Rahul Gandhi: “Happy Birthday, @thiruma ji..! உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் அமைதி வாழ்த்துக்கள்..!

ஆகஸ்ட் 17 திருமாவளவன் பிறந்தநாளையொட்டி, சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமையகத்தில் நேற்று காலை முதலே திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவிக்க நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். அவரது தாயார் பெரியம்மாள் திருமாவளவனுக்கு பரிசு கொடுத்து வாழ்த்தினார்.

மேலும் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி நேற்று தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையடுத்து இன்று ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட விசிக சார்பில் மாலை 4 மணியளவில் புதுச்சேரி அருகேயுள்ள சங்கமித்ரா அரங்கில் விழா நடைபெறவுள்ளது. விழாவின் நிறைவாக கட்சியின் தலைவர் திருமாவளவன் உரையாற்றுகிறார்.

இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி அவரது எக்ஸ் பக்கத்தில், “பிறந்தநாள் வாழ்த்துக்கள், திருமாவளவன் ஜி! உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் அமைதி வாழ்த்துக்கள்.

நமது நாட்டின் பன்மைத்துவ மற்றும் கூட்டாட்சித் தன்மையைப் பாதுகாப்பதற்கும், நமது மக்கள் அனைவருக்கும் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநிறுத்துவதற்கும் பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் வேரூன்றிய நமது பிணைப்பு, தொடர்ந்து வலுவடையும் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்: “தலித் ஒருவரால் ஒரு மாநிலத்தின் முதல்வராக முடியாது..!”

பட்டியலின சமூகத்தின் இடஒதுக்கீட்டு உரிமையை பறிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்தும், கிரீமிலேயர் குறித்து நீதிபதிகள் கூறிய கருத்துகளைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில், “வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்ட உடனே, அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, வேறெந்த சமூகத்தினரைப் பற்றியும் கவலைப்படாமல், யாருடனும் கலந்து பேசாமல், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல், அவருடைய அரசியல் லாபத்துக்காக, அவருடைய கையில் அதிகாரம் இருந்ததால், உடனடியாக அறிவித்தார். பின்னர், அந்த உள்ஒதுக்கீடு சட்டப்படியான சிக்கலை சந்தித்து இன்று தேங்கி நிற்கிறது.

மாநில அரசுகளின் கைகளில் உள்ஒதுக்கீடு வழங்கும் அதிகாரத்தை ஒப்படைக்கக் கூடாது என்ற கவலையும் அச்சமும் அம்பேத்கருக்கு இருந்தது. எனவே, பட்டியல் சாதிகளை எல்லாம், ஒரு பின் இணைப்பாக அரசியலமைப்புச் சட்டத்துக்குள் ஒரு பட்டியலாக இணைத்தவர் அம்பேத்கர்தான். பின்னர், அது பொருத்தமாக இல்லை என்று தெரிந்ததால், அதற்காக சட்டப்பிரிவு 341 மற்றும் 342 ஆகிய இரு உறுப்புகளை இணைத்தார்.

341 – பட்டியல் சமூகத்தைப் பற்றியது. 342 பழங்குடியின சமூகத்தைப் பற்றியது. இவர்களைப் பற்றி எந்த முடிவுகளை எடுத்தாலும், நாடாளுமன்றத்தில் விவாதித்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடுதான் முடிவெடுக்க வேண்டும் என்று கொண்டு வந்தவர் அம்பேத்கர்.

உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி முதல்வராக வந்தது விதிவிலக்கான ஒன்று. எந்தச் சூழலிலும் எந்தக் காலத்திலும் ஒரு தலித், ஒரு மாநிலத்தின் முதல்வராக முடியாது. இதை விவாதித்தால், நாடாளுமன்றத்துடன் ஏன் இந்த அதிகாரம் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். நமக்கு திமுக அரசு மீது நம்பிக்கை இருக்கிறது சரி. ஆனால், திமுக அரசு என்பது நிலையானது அல்ல. மாநில அரசுதான் நிலையானது. கட்சிகள் வரும், போகும். அது வேறு. சமூக நீதியின் மீது நம்பிக்கை உள்ளவர்கள், வருவார்கள் போவார்கள், அது வேறு. மாநில அரசு எந்தச் சூழலிலும் ஒரு தலித்தை முதல்வராக ஏற்றுக்கொள்கிற நிலை இங்கே இல்லை, வர முடியாது.

இந்தியாவிலேயே அதிகமான மக்கள் தொகை கொண்ட பட்டியல் சமூகம் பஞ்சாப்பில்தான் இருக்கிறது. அங்கு எஸ்சி, எஸ்டியின் மொத்த மக்கள் தொகை 32 சதவீதம். 32 சதவீதம் உள்ள ஒரு சமூகம் தனித்து ஓர் அரசியல் சக்தியாக எழுச்சி பெற்றால், அவர்கள்தான் நிரந்தர முதல்வர்களாக இருக்க முடியும். ஆனால், முன்கூட்டியே 1975-களிலேயே வகைப்படுத்துதல் என்ற பெயரில், உடைத்துவிட்டார்கள்,” என திருமாவளவன் பேசினார்.

நடிகை விந்தியா: திருமாவளவன் கோயிலைப் பற்றி கேவலமாக பேசுகிறார்..! தேர்தல் வந்தால் குனிந்து கும்பிடு போடுகிறார்..!

சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் நடிகர் விந்தியா பரங்கிப்பேட்டை அருகே பி.முட்லூர் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது, 2 சீட்டுக்காக மக்களை உசுப்பேத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறார். இத்தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன். கோயிலைப் பற்றி கேவலமாக பேசுகிறார். தேர்தல் வந்தால் குனிந்து கும்பிடு போடுகிறார்.

தமிழகத்தில் தாமரை எப்படி மலரக் கூடாதோ அது மாதிரி திமுக கூட்டணியும் வளரக்கூடாது. திமுகவுக்கும், பாஜகவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.திமுகவை எதிர்த்து கமல்ஹாசன் கட்சி தொடங்கினார். இப்போது ஸ்டாலின் மகன் உதயநிதியிடம் கைகட்டி நிற்கிறார். ஷேக்ஸ்பியர் முதல் சிலப்பதிகாரம் வரை கரைத்துக் குடித்த வைகோ, திமுகவை உடைத்து மதிமுகவை உருவாக்கினார் என நடிகை விந்தியா பேசினார்.

திருமாவளவன்: அண்ணாமலை அரசியல் காமெடியன்…!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதன்வரிசையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, திருமாவளவன் பிரச்சாரம் செய்தார்.

உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திண்டிவனம் ஆகிய இடங்களில் அவர் பேசுகையில், மீண்டும் மக்களவையில் ரவிக் குமாரின் குரல் ஒலிக்க வேண்டும். ரவிக் குமாரின் வெற்றி முதல்வருக்கு கிடைக்கும் வெற்றி; இண்டியா கூட்டணிக்கு கிடைக்கும் வெற்றி. கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்துள்ளது. விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு பறந்து சென்றதுதான் மோடியின் சாதனை. அம்பானி, அதானியை உலக பணக்காரர்கள் வரிசையில் முன்னிலையில் கொண்டு வந்தவர் பிரதமர் மோடி. ஆனால் மக்களுக்காக என்ன செய்தார்?

பாஜக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும். தொடர்ந்தால் பேராபத்தை நாட்டுமக்கள் சந்திக்க வேண்டி இருக்கும். அரசியல் சட்டத்தை நீர்த்துபோக செய்துவிடுவார்கள். அண்ணாமலை நாள்தோறும் பொய் பேசி வருகிறார். அரசியல் காமெடியன் அண்ணாமலை. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவை காப்பற்ற வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நோக்கத்தை நிறைவேற்ற 40 தொகுதிகளிலும் வெற்றி பெறவேண்டும். அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக கட்சிகளுக்கு இந்த தேர்தலில் தக்க பாடத்தை கொடுக்க வேண்டும் என திருமாவளவன் பேசினார்.

“பெரியார், அம்பேத்கர் கருத்துகளை வளப்படுத்துபவர்” திருமாவளவன்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் தனது ட்விட்டர் பதிவில், “இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் – புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.