இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன் அப்போது வீராணம் பைப் வழியாக தப்பித்து வீடு வந்து சேர்ந்தேன் என எஸ்.வி.சேகர் தெரிவித்தார். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஓட்டலில் கிளினிக்கல்ஸ் மருத்துவமனை சார்பில் நீரிழிவு நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை விழிப்புணர்வு சிறப்பு கிளப்பை நடிகர் எஸ்.வி.சேகர் திறந்து வைத்தார். பின்னர் நீரிழிவு நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர் ஏற்படுத்த அதற்கான பிரத்யேக கால் சென்டர் என்னையும் நடிகர் எஸ்.வி.சேகர் அறிமுகம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு எஸ்.வி.சேகர் பதிலளித்தார். அப்போது, தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை என்பதே சரி. தமிழ்நாட்டில் இந்தியை எப்படியாவது திணிக்க வேண்டும் என்பதற்காகவும், சமீபத்தில் வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா நாங்கள் இந்தியை திணிக்க மாட்டோம் என்று இந்தியில் தெரிவித்து விட்டு சென்றார்.
நாம் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் 3 மாதத்தில் அந்த மாநிலத்தின் மொழியை கற்றுக் கொள்ள முடியும். ஆனால் பாஜக அரசு உடனடியாக இந்தியை கற்றுக் கொள் என்று கூறுவதால் நாளை ஒருவருக்கு ஜப்பானில் வேலை கிடைத்தால் இந்தி மொழியை வைத்துக் கொண்டு ஜப்பானில் என்ன செய்ய முடியும்.
மூன்றாவது மொழி இந்தி இல்லை என்று பாஜாக சொன்னாலும், ஒரு ஒரு மொழி படிக்கும் மாணவர்களுக்கு ஒரு ஒரு ஆசிரியர் நியமிக்க முடியுமா? மத்திய அரசை யார் ஆண்டாளும் இந்தியை எப்படியாவது கொண்டு வர வேண்டும், ‘THINK GLOBAL ‘ ‘ ACT GLOBAL ‘ என்று சொல்லுவார்கள். இதில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டுமே இருக்கிறது.
இந்தி வேண்டும் என்று யார் கேட்டார்கள். இந்தியை இலவசமாக சொல்லி தருவதை யாரும் தடுக்க வில்லை. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன் அப்போது வீராணம் பைப் வழியாக தப்பித்து வீடு வந்து சேர்ந்தேன். ஆனால் எல்லா கொள்கைகளையும் அரசியலாக மாற்றப்படும் போது தான் எதிர்ப்பு வருகிறது. அதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். நான் சொல்வதை நீங்கள் செய்யவில்லை என்று சொன்னால் நிதி தர மாட்டேன் என்று சொல்வது நியாயமா? என எஸ்.வி சேகர் கேள்வி எழுப்பினார்.