தளர்வுகளுடன் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு : காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விருகம்பாக்கத்தில் மரக்கன்றுகள் நடும் விழா


உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, விருகம்பாக்கம் சிவலிங்கபுரத்தில், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா வும், தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்களும் மரக்கன்றுகள் நட்டனர். இவர்களுடன் பகுதிச் செயலாளர்கள் திரு.மு.ராசா, திரு.கே.கண்ணன் உடனிருந்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தென் சென்னை மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பு


கிண்டி, கிங் இன்ஸ்டிட்டியூட் மருத்துவனையை 250 கோடி செலவில் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவனையாக மாற்றம் செய்ய உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருங்கே சென்று சந்தித்து தென் சென்னை மக்கள் சார்பில் நன்றி தெரிவித்தனர்.

கோயம்பேடு மார்க்கெட் கோவிட் -19 தடுப்பூசி மையத்தினை விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா ஆய்வு

செவிலியர் ஜெயக்குமாரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை கஸ்தூரிபாய் மருத்துவமனை தீ விபத்தின் போது தீயணைப்பு வீரர்கள் வரும் முன்பே கண்ணாடிகளை உடைத்து 36 பச்சிளங்குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் உயிர்களைக் காத்த துணிச்சலான செவிலியர் ஜெயக்குமாரை நேரில் அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி

அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை – அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் சார்பில் கோவிட் -19 தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சுமார் ரூ.3 கோடி வழங்கப்பட்டது. முன்பே ரூ.20 கோடிக்கு பொருட்கள் வழங்கிய இவர்களுக்கு காணொலியில் முதலமைச்சர் மு.க . ஸ்டாலின் அவர்கள் நன்றி கூறினார்.

மீண்டும் ஜொலிக்கும் ரிப்பன் மாளிகை: “தமிழ் வாழ்க, தமிழ் வளர்க”என்ற பெயர்ப்பலகை


சென்னை மாநகராட்சியின் அலுவலக கட்டிடமான ரிப்பன் மாளிகையில், “தமிழ் வாழ்க, தமிழ் வளர்க”என்ற பெயர்ப்பலகைகள் இன்று நிறுவப்பட்டது. கடந்த கால ஆட்சியில் மக்கள் விரோத அரசு நீக்கிய இப்பெயர் பலகைகளை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாளில் மீண்டும் நிறுவப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்


கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குறிச்சி மற்றும் அரிசிபாளையம் பகுதியில் கோவிட் -19 தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி டோக்கன்களை வாங்கி வைத்து கொண்டு ஒரு சிலர் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் டோக்கன் கொடுப்பதும், மருத்துவரிடம் தகராறு செய்து கொண்டும் இருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.