டி.டி.வி. தினகரன்: திமுகவை வீழ்த்த வேண்டும் என நினைப்பவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம்..!

திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கிற அனைத்து கட்சிகளும் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும். திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதராமல் கிடைக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமமுக சார்பில் உழைப்பாளர் தின பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய டிடிவி தினகரன், அமமுக என்றைக்கும் யாரிடமும் மண்டியிடாமல், சமரசம் செய்யாமல் இலக்கை நோக்கி பயணித்து வருகிறோம். “புலி பதுங்குவது பாய்வதற்குதான்.நான் அமைதியானவன், பொறுமையானவன் தான். அதே நேரத்தில் அழுத்தமானவன். எதற்கும் அஞ்சாமல், யாருக்கும் மண்டியிடாமல், இலக்கை அடையும் வரை தொடர்ந்து உறுதியாக செயல்படுவேன்.

தமிழகத்தை வாட்டி வதைத்துக் கொண்டுள்ள தீய சக்தி திமுகவை வீழ்த்துவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக வந்துள்ளது ஏற்றுக்கொள்ள மறுத்ததால் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது.என்று சொல்கிறார்கள். தீய சக்தி திமுகவை நோக்கம் தான் நமது தலையாய நோக்கம். அதனை நிறைவேற்ற 2021 சட்டமன்றத் தேர்தலிலேயே அமமுக தியாகங்கள் செய்யத் தயாராக இருந்தது. ஆனால், அதனை சிலர்.

எங்கள் கூட்டணி பலப்படுகிறது. அதிமுக மட்டுமல்ல திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கிற அனைத்து கட்சிகளும் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும். திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதராமல் கிடைக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டால் தான் உண்மையான அம்மாவின் ஆட்சியை உருவாக்க முடியும்.

2024 மக்களவைத் தேர்தலில் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதற்காக தேஜகூவில் இணைந்தோம். நிபந்தனையற்ற ஆதரவு தருவதாகவும் தெரிவித்தோம். தீயசக்தி திமுகவை வீழ்த்த கூட்டணியில் தொடர்கிறோம் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.