மதுரை ஆட்சியர் சங்கீதா அவர்களை மாற்ற கோரி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு விசிக போராட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா அவர்கள் தமிழக அரசு உடனே மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு நடத்தினர். நடத்தும் ஊர்வலத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சியை தடுப்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோஷம் எழுப்பினர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிட்டம் பட்டியில் சுங்கச்சாவடி ஒன்று செயல்பட்டு வருகிறது. சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த சுங்கச்சாவடியை கடந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் அரச முத்துப்பாண்டியன், மேலூர் தொகுதி செயலாளர் அய்யாவு ஆகியோர் தலைமையில் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் திடீரென சிட்டம்பட்டி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் ஈடுபட்டனர்.

இந்த சுங்கச்சாவடியை வாகனங்கள் கடந்து செல்ல முடியாதவாறு சுங்கச்சாவடி முன்பு அமர்ந்து கோஷமிட்டனர். இந்த கோஷத்தில் .மதுரை மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் ஊர்வலத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும்,, கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சியை தடுப்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோஷம் எழுப்பினர்.

ஆகையால்,மதுரை மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா அவர்களை தமிழக அரசு உடனே மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்றுகை போராட்டத்தால் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி இருபுறமும் வாகனங்கள் அரை மணி நேரத்திற்கு மேல் அணிவகுத்து நின்றதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்தனர்.

செல்லூர் கே.ராஜூ தமிழக அரசு மதுரை ஆட்சியர் சங்கீதாவை பலிகடா ஆக்குகிறது..!

திருப்பரங்குன்றம் அமைதிப் பேச்சுவார்த்தையில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததாக அதிமுக பற்றி கூறிய பொய்யான தகவலை திரும்ப பெறாவிட்டால் மதுரை ஆட்சியர் சங்கீதா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர், எம்எல்ஏ-க்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை பிரச்சினை தொடர்பாக ஆட்சியர் சங்கீதா நேற்று வெளியிட்ட விளக்க அறிக்கையில், திருமங்கலம் வருவாய் கோட்டாச்சியர் (பொ) தலைமையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டதாகவும், அதில் அதிமுக பிரதிநிதி மட்டும் கையொப்பமிட மறுத்து சென்றுவிட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். ஆட்சியரின் இந்த அறிக்கைக்கு அதிமுக மதுரை மாவட்டச் செயலாளர்களான செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று மதுரை மாநகர அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ, எம்எல்ஏ-க்கள் ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் ஆட்சியர் சங்கீதாவை சந்தித்து, “திருமங்கலத்தில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் அதிமுக பிரதிநிதிகள் யாரும் பங்கேற்காத நிலையில் எப்படி கையெழுத்திட மறுத்ததாக குற்றம்சாட்டாலும், அந்த அறிக்கையை திரும்ப பெற வேண்டும்,” என்று ஆட்சியர் சங்கீதாவை சந்தித்து அவரிடம் கடும் வாக்குவாதம் செய்து முறையிட்டனர்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கு செல்லூர் கே.ராஜூ பதிலளித்தார். அப்போது, “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற கதையாகதான் அரசின் செயல்பாடு உள்ளது. மதுரையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் அண்ணன், தம்பிகளாக பழகி வருகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.பி., திருப்பரங்குன்றம் மலைக்கு சென்றபிறகுதான் இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.

மாவட்ட நிர்வாகமும், அரசும் இந்த பிரச்சினையில் போதிய கவனம் செலுத்துவதில்லை. உளவத்துறை மதுரையில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதே தெரியவில்லை. நடந்த பிறகு அதற்கு மறுப்பு தெரிவிக்கலாம், காரணங்கள் கூறலாம் என்றுதான் பார்க்கிறார்கள். துணிவாக நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். ஆட்சியர் பாவம். இந்த விவகாரத்தில் தமிழக அரசு மதுரை ஆட்சியரை பலிகடா ஆக்குகிறது,” என செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.