காவல்துறையினரின் அலட்சியத்தால் சிவகங்கையில் கொடூரம்..! பட்டியலின மாணவன் கை வெட்டு ..!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் காவல் நிலையத்தில் புல்லட் வாகனம் அடித்து உடைத்து சம்பவம் தொடர்பாக இருவர் மீது புகார் உள்ள நிலையில் கல்லூரி மாணவன் புல்லட் வாகனத்தில் வீட்டை நோக்கி வரும்போது வழிமறித்து, கையை வெட்டிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேளக்காடாவர் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின சமூக ராமன் – செல்லம்மா தம்பதியினர் மகன் அய்யாசாமி சிவகங்கையில் உள்ள அரசு கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். அய்யாசாமியின் தந்தை சிறுவயதிலேயே உயிரிழந்ததன் காரணமாக, அவரின் தாய் செல்லம்மா, அய்யாசாமியின் சித்தப்பா பூமிநாதனை திருமணம் செய்து ஒரே குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் உழைப்பால் பொருளாதார ரீதியாக ஓர் அளவிற்கு முன்னேறிய பூமிநாதன், கடந்த ஆண்டு புல்லட் வாகனத்தை வாங்கி இருக்கிறார்.

இது அங்கிருந்த சில முன்னேறிய சாதி இளைஞர்களுக்கு பூமிநாதனுக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்த நிலையில், புல்லட் வாகனம் வாங்கியதால் கூடுதல் விரக்தியடைந்து இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் பூமிநாதனின் புல்லட் வாகனத்தை 2 இளைஞர்கள் சேர்ந்து அடித்து உடைத்து இருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பூமிநாதன் மற்றும் அய்யாசாமி இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், நேற்று கல்லூரியை முடித்து அய்யாசாமி புல்லட் வாகனத்தில் வீட்டை நோக்கி வந்து இருக்கிறார். அப்போது 3 இளைஞர்கள் அவரை வழிமறித்து, பட்டியலின ஜாதியில் பிறந்து எப்படி இந்த புல்லட் வண்டியை ஓட்டலாம், கை இருந்தால் தானே புல்லட் ஓட்டுவ” என்று கூறி அய்யாசாமியின் கையை வெட்டி இருக்கின்றனர்.

அங்கிருந்து தப்பியோடிய அய்யாசாமி, விரைவாக பெற்றோரிடம் சென்றுள்ளார். அதன்பின் அவருக்கு உடனடியாக மருத்துவமனை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அய்யாசாமிக்கு வெட்டப்பட்ட கையை சேர்க்கும் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. இதனிடையே அய்யாசாமியின் வீட்டிற்கு சென்ற அந்த இளைஞர்கள், வீட்டை அடித்து உடைத்து சூறையாடியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிப்காட் காவல்துறையினர் சம்பவத்தில் ஈடுபட்ட மாற்று சமூகத்தைச் சேர்ந்த வல்லரசு, ஆதி ஈஸ்வரன் மற்றும் வினோத் ஆகிய 3 பேரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சிவகங்கை கொடூரம் பட்டியலின ஜாதியில் பிறந்து எப்படி இந்த புல்லட் வண்டியை ஓட்டலாம்..!

“பட்டியலினத்தில் பிறந்து எப்படி இந்த புல்லட் வண்டியை ஓட்டலாம், கை இருந்தால் தானே புல்லட் ஓட்டுவ” என கூறி 3 பேர் கொண்ட கும்பல் கையை வெட்டியுதுடன், புல்லட் வாகனத்தை அடித்து உடைத்து சூறையாடிய இருக்கின்றனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேளக்காடாவர் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின சமூக ராமன் – செல்லம்மா தம்பதியினர் மகன் அய்யாசாமி சிவகங்கையில் உள்ள அரசு கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

அய்யாசாமியின் தந்தை சிறுவயதிலேயே உயிரிழந்ததன் காரணமாக, அவரின் தாய் செல்லம்மா, அய்யாசாமியின் சித்தப்பா பூமிநாதனை திருமணம் செய்து ஒரே குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் உழைப்பால் பொருளாதார ரீதியாக ஓர் அளவிற்கு முன்னேறிய பூமிநாதன், கடந்த ஆண்டு புல்லட் வாகனத்தை வாங்கி இருக்கிறார்.

இது அங்கிருந்த சில முன்னேறிய சாதி இளைஞர்களுக்கு பூமிநாதனுக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்த நிலையில், புல்லட் வாகனம் வாங்கியதால் கூடுதல் விரக்தியடைந்து இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் பூமிநாதனின் புல்லட் வாகனத்தை 2 இளைஞர்கள் சேர்ந்து அடித்து உடைத்து இருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பூமிநாதன் மற்றும் அய்யாசாமி இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், நேற்று கல்லூரியை முடித்து அய்யாசாமி புல்லட் வாகனத்தில் வீட்டை நோக்கி வந்து இருக்கிறார். அப்போது 3 இளைஞர்கள் அவரை வழிமறித்து, பட்டியலின ஜாதியில் பிறந்து எப்படி இந்த புல்லட் வண்டியை ஓட்டலாம், கை இருந்தால் தானே புல்லட் ஓட்டுவ” என்று கூறி அய்யாசாமியின் கையை வெட்டி இருக்கின்றனர்.

அங்கிருந்து தப்பியோடிய அய்யாசாமி, விரைவாக பெற்றோரிடம் சென்றுள்ளார். அதன்பின் அவருக்கு உடனடியாக மருத்துவமனை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அய்யாசாமிக்கு வெட்டப்பட்ட கையை சேர்க்கும் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. இதனிடையே அய்யாசாமியின் வீட்டிற்கு சென்ற அந்த இளைஞர்கள், வீட்டை அடித்து உடைத்து சூறையாடியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிப்காட் காவல்துறையினர் சம்பவத்தில் ஈடுபட்ட மாற்று சமூகத்தைச் சேர்ந்த வல்லரசு, ஆதி ஈஸ்வரன் மற்றும் வினோத் ஆகிய 3 பேரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மளிகை கடையில் தினமும் போனி செய்யும் மாடுகள்..! இந்த காலத்தில் இப்படியும் ஒரு ஆளா..!

சிவகங்கையில் கடையை எப்போ திறப்போம்னு காத்திருக்கும் என காத்திருந்த மாடுகள் கதவை திறந்ததுமே அதுக்கு தேவையானதை சாப்பிட்டு விட்டு, எந்த பொருளையும் சேதப்படுத்தாம அதுவே போயிடும். மளிகை கடையில் தினமும் முதல் ஆளாக போனி செய்யும் மாடுகள்.

ரூ.2.35 கோடி பணத்தை ஆட்டைய போட்ட பெண் வருவாய் ஆய்வாளர் கணவருடன் கைது..!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக சீதாப்பிரியா பணி புரிந்து வருகிறார். இவர், கடந்த 2017 முதல் 2023 வரை ஆதிதிராவிடர் விடுதி மாணவ, மாணவிகளுக்கு அரசு ஒதுக்கிய பணத்தை கையாடல் செய்ததாக ஆட்சியருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து ஆட்சியர் நடத்திய விசாரணையில் சீதாப்பிரியா ரூ.9 லட்சம் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ரூ.5 லட்சத்தை சீதாப்பிரியா திரும்ப செலுத்தினார்.

இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை சிறப்பு தாசில்தார் உமாமகேஸ்வரி, சிவகங்கை நகர் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் மோசடி குறித்து தொடர் விசாரணை நடத்த ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் தனிக்குழு அமைக்கப்பட்டது.

இதில் சீதாப்பிரியா ரூ.2 கோடியே 35 லட்சத்து 36 ஆயிரத்து 468 வரை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்தை வங்கி கணக்கின் மூலம் சீதாப்பிரியாவின் கணவர் ராம்குமார் உள்பட 4 பேரின் வங்கி கணக்குக்கு அனுப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை மாவட்ட குற்றப்பிரிவிற்கு மாற்றி எஸ்பி அரவிந்த் உத்தரவிட்டார்.

மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை முதற்கட்டமாக நேற்று சீதாப்பிரியா மற்றும் அவரது கணவர் ராம்குமாரை கைது செய்தனர். இந்த பணமோசடி வழக்கில் மேலும் பல அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுவதால் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதயாத்திரையில்.. அண்ணாமலையிடம் அளித்த மனு.. கொஞ்ச நேரத்தில் பார்த்தால் ரோட்டில்..

தமிழ்நாட்டில் 2024 லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தொடங்கி வைத்துவிட்டார் என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில், தற்போது பாஜக தலைவர் அண்ணாமலை த ‘என் மண் என் மக்கள் யாத்திரை’ கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள உள்ளார். பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சியை வலிமைபடுத்தியது போல அண்ணாமலையின் ராமேஸ்வரம் முதல் சென்னை வரை பாதயாத்திரை பாஜகவை தமிழ்நாட்டில் வலிமைப்படுத்தும் என்று பாஜக நம்பிக்கை கொண்டுள்ளார்.

அண்ணாமலை செல்லும் வழியில் அவர் ஓய்வு எடுக்க இந்த கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இடை இடையே அவர் உறங்க, சாப்பிட இந்த கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. காவி நிறத்தில் பாஜகவின் சாதனைகளை பட்டியலிட்டு கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. காலை 6 மணிக்கெல்லாம் பயணத்தை துவக்குவார்கள். திருச்செந்தூரை நோக்கி ஒரு காலத்தில் கலைஞர் நடந்த நடைப்பயணமும் சரி, வைகோ நடந்த நடைப்பயணமும் சரி, கடந்த ஆண்டு ராகுல் நடந்த நடைப்பயணம் சரி… காலை 6 மணிக்கெல்லாம் நடக்கத் துவங்கினர். இடையில் காலை உணவினை போகும் இடத்திலேயே முடித்துக் கொள்வர். பிறகு மீண்டும் நடைப்பயணம் தொடங்கும்.

ஆனால் அண்ணாமலை பெரும்பாலும் கேரவனிலேயே பயணம் செய்கிறார். தினமும் காலையில் 9:30-க்குத்தான் பயணத்துக்கே ரெடியாகி 2 கிலோமீட்டர் நடக்கிறார். பிறகு சட்டென்று கேரவனில் ஏறிக்கொள்கிறார். இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலையிடம் அவரின் நடைப்பயணத்தின் போது கொடுக்கப்பட்ட மனு சிறிது நேரத்தில் சாலை ஓரத்தில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ரமா என்ற பெண், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து தனியார் நிறுவனங்களில் வாங்கிய கடன்களை கட்ட வழி இல்லாததால், அவற்றை ரத்து செய்ய ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளித்து உள்ளார். அண்ணாமலை அங்கிருந்து நகர்ந்த சில நிமிடங்களில் அந்த மனு சாலையில் கிடந்துள்ளதை அவர் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.