அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஜூன் 20-க்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்


கோவிட -19 தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் வரும் 20 ஆம் தேதிக்குள் கோவிட -19 தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேஎண்டும் சுற்றறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை பின்பற்றி இந்த சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒடிசாவிலிருந்து ரயில் வந்த 80 டன் ஆக்சிஜன் அனைத்தும் டேங்கர் லாரிகளில் நிரப்பும் பணியை அமைச்சர் கே.என் . நேரு ஆய்வு

கோவிட் -19 நோயாளிகளின் சிகிக்சைக்காக ஒடிசா மாநிலம் பிலாயிலிருந்து 80 டன் ஆக்சிஜன், ரயில் மூலம் திருச்சி குட்ஷெட்டுக்கு வந்தடைந்தது. அந்த ஆக்சிஜ னைள் அனைத்தும் டேங்கர் லாரிகளில் நிரப்பப்பட்டு பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை நேரில் ஆய்வு செய்தார்.

8 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள், இடுபொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி

பரபரப்புக்கு பஞ்சமில்லாத முத்தூஸ் மருத்துவமனை: கோவிட் -19 சிகிச்சைக்காக வந்த பெண்ணின் 10 சவரன் நகை திருட்டு

கோயம்புத்தூர் சரவணம்பட்டி முத்தூஸ் மருத்துவமனையின் பெயர் ஒரு சில தினங்களாகவே செய்திகள் செய்திதாள்களில் வந்த வண்ணம் உள்ளது.

அதன்வரிசையில் கோவிட் -19 சிகிச்சைக்காக வந்த பெண்ணின் 10 சவரன் நகை மருத்துவமனை லாக்கரில் வைக்கப்பட்ட நகை திருடப்பட்டது. இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை கொண்டு அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் சரவணம்பட்டி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாடகை வாகனங்கள், டாக்சிகள், மற்றும் ஆட்டோக்கள் இ-பதிவுடன் செயல்பட அனுமதி

புகார்கள் அளிக்க: தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம்


“தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள புகார் சம்பந்தமாக தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/login.php) தபால் மூலம் அனுப்பும் புகார்கள்…. Chief Minister’s Special Cell , Secretariat, Chennai – 600 009. Phone Number : 044 – 2567 1764 Fax Number : 044 – 2567 6929 E-Mail : cmcell@tn.gov.in

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பொள்ளாச்சியில் மரக்கன்றுகளை நட்டனர்


உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் சார்பில் பொள்ளாச்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டது

தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு : காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி