3 வயதில் ஆசிட் தாக்குதலில் பார்வையிழந்த மாணவி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை!

3 வயதில் கஃபி ஆசிட் வீச்சுக்கு ஆளாகி பார்வையை இழந்த மாணவி 12 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.6 சதவீத மதிப்பெண்கள் பெற்று தனது பள்ளியில் முதலிடம் பிடித்து கஃபி அசத்தியுள்ளார். அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள புதானா கிராமத்தை சேர்ந்த கஃபி (Kafi). என்ற மாணவி 2011 -ஆம் ஆண்டு தனது மூன்று வயதில் கஃபி ஆசிட் வீச்சுக்கு ஆளாகி பார்வையை இழந்தார். மூன்று வயதில் இருந்தே பல்வேறு சிரமங்களை சந்தித்த கஃபி சண்டிகரில் செக்டார் 26 இல் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் ஆடியோ புக்குகள் மூலம் கஃபி பயின்று வந்தார்.

இந்நிலையில் நடந்து முடிந்த 12 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.6 சதவீத மதிப்பெண்கள் பெற்று தனது பள்ளியில் முதலிடம் பிடித்து கஃபி அசத்தியுள்ளார்.  கஃபி டெல்லி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுதி தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில் ஊடகத்துக்குப் பேட்டியளித்த கஃபி, 3 அண்டை வீட்டார் தன் மீது அமிலத்தை ஊற்றினார்கள்.

ஆனால், மருத்துவர்களின் தீவிர சிகிக்சையால் தான் உயிருடன் இருப்பதாகவும், உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களால் என் பார்வையைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் ஆசிட் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. தன்னை கொடூரமாக நடத்தியவர்கள் இன்னும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்.

ஏற்கனவே டெல்லி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை எழுதி முடித்த கஃபி சீட் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்து இருக்கிறேன். மேலும் டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பது எனது கனவு என கஃபி தெரிவித்தார்.