தாய் உடல் மயானம் போகும்போது குழந்தையும் பலி..!

அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் பெண்ணிற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால், இளம் பெண் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த எல்.மாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த விஜய் மனைவி துர்காதேவி. இருவரும் காதலித்து, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த துர்கா தேவி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசவத்திற்காக ஆம்பூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அறுவை சிகிச்சை பின் அவருக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. பணியில் இருந்த செவிலியர்கள், மற்றும் பணியில் இருந்த சியாமளா என்ற மருத்துவர் துர்கா தேவிக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனவும், துர்கா தேவிக்கு பெண் குழந்தை பிறந்த பின்னர் அதிக அளவு ரத்தப் போக்கு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அவருக்கு முறையாக அறுவை சிகிச்சை செய்யாததால், தொடர்ந்து ரத்தப் போக்கு அதிகமாகியுள்ளது என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, துர்காதேவியை மருத்துவர்கள் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முடியாமல், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அங்கும் சிகிச்சை அளிக்க முடியாமல், இறுதியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், நேற்று முன்தினம் இரவு துர்கா தேவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், துர்கா தேவியின் உடல் நேற்று எல்.மாங்குப்பம் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் துர்காதேவிக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் தான் துர்காதேவி உயிரிந்ததாகக் கூறி ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சியாமளா மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி துர்கா தேவியின் உறவினர்கள் ஆம்பூர் – பேர்ணாம்பட் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையிலான காவல்துறையினர், ஆம்பூர் வட்டாட்சியர் ரேவதி தலைமையிலான வருவாய்த் துறையினர், மற்றும் திருப்பத்தூர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் கண்ணகி ஆகியோர் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.

இதுகுறித்து புகார் அளித்தால், துர்காதேவிக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மருத்துவர் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால் பிரசவத்திற்குச் சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தாய் உடல் மயானம் போகும்போது குழந்தையும் பலி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெருநாய் கடித்து குதறிய சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழப்பு..!

தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தெருநாய்கள் கடித்து குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்களும், பலத்த காயங்களுக்கு உள்ளாகும் சம்பவங்களும் சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அரக்கோணம் பகுதியில் தெருநாய் கடித்து குதறியதில் 4 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், கணபதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பாலாஜி மகன் மகன் நிர்மல் ராஜ் 4 வயது சிறுவன். கடந்த, ஜூன் மாதம்- 26ம் தேதி வீட்டின் பின்புறமாக விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது, அந்த தெரு வழியாக வந்த நாய், சிறுவனை கடித்து குதறியது. ருகிலிருந்தவர் அப்பகுதிக்கு ஓடிச் சென்று பார்த்தபோது சிறுவன் நிர்மல் ராஜை தெருநாய் கடித்துக் குதறிக் கொண்டு இருந்துள்ளது. நிர்மல்ராஜின் கை, வாய், கால் உள்ளிட்ட பகுதிகளை தெருநாய்க் கடித்து குதறியுள்ளது. இதில், சிறுவன் பலத்த காயமடைந்துள்ளார். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், சிறுவனுக்கு ரேபிஸ் நோய் தாக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, கடந்த 45 நாள்களாக சிறுவனக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாய்கள் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இரவு நேரங்களில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை விரட்டி கடிக்கச் செல்கின்றன. இதனால், தொடர்ந்து விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே, தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.