கொடுத்த கடனை திரும்பக் கேட்ட வங்கி மேலாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அமைச்சர் கீதாஜீவனின் தீவிர ஆதரவாளரும், திமுக பகுதிச் செயலாளருமான ஜெயக்குமார் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட போல்பேட்டை திமுக பகுதிச் செயலாளராக இருப்பவர் ஜெயக்குமார் அமைச்சர் கீதாஜீவனின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
ஜெயக்குமார், தூத்துக்குடி துறைமுகம் சாலையில் உள்ள ஒரு தனியார் கடன் பெற்றுள்ளதாகவும் அதனை முறையாக செலுத்தாததால் வங்கி மேலாளர் கடனைத் திருப்பி செலுத்தக் கோரியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திமுக பகுதிச் செயலாளர் ஜெயக்குமார், காமராஜ் உள்பட பலர் வங்கி மேலாளரை தாக்கியதோடு கொலைமிரட்டல் விடுத்தாகத் தெரிகிறது.
இதனை தொடர்ந்து பலத்த காயமடைந்த வங்கி மேலாளர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த தகவல் தூத்துக்குடிமத்தியப் பாகம் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு BNS act: 296, 115, 118, 351ன் கீழ் வழக்குப் பதிவு (FIR: 167/2025) செய்து திமுக பகுதிச் செயலாளர் ஜெயக்குமார் உள்பட நான்கு பேர் மீது வழக்குச் செய்தனர்.