நீ மட்டும் இரண்டு மொழி படிப்பாய்.. நான் 3 மொழி படிக்க வேண்டுமா? நீ ஏன் ஆங்கிலம் கற்கவில்லை. உனக்கு வரவில்லை. உனக்கு பேச முடியவில்லை. உனக்கு ஆங்கிலம் அந்நிய மொழி என்கிறாய். எனக்கு இந்தியும் அந்நிய மொழிதான். எனக்கு அது என்ன சித்தி மொழியா? அதற்காக நான் இந்தி பேச வேண்டுமா? என ஆன்மீக பேச்சாளர் சுகி. சிவம் இந்தி மும்மொழி கொள்கைக்கு எதிராக பேசி உள்ளார்.
தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. முக்கியமாக ஆளும் திமுக இதை கடுமையாக எதிர்த்து வருகிறது. மும்மொழி கொள்கையை கொண்டு வர இந்த திட்டம் துடிப்பதால் இதற்கு எதிரியாக கடும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. முக்கியமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதை கடுமையாக எதிர்த்து வருகிறார்.
தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம்ஸ்ரீ திட்டங்களில் கையெழுத்து போடாததால் தமிழ்நாடு ரூ.5 ஆயிரம் கோடி நிதியை இழக்கும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று கடிதம் எழுதி இருந்தார். இருந்தாலும் தமிழக அரசு தரப்பில், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று பதில் கடிதம் அமைச்சர் அன்பில் மகேஷ் மூலமாக அனுப்பப்பட்டது.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம். எங்கள் மொழியை அழிக்க ஆதிக்கம் செய்ய நினைத்தால் விட மாட்டோம். மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்து போட மாட்டோம், என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் வைத்துள்ளார்.
இந்நிலையில் மும்மொழி கொள்கைக்கு எதிராக பேசிய ஆன்மீக பேச்சாளர் சுகி. சிவம், இப்போது சிலர் தமிழ்நாட்டில் புதிதாக ஆரம்பித்து இருக்கிறார்கள். நாங்கள் இந்தி கற்றுக்கொள்ள முடியவில்லை. எங்களை தடுத்துவிட்டனர். நாங்கள் இந்தி கற்றுக்கொண்டால் பெரிதாக சாதித்து இருப்போம். இதை செய்திருப்போம்.. அதை செய்திருப்போம்.. வானத்தில் போய் கொடி ஏற்றி இருப்போம்.. எங்களை ஏமாற்றி விட்டார்கள்.. எங்களின் 2 தலைமுறை பாதிக்கப்பட்டுவிட்டது என்றெல்லாம் சொல்கிறார்கள்.
ஏன் வடக்கில் உள்ளவர்கள் ஆங்கிலம் படிக்கவில்லை. தாய் மொழியை படியுங்கள்.. ஆங்கிலம் படியுங்கள். எல்லாரும் இதை படிக்கட்டும். நீ தாய் மொழியில் படித்துவிட்டு மேலே வருவாய்.. உனக்கு அது எளிது.. நான் உன் தாய் மொழியை கற்றுக்கொண்டு மேலே வர வேண்டுமா? நீ மட்டும் இரண்டு மொழி படிப்பாய்.. நான் 3 மொழி படிக்க வேண்டுமா? உனக்கு ஆங்கிலம் அந்நிய மொழி என்கிறாய். எனக்கு இந்தியும் அந்நிய மொழிதான். எனக்கு அது என்ன சித்தி மொழியா? நாங்கள் இந்தி கற்றுக்கொள்ள முடியவில்லை.
நாங்கள் இந்தி கற்றுக்கொண்டால் பெரிதாக சாதித்து இருப்போம் என்றெல்லாம் சொல்கிறார்கள். நீ ஏன் ஆங்கிலம் கற்கவில்லை. உனக்கு வரவில்லை. உனக்கு பேச முடியவில்லை. அதற்காக நான் இந்தி பேச வேண்டுமா? எனக்கு படிக்க வேண்டும் என்றால் எந்த மொழி வேண்டுமானாலும் நான் படிப்பேன். எனக்கு கட்டாயம் ஆக்காதே.. உனக்கு ஆங்கிலம் வரவில்லை. வடக்கே அவர்கள் பேசுவதை கேளுங்கள். ஆங்கிலம் அவர்களால் பேச முடியாது. அதற்காக நான் இந்தி கற்றுக்கொண்டு பேச வேண்டுமா? என சுகி. சிவம் தெரிவித்தார்.