நீதிமன்ற வாசலிலேயே நிலைகுலைந்த வழக்கறிஞர் கண்ணன்..! கைதான வழக்கறிஞர் சத்யா..!

வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் கொந்தளித்து கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நீதிமன்ற வளாகத்தில், மகளிர் காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், போக்குவரத்து புலனாய்வு பிரிவு போன்ற அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் அதிகம் கூடுவதால், எப்போதும் இந்தப்பகுதி பரபரப்பாக காணப்படும்.

இந்த சூழலில், நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் கண்ணன் என்கிற வழக்கறிஞர் நடந்து வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென அரிவாளை எடுத்து, அவரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். இதைப்பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். வழக்கறிஞர் கண்ணனுக்கு கழுத்து, தோள் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். சம்பவம் அறிந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்த காவல்துறையினர், ஆபத்தான நிலையில் இருந்த வழக்கறிஞர் கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த நகர காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், ஓசூரில் வழக்கறிஞர் ஒருவரிடம் கிளார்க்காக பணி புரிந்து வந்த பயிற்சி வழக்கறிஞர் ஆனந்த குமார் என்பவர் தான் வழக்கறிஞர் கண்ணனை அரிவாளால் வெட்டியவர் என்பது தெரியவந்தது. மேலும் பயிற்சி வழக்கறிஞர் ஆனந்த குமார் மனைவி சத்யாவும் வழக்கறிஞராக பணி செய்து வருகிறார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில், கண்ணனுக்கும், சத்யாவுக்கும் ஏற்கெனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. தொடர்ந்து கண்ணன் தகராறு செய்து வந்ததால், ஆத்திரமடைந்த ஆனந்த் குமார், இந்த கொலை முயற்சி சம்பவத்தில் இறங்கியதாக விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தை கண்டித்து நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்.

இதனிடையே, ஆனந்த் குமார் ஜே எம் 2-ல் நீதிமன்றத்தில் சரணடைய, இந்த கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய மனைவி சத்யாவும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர்.

ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு..!

ஓசூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜூனியர் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அப்போது, பயிற்சி வழக்கறிஞர் ஆனந்தன், திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஜூனியர் வழக்கறிஞர் கண்ணனை சரமாரியாக வெட்டியதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். வழக்கறிஞர் கண்ணனை உடனிருந்த வழக்கறிஞர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வழக்கறிஞர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று காவல்துறைதுறை முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.