கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியை குவியும் சுற்றுலாப் பயணிகள்..!

கோத்தகிரி 13-வது காய்கறி கண்காட்சியை ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். ஏப்ரல்- மே ஆகிய 2 மாதங்கள் கோடை சீசன் ஆதலால் நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிப்பதற்காகவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் லட்சக்கணக்காக சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருவது வழக்கம். அப்படி வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் கோடை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி,இந்தாண்டுக்கான கோடை விழா கோத்தகிரி நேரு பூங்காவில் 13-வது காய்கறி கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் தமிழர் பண்பாட்டை போற்றும் விதமாக கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, கேரட் உள்பட 2 ½ டன் காய்கறிகளை கொண்டு வாடிவாசலில் இருந்து சீறி பாயும் காளை உள்பட பல்வேறு அலங்காரங்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டு உள்ளன.

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், ஈரோடு, திருப்பூர், தேனி, கோவை உள்பட பல்வேறு மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு காய்கறிகளால் ஆன இருவாச்சி பறவை, பாண்டா கரடி, புலி, மாட்டு வண்டி, சிங்கம், கழுகு, திருவள்ளுவர், பூவில் இருந்து தேன் எடுக்கும் தேனீ, ஆகிய அலங்காரங்களும் கோத்தகிரி கண்காட்சியில் இடம்பெற்று உள்ளன. நேற்று வார விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காய்கறி கண்காட்சிக்கு வந்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ள அலங்கார வடிவமைப்புகளை கண்டு ரசித்தனர். இந்நிலையில் 2-வது நாளாக இன்றும் கோத்தகிரி பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதி கொண்டுள்ளனர்.

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோத்தகிரியில் அமைதி ஊர்வலம்

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற வன்முறையை கண்டித்தும், மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகள் அங்கு அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கபட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஒருங்கிணைந்த கிறிஸ்தவ திருச்சபைகள் ஐக்கியம் சார்பில் நேற்று மாலை கோத்தகிரி காமராஜர் சதுக்கம் அருகே உள்ள புனித லூக்கா ஆலயத்தில் இருந்து அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் மணிப்பூருக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர்.

குன்னூர் கோத்தகிரி சாலையில் மிகவும் ஆபத்தான நிலையில் சாலையோர மரங்கள்..!

தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி விட்டதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது.மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி மாவட்டத்திக்கு இந்த நங்கு மாதங்கள் சொல்லவே வேண்டாம் தமிழகத்தின் மற்ற பகுதிகளை விட கொஞ்ச அதிகமாகவே வெளுத்து கட்டும். ஆகையால் மழை காலங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதன் காரணத்தால் மாவட்டத்தில் உள்ள சாலையோர மரங்களை அவ்வப்போது மாவட்ட நிர்வாகம் அப்புறப்படுத்தி வருகிறது. அந்த வகையில் குன்னூரில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் உள்ள சாலையோரம் மரங்கள் விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன. ஆகையால் ஆபத்தான நிலையில் உள்ள சாலையோர மரங்களை மாவட்ட நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.