தாராபுரத்தில் தவெக சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம்..!

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வாக்காளர் சிறப்பு முகாமில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த மாதம் 29-ஆம் தேதி மாவட்ட வாரியாக இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதோடு 2025 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தபணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பட்டியலில் ஏற்கெனவே உள்ள பதிவுகளில் நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்தல், ஆதார் எண் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதுதவிர 01.01.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி 09.11.2023, 10.11.2024, 23.11.2024 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடந்தது.

கடைசி நாளான இன்று மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வாக்காளர் சிறப்பு முகாமில் வாக்காளர்கள் எவ்வாறு பெயர் சேர்ப்பது, பெயர் நீக்குவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி மாவட்ட தலைவரும், கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவருமான செல்வி ரமேஷ் தலைமை தாங்கினார். தாராபுரம் சொர்க்கம் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

கவுண்டச்சிபுதூர் ஊராட்சி கொட்டாபுளிபாளையம் பகுதியில் வாகன பிரசாரம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புது காவல் நிலையம் வீதி புதுமஜீ தெரு பெரிய கடை வீதி போன்ற பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டனர் அப்போது கடைவீதி மரக்கடை பள்ளிவாசலில் இருந்து தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்களிடம் சொர்க்கம் ரமேஷ் மற்றும் கௌதம் உள்ளிட்ட தாவேகவினர். துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் தமிழக வெற்றிக்கழக தாராபுரம். மேற்கு ஒன்றிய தலைவர் கவுதம், துணைத் தலைவர் தமிழரசன், தாராபுரம் நகர மகளிர் அணி தலைவர் சுமதி, நகரத் துணைத் தலைவர் நாகலட்சுமி மற்றும் ஒன்றிய மகளிர் அணி தலைவர் ரஞ்சிதா, செயலாளர் பெஸ்ட் நகர் கார்த்திகா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பரபரப்புக்கு பஞ்சமில்லாத கவுண்டச்சிபுதூர்…! கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் வராததால் மீண்டும் பரபரப்பு…!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சி கடந்த சில ஆண்டுகளாகவே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் 77-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் தாராபுரம் அருகே உள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்றம் சார்பில் கிராம சபை கூட்டம் எம்.பி.சாமி காலனி பூங்காவில் நேற்று காலை 11 மணிக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் வரதா காரணத்தால் ஊராட்சி செயலர் பெரியசாமி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நாச்சிமுத்து ஆதரவுடன் கிராம சபை கூட்டத்தை நடத்த முன் வந்தனர். ஆனால் ஊராட்சி கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சித்தலைவர் இல்லாமல் கூட்டத்தை நடத்துவதா என பொதுமக்கள் கூட்டத்தில் கேள்வி எழுப்பினர்.

அப்போது ஊராட்சி செயலாளர் பெரியசாமி தலைவருக்கு உடல்நிலை சரியில்லை என கூறியதாக தெரிகிறது. பொதுமக்கள் பல்வேறு கேள்விகளை கேட்பதாக கூறி கடந்த மே 1-ந்தேதி நடைபெற்ற கூட்டத்திலும் ஊராட்சி தலைவர் பங்கேற்க வில்லை, அதேபோன்று நேற்றும் புறக்கணித்ததாக கூறி அதிகாரிகளிடம் பொதுமக்கள் விவாதத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து பொதுமக்கள் எழுந்து நின்று அதிகாரிகளிடம் ஊராட்சி பகுதியில் கடந்த 4 வருடங்களாக சாக்கடை, குடிநீர், தெரு விளக்கு, துப்புரவுப்பணி, தார் சாலை மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதாகவும், பிரச்சினைகளை மனு மூலம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றால் முறையான பதில் எதுவும் தராமல் சத்தம் போட்டு திருப்பி அனுப்பி விடுவதாகவும் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

எனவே தலைவர் செல்வி கிராம சபை கூட்டத்திற்கு வர வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஒத்தி வைப்பு அதைத் தொடர்ந்து கிராம சபை கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு அதிகாரிகள் சென்றனர்.