தன் உயிரை பணயம் வைத்து மின்சாரம் பாய்ந்த சிறுவனை காப்பாற்றிய இளைஞர்

மழைநீரில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் உயிருக்கு போராடிய நிலையில் இளைஞர் ஒருவர் தைரியமாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறுவனின் உயிரை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சென்னை அரும்பாக்கத்தில் கடந்த 16 -ஆம் தேதி மழை பெய்து சாலையில் தண்ணீர் தேங்கி கிடந்தது. அந்த வழியாக 3 -ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் தேர்வு முடித்து வீடு திரும்பி உள்ளார். அப்போது சாலையோரம் பொறுத்தப்பட்டு இருந்த மின் மீட்டர் பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டு மழை நீரில் நடந்து சென்ற மாணவன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதனால் துடித்த பள்ளி சிறுவன் அங்கேயே சுருண்டு விழுந்து உயிருக்கு போராடி உள்ளார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த கண்ணன் என்ற இளைஞர் தன் உயிரை பணயம் வைத்து அந்த சிறுவனை மீட்டு முதலுதவி வழங்கி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. பள்ளி மாணவர் உயிருக்கு போராடுவதும் இளைஞர் கண்ணன் தைரியமாகவும் தனது உயிரை பற்றி கவலையில்லாமல் துரிதமாக செயல்பட்டதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. பள்ளி சிறுவனை உயிரை காப்பாற்றிய இளைஞர் கண்ணனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தலைமை நீதிபதி: ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம்..!

ஒசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நீதிமன்ற வளாகத்தில், மகளிர் காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், போக்குவரத்து புலனாய்வு பிரிவு போன்ற அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் அதிகம் கூடுவதால், எப்போதும் இந்தப்பகுதி பரபரப்பாக காணப்படும்.

இந்த சூழலில், நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் கண்ணன் என்கிற வழக்கறிஞர் நடந்து வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென அரிவாளை எடுத்து, அவரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். இதைப்பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். வழக்கறிஞர் கண்ணனுக்கு கழுத்து, தோள் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். சம்பவம் அறிந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்த காவல்துறையினர், ஆபத்தான நிலையில் இருந்த வழக்கறிஞர் கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த நகர காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், ஓசூரில் வழக்கறிஞர் ஒருவரிடம் கிளார்க்காக பணி புரிந்து வந்த பயிற்சி வழக்கறிஞர் ஆனந்த குமார் என்பவர் தான் வழக்கறிஞர் கண்ணனை அரிவாளால் வெட்டியவர் என்பது தெரியவந்தது. மேலும் பயிற்சி வழக்கறிஞர் ஆனந்த குமார் மனைவி சத்யாவும் வழக்கறிஞராக பணி செய்து வருகிறார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில், கண்ணனுக்கும், சத்யாவுக்கும் ஏற்கெனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. தொடர்ந்து கண்ணன் தகராறு செய்து வந்ததால், ஆத்திரமடைந்த ஆனந்த் குமார், இந்த கொலை முயற்சி சம்பவத்தில் இறங்கியதாக விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தை கண்டித்து நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்.

இதனிடையே, ஆனந்த் குமார் ஜே எம் 2-ல் நீதிமன்றத்தில் சரணடைய, இந்த கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய மனைவி சத்யாவும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர். நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வழக்கறிஞர் கண்ணன் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் பிரபாகரன் இதுதொடர்பாக முறையீடு செய்ய சென்னை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஓசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொழில் ரீதியானது அல்ல, தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்துள்ளது. ஒவ்வொரு நபருக்கும் பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம். வழக்கறிஞர்கள் பாதுகாப்பு குறித்து அரசுடன் ஆலோசிக்க தலைமை வழக்கறிஞர் ஏற்பாடு செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி தெரிவித்தார். உள்துறை செயலாளர், டிஜிபி, வழக்கறிஞர் சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் ஆலோசிக்க அரசு தலைமை வழக்கறிஞர் ஏற்பாடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஜனவரி 23 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

நீதிமன்ற வாசலிலேயே நிலைகுலைந்த வழக்கறிஞர் கண்ணன்..! கைதான வழக்கறிஞர் சத்யா..!

வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் கொந்தளித்து கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நீதிமன்ற வளாகத்தில், மகளிர் காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், போக்குவரத்து புலனாய்வு பிரிவு போன்ற அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் அதிகம் கூடுவதால், எப்போதும் இந்தப்பகுதி பரபரப்பாக காணப்படும்.

இந்த சூழலில், நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் கண்ணன் என்கிற வழக்கறிஞர் நடந்து வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென அரிவாளை எடுத்து, அவரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். இதைப்பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். வழக்கறிஞர் கண்ணனுக்கு கழுத்து, தோள் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். சம்பவம் அறிந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்த காவல்துறையினர், ஆபத்தான நிலையில் இருந்த வழக்கறிஞர் கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த நகர காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், ஓசூரில் வழக்கறிஞர் ஒருவரிடம் கிளார்க்காக பணி புரிந்து வந்த பயிற்சி வழக்கறிஞர் ஆனந்த குமார் என்பவர் தான் வழக்கறிஞர் கண்ணனை அரிவாளால் வெட்டியவர் என்பது தெரியவந்தது. மேலும் பயிற்சி வழக்கறிஞர் ஆனந்த குமார் மனைவி சத்யாவும் வழக்கறிஞராக பணி செய்து வருகிறார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில், கண்ணனுக்கும், சத்யாவுக்கும் ஏற்கெனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. தொடர்ந்து கண்ணன் தகராறு செய்து வந்ததால், ஆத்திரமடைந்த ஆனந்த் குமார், இந்த கொலை முயற்சி சம்பவத்தில் இறங்கியதாக விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தை கண்டித்து நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்.

இதனிடையே, ஆனந்த் குமார் ஜே எம் 2-ல் நீதிமன்றத்தில் சரணடைய, இந்த கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய மனைவி சத்யாவும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர்.

ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு..!

ஓசூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜூனியர் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அப்போது, பயிற்சி வழக்கறிஞர் ஆனந்தன், திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஜூனியர் வழக்கறிஞர் கண்ணனை சரமாரியாக வெட்டியதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். வழக்கறிஞர் கண்ணனை உடனிருந்த வழக்கறிஞர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வழக்கறிஞர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று காவல்துறைதுறை முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க ரூ.6 கோடி லஞ்சம்: காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்த எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர். சுவாமிநாதன் சகோதரர்களான இருவரும் கிரிஷ் பால் பண்ணை மற்றும் நிதி நிறுவனம் உள்ளிட்ட தொழில்களைச் செய்து வருகின்றனர்.

இவர்கள் தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், இரட்டிப்பாகப் பணம் திருப்பித் தரப்படும் என ஆசைவார்த்தை கூறி வணிகர்கள், தொழிலதிபர்கள் , பொதுமக்கள் எனப் பலரையும் குறிவைத்து நிதி வசூல் செய்தனர். ஆரம்பத்தில் சொன்னதுபோலவே பணத்தைத் திருப்பித் தந்ததால், பலரும் தாமாக முன்வந்து அவர்களின் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அதன்விளைவு சொந்த ஹெலிகாப்டரில் வலம் வரும் அளவிற்கு அபார வளர்ச்சி அடைந்து, ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ என அழைக்கப்பட்டும் அளவிற்கு மாறினார்.

ஹெலிகாப்டர் பிரதர்ஸின், சாயம் போகப்போக வெளுக்க ஆரம்பித்தது, கும்பகோணத்தைச் சேர்ந்த ஜபருல்லா-பைரோஜ் பானு தம்பதியினர் மற்றும் கணேஷ், சுவாமிநாதன் சகோதரர்கள் எங்களிடம் 15 கோடி மோசடி ரூபாய் செய்துவிட்டதாக, கடந்த 2021-ம் ஆண்டு, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மீது குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கணேஷ், சுவாமிநாதன் உட்பட 5 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், கணேஷ் தாயாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூழலில், கணேஷ் அங்கு தனியார் லாடஜ் ஒன்றில் தங்கியிருந்தார். அப்போது, பூதலுார் ஆய்வாளராக இருந்த கண்ணன், கடந்த 2021ம் ஆண்டு ஏப்.17 ம் தேதி, லாட்ஜ்க்கு சென்று கணேஷிடம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ரகு பிராசத் மற்றும் சீனிவாசன் என்பவர்களுக்கு 2 கோடியே 38 லட்சம் பணம் மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்துள்ளனர். அதுதொடர்பாக விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

பிறகு மறுநாள் அப்போது சிறப்புப் பிரிவு ஆய்வாளராக இருந்த சோமசுந்தரம், கண்ணன் இருவரும் மீண்டும், கணேஷை லாட்ஜில் சந்தித்து, இரண்டு புகார்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாமல் இருக்கவும், மேலும் மோசடி வழக்கில் விசாரணை நடத்தாமல் இருக்கவும் 6 கோடி ரூபாய் பணம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளனர். அத்துடன் முதல் கட்டமாக 10 லட்சம் ரூபாய் பணத்தை தர கோரியுள்ளனர்.

கணேஷிடமிருந்து ஏப்.19-ம் தேதி 5 லட்சமும், 29-ம் தேதி 5 லட்சமும் பணத்தை சோமசுந்தரமும், கண்ணன் இருவரும் பெற்றுள்ளனர். இது குறித்து விசாரணையில் தெரியவர, லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக தற்போது மயிலாடுதுறை சிறப்பு காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.