தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள தெற்கு அமுத்துன்னாங்குடியை சேர்ந்த அர்ச்சுனை பாண்டியன். இவர் தனது வீட்டு முன்பு பொதுப்பாதையில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி கண்ணில் கருப்பு துணி கட்டியவாறு, பட்டை நாமம் போட்டு கையில் கோரிக்கை அட்டையுடன் சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்துக்கு வந்தார்.
அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி சிறிது நேரம் போராட்டம் நடத்தினார். பின்னர் தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனுவை கொடுக்க சென்ற போது, அதிகாரிகள் யாரும் இல்லாததால், மனுவை பெட்டியில் போட்டார் இதனால் சிறிதுநேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படாது.