யாரோ ஒருவர் வாங்கிய கடனுக்கு சிபில் ஸ்கோரில் வைத்த இந்தியன் வங்கி… 3 லட்சம் அபராதம் வாங்கிய பலே ஆட்டோகாரர்

ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் கேட்டு ஆட்டோ ஓட்டுநர் வங்கிக்கு போனால் யாரோ ஒருவர் வாங்கிய கடனுக்கு இந்தியன் வங்கி சிபில் ஸ்கோரில் கை வைக்க ஆட்டோ ஓட்டுநர் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு ஓட இந்தியன் வங்கியிடம் 3 லட்சம் கடனிலாமல் வாங்க போகிறார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பத்மசாலவர் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் மகன் ஆட்டோ ஓட்டுநர் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காந்தி சாலையில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் 2001 முதல் சேமிப்பு கணக்கு வைத்து இருக்கிறார். இவர், வேறொரு வங்கியில் புதிய ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் லோன் கேட்டு 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 14-ஆம் தேதி அன்று அணுகி இருக்கிறார். ஆனால் அப்போது அவரது சிபில் ஸ்கோர் குறைவாக இருப்பதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிபில் ஸ்கோர் குறைந்ததற்கு என்ன காரணம் என்று வங்கியில் விசாரித்த போது, அவர் சேமிப்பு கணக்கு வைத்துள்ள இந்தியன் வங்கி கிளையில் 2002-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதியில் மேலவாசல் இன்ப ராஜ் என்பவர் வாங்கிய ரூ.19 ஆயிரம் கடனுக்கு, நாராயணன் ஜாமீன்தாரராக கையெழுத்து போட்டதாகவும், அந்த கடனை இன்பராஜ் செலுத்தாததால் தற்போது அதன் நிலுவைத் தொகை ரூ.42 ஆயிரமாக உள்ளதாகவும், அதைக் கட்ட வேண்டிய பொறுப்பு நாராயணனுக்கு உண்டு என்று கூறினார்களாம். இதனால் தான் நாராயணனின் சிபில் ஸ்கோர் குறைந்துள்ளது என்றும் அந்த தொகையை செலுத்தினால் மட்டுமே அவரது சிபில் ஸ்கோர் உயரும் என்று இந்தியன் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதை கேட்ட நாராயணன், தான் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவில்லை என்று திட்டவட்டமாக மறுத்தார். மேலும் வங்கி அதிகாரிகள் மீது கடந்த ஜனவரி 3-ஆம் தேதி அன்று திருவாரூர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2002-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதியில் மேலவாசல் இன்பராஜ் என்பவர் வாங்கிய 19 ஆயிரம் ரூபாய் கடன் தொடர்பான இந்தியன் வங்கியின் கடிதங்களை ஆராய்ந்து பார்த்தது.

அதில் ஜமீன்தாரராக கையொப்பமிட்டது வேறு ஒரு என்.சீனிவாசன் என்பதும் அந்த சீனிவாசனின் விவரங்களுக்கு பதிலாக இந்த ஆட்டோ ஓட்டுநரான சீனிவாசன் மகன் நாராயணனின் ஆதார், பான் கார்டு உள்ளிட்ட விபரங்களை சிவில் நிறுவனத்துக்கு வங்கி பகிர்ந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இதனால், நாராயணனுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு கடனில் அவர் ஜாமீன் கையெழுத்து போட்டதாக சிபில் நிறுவனத்துக்கு தெரிவித்துவிட்டு, நீதிமன்றத்தில் அவ்வாறு எதுவும் செய்யவில்லை என்று பொய்யான தகவலைக் கூறியதாக இந்தியன் வங்கி நிர்வாகம் மீது புகார் எழுந்தது.

என் நாரயாணணுக்க பதில் சீ.நாராயணனின் சிபில் ஸ்கோரை இந்தியன் வங்கி குறைந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் சி நாராயணனுக்கு 30 நாட்களுக்குள் நஷ்ட ஈடாக ரூ.3 லட்சம், வழக்கு செலவுத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது சுற்று வட்டார பகுதிகளில் பேசுபொருளாக மாறியுள்ளது.

மத்திய அரசால் சிறந்த காவல் நிலையமாக முத்துப்பேட்டை காவல் நிலையம் தேர்வு..!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம்,முத்துப்பேட்டை காவல் நிலையம் இந்தியாவிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சம் வழங்கிய சான்றிதழை திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் M.ஜோசி நிர்மல் குமார் அவர்கள் முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் A. கழனியப்பன் அவர்களிடம் வழங்கி வாழ்த்தினார்.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் சார்பில் 2024 -ஆம் ஆண்டிற்கான இந்தியாவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில், வருடாந்திர தரவரிசையில் சிறந்த காவல் நிலையமாக தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காவல் நிலையத்தை மத்திய அரசு தேர்வு செய்து அங்கீகரித்துள்ளது.

இந்நிலையில் நேற்று முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு நேரடியாக வந்த திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் M. ஜோசி நிர்மல் குமார், அதற்கான சான்றிதழை முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் A. கழனியப்பன் , உதவி காவல் ஆய்வாளர் மோகன்ராஜ் ஆகியோரிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் ஜியாவுல் ஹக் அவர்கள், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் அவர்கள் மற்றும் முத்துப்பேட்டை துணைக்காவல் கண்காணிப்பாளர் M. ஆனந்த் அவர்கள், திருவாரூர் மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூட துணைக்காவல் கண்காணிப்பாளர் A.பிலிப் பிராங்களின் கென்னடி அவர்கள் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் P.ராஜா ஆகியோர் உடனிருந்தார்கள்.

இந்த நிகழ்வில் பேசிய திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் M.ஜோசி நிர்மல் குமார், ‘இன்றியமையாத காவல்துறை பணியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அனைத்தும் முறையாக கையாண்டு சட்டம், ஒழுங்கை பராமரிப்பதில் காவல் துறையின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள், சேவைக்கான அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத முயற்சிகளுக்கும் பாராட்டுக்கள்’ என தெரிவித்தார்.