சீமான் வீட்டின் காவலாளி கைது..! துப்பாக்கியை பறிமுதல் செய்த காவல்துறை..!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் காவலாளி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சீமானின் காவலாளி கைகளில் துப்பாக்கி இருந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. துப்பாக்கியை பறிமுதல் செய்த காவல்துறை, அதற்கான உரிமம் சரியாக இருக்கிறதா என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

நடிகை விஜயலட்சுமியின் பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு வளசரவாக்கம் காவல்துறையினர் சீமான் வீட்டில் சம்மன் ஒட்டிய போது, சில நிமிடங்களிலேயே கதவில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டது. அந்த சம்மனை கிழித்தது ஏன் என்று காவல்துறை விசாரிக்க சீமான் வீட்டிற்குள் சென்ற போது, திடீரென அவரின் காவலாளியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சீமானின் காவலாளி காவல்துறையினரை தாக்கியதோடு கையில் இருந்த துப்பாக்கியையும் எடுத்து நீட்டியுள்ளார். இதன்பின் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற காவல்துறை, கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இதனிடையே சீமானின் வீட்டில் இருந்த காவலாளியின் கைகளில் துப்பாக்கி வந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி 2011-ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பின் காவல் துறை தரப்பில் ஐபிசி 376-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, வழக்கை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. இந்த புகாரை நடிகை திரும்ப பெற்றாலும், அவர் மீது பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், வழக்கை ரத்து செய்ய முடியாது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி காவல்துறையினர் 12 வாரத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதன்பின் வழக்கு விசாரணைக்காக சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று காவல்துறை தரப்பில் சம்மன் அளிக்கப்பட்டது. ஆனால் இன்று சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சீமானுக்கு மீண்டும் சம்மன் அளிக்கப்பட்டது. அந்த சம்மனை சீமான் வீட்டின் கதவில் காவல்துறை ஒட்டிய போது, மனைவி கயல்விழி அறிவுறுத்தலின் பேரில் சில நிமிடங்களிலேயே அதனை கிழித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறை, சம்மனை கிழித்தது யார் என்று கேட்டு கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது காவல்துறையினரை உள்ளே அனுமதிக்க மறுத்த சீமானின் காவலாளி அமல்ராஜ், காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். துப்பாக்கியை நீட்டிய காவலாளி அப்போது காவல்துறையினரை தள்ளிவிட்ட காவலாளி அமல்ராஜ், தன்னிடம் இருந்த கை துப்பாக்கியை எடுத்து காவல்துறையினரை நோக்கி நீட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், உடனடியாக காவலாளியை 2 பேர் சேர்ந்து குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். அதேபோல் காவலாளியின் கைகளில் இருந்த கை துப்பாக்கியையும் காவல்துறை பறிமுதல் செய்தனர்.

காவலாளியை சரமாரியாக தாக்கி ஓட்டம் பிடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது..!

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் ஐந்து ரதம் அருகே நேற்று முன்தினம் காவலாளியை சரமாரியாக தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்துக்கு ஞாயிற்றுகிழமை நேற்று முன்தினம் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். இந்நிலையில், ஐந்துரதம் புராதன சின்னம் அருகில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கொண்ட குடும்பத்தினர் காரில் வந்துள்ளனர். ஐந்து ரதம் பகுதியிலுள்ள வணிக வளாகத்தையொட்டி மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழும கட்டுப்பாட்டின் இயங்கி வரும் வாகன நிறுத்துமிடம் உள்ளது.

மேலும், வணிக வளாகத்தில் கடை வைத்துள்ள வியாபாரிகள் தங்களது வருமானத்திற்காக ஏழுமலை என்பவர் நியமனம் செய்துள்ளார். ஆனால் ஏழுமலை காரை அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறும் மற்றும் NO ENTRY வழியாக கார் செல்லக்கூடாது எனக்கூறி காரை வழி மறித்து நின்றுள்ளார்.

ஆனால், காரிலிருந்த நபர்கள் தனியார் காவலரை இடிப்பது போன்று சென்று NO ENTRY வழியா செல்ல முயன்றனர். இதனால், காரில் வந்தவர்களை நோக்கி வாகன நிறுத்துமிட பணியாளர் ஏழுமலை திட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, காரிலிருந்து இறங்கிய 2 பெண்கள் தகாத வார்த்தைகளால் திட்டுகிறாயா எனக்கூறி ஆவேசமடைந்து, காவலாளி மீது தாக்குதல் நடத்தினர். காரில் வந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் காவலாளியை கடுமையாக தாக்கினர்.

காவலாளியை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவலாளியை தாக்கிவிட்டு காரில் தப்பிய 3 பேர் மீது 4 பிரிவில் வழக்கு பதிவுசெய்து காவல் துறை தேடி வந்த நிலையில் அவர்களை கைது செய்தனர்.

நோ என்ட்ரி பிரச்சனையில் காவலாளியை தாக்கி 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

மாமல்லபுரத்தில் நோ என்ட்ரி வழியே சென்ற காரை தடுத்த காவலாளியை சரமாரியாக தாக்கிய 2 பெண்கள் உள்ளிட்ட நால்வர் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.  செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் ஐந்து ரதம் பகுதியில் கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் மொத்தம் 100 கடைகள் கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. தற்போது, இந்த வணிக வளாகத்தில் 75 கடைகளுக்கு மேல் இயங்கி வருகிறது. இந்த, வணிக வளாகத்தையொட்டி மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழும கட்டுப்பாட்டின் இயங்கி வரும் வாகன நிறுத்துமிடம் உள்ளது.

மேலும், வணிக வளாகத்தில் கடை வைத்துள்ள வியாபாரிகள் தங்களது வருமானத்திற்காக உள்ளூர் நபர் ஒருவரை தினக்கூலி அடிப்படையில் பார்க்கிங் ஏரியாவில் நிற்க வைத்து, அங்கு வரும் வாகனங்களை பார்க்கிங்கில் நிறுத்த சொல்லி அனுப்ப அறிவுறுத்தினர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாமல்லபுரம் சுற்றுலா வந்த ஒரு காரை ஐந்து ரதம் பகுதியில் மறித்து பார்க்கிங்கில் நிறுத்த சொல்லி அந்த நபர் கூறியுள்ளார். அப்போது, காரில் வந்த பயணிகள் நாங்கள் ஐந்து ரதத்தை கடந்து சென்னைக்கு செல்கிறோம் என்று கூறியுள்ளனர்.

அப்போதும், இது நோ என்ட்ரி என தெரிவித்து காரை தடுத்து திரும்பி செல்லும்படி தெரிவித்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் காரில் இருந்து இறங்கி அந்த நபர் கையில் இருந்த பிளாஸ்டிக் பைப்பை பிடுங்கி எங்களையே தகாத வார்த்தைகளால் திட்டுவியா என பைப் உடையும் வரை அந்த நபரை சரமாரியாக தாக்கினர்.

மேலும் ஒரு பெண் ரவுடியாக மாறி காலால் எட்டி எட்டி உதைத்தார். பின்னர், கண் இமைக்கும் நேரத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரும் காரில் ஏறி ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தை அவ்வழியாக சென்ற வெளிநாட்டு பயணி ஒருவர் இந்த தாக்குதல் சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டார். அந்த, வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வைரலானது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணையை முடக்கி விட்டது. அப்போது, இது நோ என்ட்ரி வழியே ஆகையால் காரை திருப்ப செல்ல காவலாளி வலியுறுத்தியுள்ளார். ஆனால், காவலாளியின் பேச்சு கேட்காமல் அவர்கள் தகராறு செய்ததாக தெரிய வருகிறது. இதனால் ஏற்பட்ட வார்த்தை மோதலில் விளைவாக காவலாளியை சரமாரியாக தாக்கிய 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் கண் இமைக்கும் நேரத்தில் தப்பி ஓட்டம் பிடித்தனர் என தெரிய வந்தது. இத்தனை தொடர்ந்து, 2 பெண்கள் உள்ளிட்ட நால்வர் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.