் இடத்தில் வன்னியர்கள் இணைந்து கொண்டார்களோ, வைசியர் பாகுபாட்டில் செட்டியார்கள், முதலியார்கள், வேளாளர்கள் இணைந்து கொண்டார்களோ கோவில் பணிகளைச் செய்கிறவர்களில் சிவாச்சாரியார்கள், ஐயர்கள், ஐயங்கார்கள் , பண்டாரங்கள் போன்றவர்கள் இணைந்து கொண்டார்கள்.

300 வருஷம் முன்னாடி ஒரு ராஜாவுக்கு கூட சேர்த்துகிட்ட அந்தப்புர மகளிரோ சேவைகள் செய்ய வந்தவர்கள் எல்லாம் தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? நீங்கள் யார் தமிழர்கள்?. அதனால்தானே தமிழர் முன்னேற்றக் கழகம்னு பெயர் வைக்க முடியமலை.. திராவிடர்கள் பெயர் கண்டுபிடிச்சீங்க என கஸ்தூரி பேசினார்.

இந்நிலையில் இவருடைய பேச்சுக்கு தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வீடியோ மூலம் கண்டனம் தெரிவித்து தனது கருத்தை திரும்ப பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அது போல் பாஜக அமர் பிரசாத் ரெட்டியும், நடிகை கஸ்தூரி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இப்படியாக கஸ்தூரியின் பேச்சுக்கு தொடர்ந்து எதிர்ப்பு வந்த நிலையில் அவரது தனது ட்விட்டர் பக்கத்தில் கூட இது பொய். நான் சொன்னது என்ன, நீங்கள் திரித்து போட்ட தலைப்பு என்ன? தமிழகத்தில் வந்தேறி தெலுங்கர் சிலர் தமிழினம் என்று சொல்லிக் கொண்டு பிராமணரை தமிழரில்லை என்கிறார்கள் என சில ஊடகங்களில் போட்ட செய்தியை சுட்டிக் காட்டி கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.