புதிய திட்டப்பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைப்பு

திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடசின்னாரிபாளையம் ஊராட்சி அய்யாக்குட்டி வலசு, வீணம்பாளையம் ஆகிய பகுதிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய திட்டப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் தலைமை தாங்கினார்.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் 44 புதிய திட்டப் பணி தொடங்கி வைப்பு

திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவன்மலை, பாலசமுத்திரம்புதூர், பாப்பினி, படியூர், தம்மரெட்டிபாளையம் மற்றும் வீரணம்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ.லட்சுமணன் தலைமையில் 42 புதிய திட்டப்பணிகளை, தமிழ்நாடு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 88 அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கினார்.