மயில்சாமி அண்ணாதுரை: பூமியில் குறைந்து வரும் எரிபொருளுக்கு மாற்று சக்தி நிலவில் உள்ளதா ..?

2008 -ம் ஆண்டு நிலவுக்கு ஏவப்பட்டு அதில் நீர் இருப்பதற்கான சுவடுகள் இருப்பதை கண்டுபிடித்த இந்தியாவின் சந்திரயான் 1 விண்கல திட்டத்தின் இயக்குநராக பணியாற்றியவர் தமிழ்நாட்டை சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை. இவர் சந்திரயான் 3 திட்டம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து இருக்கிறார்.

அப்போது பேசிய மயில்சாமி அண்ணாதுரை, “பூமியில் குறைந்து வரும் எரிபொருளுக்கு மாற்று சக்தி நிலவில் உள்ளது. இனி நிலாதான் வளைகுடா நாடுகளாகவும், அமெரிக்காவாகவும் இருக்கும். வளைகுடா நாடுகளுக்கு நாம் ஏன் செல்கிறோம். நிலவில் வெப்ப நிலையில் 50 டிகிரி இருந்து நாம் ஏன் அங்கு செல்கிறோம் என்றால், இங்கு உள்ளதை விட அங்கு அதிக ஊதியம் கொடுக்கிறார்கள் என்பதால்தான்.

ஏன், அங்கு அதிக ஊதியம் கொடுக்கிறார்கள்? அங்கு எண்ணெய் வளம் உள்ளது. எண்ணெய் வளத்தை எடுப்பதற்காக வழங்குகிறார்கள். அங்கு நீரே இல்லை. இருப்பினும் எவ்வளவோ தூரத்தில் கடல் இருந்தாலும், அந்த நீரை கொண்டு வந்து பெரிய நகரங்களை உருவாக்குகிறார்கள். எல்லாவற்றுக்கும் மூலக் காரணம் மற்ற இடங்களில் இல்லாத அளவுக்கு அங்கு உள்ள எண்ணெய் வளம்.

மனித சமுதாயம் தன்னுடைய நாகரீகத்தை தொடங்கியது நீரை ஒட்டிதான். இப்போது இந்த இரண்டையும் சேர்த்து நான் பார்க்கிறேன். நிலவில் தென் துருவம் என்பது இரண்டும் சேர்ந்த ஒன்று. நிலவில் மற்ற இடங்களில் உள்ளதை விட நீர் அதிகம் உள்ள இடம் துருவ பகுதி. இப்போதுள்ள எண்ணெய் வளம் குறையும்போது நமக்கு ஒரு வளம் தேவை.

அந்த வளம் இருக்கும் இடம் நிலவு. அருகில் நீரும் உள்ளது. இரண்டும் சேரும்போது நிலவின் தென் துருவத்தை அடுத்த ஒரு அமெரிக்க கண்டமாக நான் பார்க்கிறேன். இந்தியாவுக்காக மாற்றுவழி கண்டுபிடிக்க மேற்கு நோக்கி சென்ற கொலம்பஸ் தவறுதலாக கண்டுபிடித்த நாடுதான் அமெரிக்கா. அந்த அமெரிக்கா கண்டுபிடிக்க தவறிய நிலவில் நீரை இந்தியா கண்டுபிடித்தது.

இந்த இரண்டையும் சேர்த்து பார்த்தோம் என்றால் இந்தியா நிலவில் கண்டுபிடித்தது அடுத்த அமெரிக்கா. இது இரண்டையும் சேர்த்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன். இப்போது எப்படி அமெரிக்காவை நோக்கி உலகில் உள்ள எல்லோரும், ஐரோப்பியர்களாக இருக்கலாம், ஆசிய கண்டத்தினராக இருக்கலாம், ஆஸ்திரேலியர்களாக இருக்கலாம். இவர்கள் எல்லோரும் எப்படி போகிறார்களோ, அதுமாதிரி இப்போது எல்லா விஞ்ஞானிகளும் நிலவை நோக்கி போய்கொண்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.” என்றார்.

சந்திரயான் -3 வெற்றியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தலைமையிலான குழுவிற்கும் பெரும் பங்

இந்தியா 2019 -ம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட சந்திரயான் -2 திட்டம் தோல்வியடைந்ததாக கூறப்பட்டு வரும் நிலையில், சந்திரயான் -3 திட்டம் பெற்ற இந்த சரித்திர வெற்றிக்கே சந்திரயான் -2 திட்டம் தான் உதவி இருக்கிறது. அது எப்படி, உலகிலேயே ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய வல்லரசு நாடுகள் மட்டுமே இதுவரை செயற்கைக்கோளை அனுப்பி சாதித்து வந்த நிலையில், அதன் வரிசையில் 4 -வது நாடாக இந்தியா இணைந்து இருக்கிறது.

இதிலும் குறிப்பிடத்தக்க சாதனையை என்னவென்றால் மேலே சொல்லப்பட்ட 3 நாடுகளாலும் தொட முடியாத நிலவின் தென் துருவத்தை சந்திரயான் -3 திட்டத்தின் மூலமாக இந்தியா தொட்டு உள்ளது. இவ்ளோ கஷ்டப்பட்டு அனுப்பி.. வெறும் 14 நாள் மட்டுமே ஆய்வு.. ஏன்? பெரிய காரணமே இருக்கு! இதற்காக பல்வேறு தோல்விகளையும் வலிகளையும் இஸ்ரோ சந்தித்து உள்ளது.

இந்தியா விஞ்ஞானிகள் நிலவில் கடந்த 2008 -ம் ஆண்டு இந்தியாவின் கொடியை நாட்ட விரும்பினார்கள். அதன்படி சந்திரயான் -1 விண்கலம் கடந்த 2008 -ம் ஆண்டு நிலவை நோக்கி அனுப்பப்பட்டது. ஆனால், அது தோல்வி அடைந்தது. அதில் இருந்து பாடம் கற்று பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை கொண்டு சந்திராயன் -2 விண்கலத்தை கடந்த 2019 -ம் ஆண்டு தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் நிலவை நோக்கி ஏவினர்.

ஆனால், ரோவர் கருவி தரையிறங்கும்போது நிலவின் மேற்பறப்பில் வேகமாக மோதி வெடித்து சிதறியது. அதன் தொடர்ச்சியாகவே சந்திரயான் -3 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கினர். இம்முறை எந்த நாடுகளுமே தொட்டிடாத நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க முடிவு செய்த இஸ்ரோ அதற்கான முன் ஏற்பாடுகளை செய்து, கச்சிதமான திட்டத்துடன் கடந்த ஜூலை 14 -ம் தேதி சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவியது.

பூமியின் சுற்றுவட்டப்பாதையை பலமுறை சுற்றி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்து அங்கும் சுற்றில் சுமார் 45 நாள் பயணத்தை முடித்து வெற்றிகரமாக இன்று நிலவை தொட்டு இருக்கிறது சந்திரயான் 3 இன் விக்ரம் லேண்டர். எல்லோரும் சந்திரயான் -2 ஐ தோல்வி திட்டம் என்று சொல்லி வருகிறார்கள். ஆனால், அது முழுமையாக தோல்வியடையவில்லை. ரோவர் இறங்கியதில் மட்டும்தான் பிரச்சனையே தவிர சந்திரயான் -2 திட்டத்தால் இன்று வரை இந்தியாவுக்கு பயன்கிடைத்து வருகிறது.

ஆம், சந்திரயான் -3 திட்டம் வெற்றிபெறுவதே சந்திரயான் -2 ஒரு முக்கிய காரணம். அதில் ஏவப்பட்ட ஆர்பிட்டர் இன்றும் நிலவை சுற்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அது தோல்வி அல்ல, வெற்றி படிக்கட்டுகள்.. இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவனை டிரெண்ட் செய்யும் நெட்டிசன்ஸ் நேற்று நிலவை சந்திரயான் -3 நெருங்கியவுடன் அதை வரவேற்றதே சந்திரயான் -2 இன் ஆர்பிட்டர்தான்.

அது சரியாக வேலை செய்து வந்ததால்தான் சந்திரயான் -3 இல் ஆர்பிட்டரையே வைக்காமல் இஸ்ரோ அனுப்பி இருக்கிறது. சந்திரயான் -2 இன் ஆர்பிட்டர் வழங்கிய தெளிவான வழிகாட்டுதல்களால்தான், சந்திரயான் -3 முறையாக நேர்த்தியாக தரையிறங்கி இருக்கிறது குறிப்பிடத்தக்கது. சந்திரயான் -3 வெற்றியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தலைமையிலான குழுவிற்கும் பெரும் பங்கு உள்ளது.

சந்திரயான் -3 வெற்றியில் நாமக்கல் மண் புதைந்து கிடக்கிறது…

இந்தியா கடந்த ஜூலை 22, 2019-ம் ஆண்டு நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் -2 விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திராயன் 2-ல் இருக்கும் ஆர்பிட்டர் அதே வருடம் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி நிலவின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது. ஆனால் அதன் லேண்டர் விக்ரம் தரையில் இறங்கும் முன் 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. 3 மாதமாக இஸ்ரோ தீவிரமாக தேடியது அனாலும் பலனில்லை நிலவின் தென் துருவ பகுதியில் சந்திரயான் 2-ன் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியதை நாசாவின் LROC (Lunar Reconnaissance Orbiter) விண்கல ஆய்வு கருவி மூலம் கண்டுபிடித்தது.

சந்திரயான் 2-ன் லேண்டர் இறங்காத காரணத்தால் உள்ளே இருக்கும் ரோவரும் வெடித்து சிதறியது. ஆனாலும் இந்த திட்டம் முழு தோல்வி கிடையாது. காரணம் ஆர்பிட்டர் வெற்றிகரமாக அடுத்த ஒன்றரை வருடம் நிலவை சுற்றியது. இதையடுத்து விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டையும் மீண்டும் நிலவில் வெற்றிகரமாக களமிறக்கும் திட்டத்தில் இஸ்ரோ களமிறங்கியது. சந்திரயான் -3 திட்டத்தில் சந்திரயான் -2ல் இருந்தது போல ஆர்பிட்டர் இருக்காது. மாறாக விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டு மட்டுமே உள்ளது.

இதில் ப்ரோபல்ஷன் மாடல் என்ற ஒரு உந்த கூடிய ப்ரோபல்ஷன் என்ற பகுதியும் உள்ளது. இதுதான் இந்த லேண்டர், ரோவரை நிலவிற்கு கொண்டு செல்லும். இன்று மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது. இதற்கு இந்த சந்திரயான் -3 திட்டத்தின் ரோவர் மற்றும் லேண்டர் நிலவின் தரையில் தரையிறங்குவதற்காக இங்கேயே இஸ்ரோ ஆய்வு மையங்களில் பயிற்சிகள் செய்யப்பட்டன. இந்த இரண்டும் நிலவில் இறங்குவதற்காக பூமியில் வைத்து சோதனைகள் செய்யப்பட்டது.

இதனால் இஸ்ரோ பூமியிலேயே நிலவு போன்ற சுற்றுசூழலை ஏற்படுத்தி ஆராய்ச்சி கூடத்தில் வைத்து ஆராய்ச்சியை செய்தது. அதாவது ஆராய்ச்சி கூடத்தில் நிலவில் இருப்பது போலவே ஈர்ப்பு விசை வைத்து, அங்கு இருக்கும் வாயுக்களை மட்டும் பயன்படுத்தி,மிக மிக குளிரான வானிலையில், விக்ரம் லேண்டர் சரியாக இறங்குகிறதா என்று சோதனை செய்தது. இதற்காக நிலவில் இருப்பது போல தரையும், மண்ணும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே நிலவில் ஆராய்ச்சி செய்ய சந்திரயான் -1ஐ அனுப்பிய போது இஸ்ரோ நாசாவிடம் இருந்து மண் வாங்கியது. இது நிலவில் இருப்பதை போலவே இருக்கும் மண் ஆகும். ஒரு கிலோ 150 டாலர் என்ற வீதம் மொத்தம் 10 கிலோ மண்ணை இஸ்ரோ வாங்கியது. ஆனால் சந்திரயான் -2விற்கு 60 கிலோ வரை இந்த மணல் தேவைப்பட்டது. பட்ஜெட் காரணங்களால் இந்தியா நாசாவிடம் இருந்து மணல் வாங்கவில்லை, அதற்கு பதிலாக நாமக்கல் பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களில் இருந்து இஸ்ரோ மண் வாங்கி உள்ளது. அதே மண்ணைதான் இப்போது சந்திரயான் -3 திட்டத்திற்கும் இஸ்ரோ பயன்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் சிட்டாம்பூண்டி, குன்னமலை ஆகிய கிராமங்களில் இருந்து மண் வாங்கி உள்ளது. இங்கு இருக்கும் பாறைகளை வாங்கி, அதை சேலத்தில் உள்ள தொழிற்சாலையில் தூளாக நொறுக்கி உள்ளனர். அதன் மூலம் கிடைத்த மண் நிலவில் இருக்கும் மணலை போலவே இருந்துள்ளது. பின் அதை வைத்து வைத்து ஆராய்ச்சியை, சோதனையை செய்து பார்த்து இருக்கிறார்கள். தற்போது சந்திரயான் -3 விண்ணில் ஏவப்பட்டு, நிலவில் இறங்க உள்ளது.

தாய் பத்திரம் தொலைஞ்சு போயிடுச்சா? 6 விஷயங்களை கவனமா பாருங்க… மூலப்பத்திரத்தை மீண்டும் பெற..

சுமார் 100 வருடங்களுக்குமுன்பு, யார் அந்த சொத்தின் ஓனர்? அவருக்கு இந்த சொத்து எப்படி? எந்த பத்திரம் அல்லது அரசு ஆவணம் என்பதெல்லாம் அடங்கியது. 100 அல்லது 200 வருடங்களுக்கு முந்தைய பத்திரங்கள் என்பதால் அது காணாமல் போக நிறைய வாய்ப்புகள் உண்டு.. எனினும், பத்திரப் பதிவு அலுவலகத்தில் பணம் கட்டி விண்ணப்பித்தால் மறுபடியும் அதிகாரபூர்வமான, ஒரிஜினலுக்கு இணையான, பத்திரம் பெறலாம்.. அதேசமயம், உங்களிடம் உள்ள சொத்துக்களை அடகு வைக்கவோ அல்லது விற்கவோ நினைத்தால் அதற்கான பத்திரம் தான் முக்கிய ஆதாரமாக உள்ளதால், அசல் ஆவணங்களை பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும்.

ஒருவேளை, தாய் பத்திரம் தொலைந்துவிட்டால் என்ன செய்வது தெரியுமா? வீட்டு தாய் பத்திரம் எந்த ஊரில் தொலைந்ததோ, அந்த ஊரிலுள்ள காவல் நிலையத்தில் உடனே பத்திர விவரத்தை குறிப்பிட்டு, “காணவில்லை” என்று புகார் தர வேண்டும். அப்போது, பணியில் இருக்கும் காவல் அதிகாரியின் கையொப்பம் மற்றும் காவல் நிலைய முத்திரையுடன் புகார் பெற்றுக்கொண்ட ரசீதை கட்டாயம் பெற வேண்டும்.

பிறகு அவர்களும் 2, 3 நாட்கள் தேடிபார்க்க சொல்வார்கள். அதன் பிறகும் கிடைக்க வில்லை என்றால் காவல் நிலையத்திலேயே எப்ஐஆர் பதிவு செய்வார்கள்.. இந்த முதல் தகவல் அறிக்கையை பெற்றுக் கொள்ள வேண்டும். காணாமல் போன ஆவணத்தை யாராவது கண்டெடுத்து, வந்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார்களா? என்று காவல்துறையினரும் பார்ப்பார்கள்.. அத்துடன் அதுகுறித்து விசாரிக்கவும் செய்வார்கள்.

அப்படியும், தாய் பத்திரம் கிடைக்காவிட்டால், “கண்டுபிடிக்க முடியவில்லை” (Non Tracable) என்று காவல்துறை சான்றிதழ் தருவார்கள்.. இந்த சான்றிதழுடன், ஒரு வழக்கறிஞரை அணுக வேண்டும். உடனே வழக்கறிஞரும், பத்திரத்தை காணவில்லை என்றும், கண்டெடுப்போர் குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வார். அதாவது, ஒன்று தமிழ், இன்னொன்று ஆங்கிலம் என இரு மொழிகளிலும் 2 பிரபலமான பத்திரிகைகளில் விளம்பரம் செய்வார்.

இந்த விளம்பரம் செய்து 15 நாட்களுக்குள் ஆவணங்கள் வழக்கறிஞருக்கு கிடைக்கும்பட்சத்தில், அதை உங்களிடம் ஒப்படைப்பார். அப்படியும் ஆவணங்கள் கிடைக்காவிட்டால், ஆவணத்தின் நகலை (Certified copy) சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பெற்று, விளம்பரம் செய்த பத்திரிகையுடன் இணைத்து, ஒரு சான்றிதழை வழக்கறிஞர் தருவார். அதை நீங்கள் பெற்று, சம்பந்தப்பட்ட சொத்தினை எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் அனுபவிக்கலாம்.

ஆனால், பத்திரம் தொலைந்த இடத்தை வாங்கியவர் மேற்படி, FIR, NOT TRACEBLE சான்றிழ், நாளிதழில் விளம்பரம், நோட்டரி அவிடவிட் போன்றவை இருந்தாலும் பத்திரம் வேறு ஏதாவது அடமானத்தில் இருக்கிறதா என்பதையும் கள விசாரணை செய்து கொள்ள வேண்டும்.

மொத்தத்தில், நோட்டரி உறுதி மொழி பத்திரம், பத்திரிகை விளம்பரம் நகல், காவல் நிலையத்தில் புகார் மனு, எப்ஐஆர், NOT TRACEBLE சான்றிதழ் இப்படி 6 ஆவணங்களும் கையில் இருந்தால்தான், நீங்கள் பெற்றிருக்கும் “நகல் பத்திரம்”, தொலைந்துபோன ஒரிஜினல் ஆவணங்களுக்கு பதிலாக பயன்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

திமுக எம்எல்ஏ பரந்தாமன் பதிலடி: நிர்மலா சீதாராமன் புரிதல் இல்லாமல் யாரோ எழுதிக்கொடுத்ததை பேசுகிறார்..!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தமிழர்கள் பற்றி சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திராவிடம் பற்றி எல்லாம் குறிப்பிடப்படவில்லை மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் சேலை இழுக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டது.. என்பது மாதிரியான கருத்தையும் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த இரண்டு விஷயங்கள் குறித்து எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஐ பரந்தாமன் பதில் கூறுகையில், ” மணிப்பூரில் நடந்த மனிதாபிமானமற்ற, இந்திய நாடே வெட்கப்படக்கூடிய மிகப்பெரிய மோசமான ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அதை பற்றி மத்திய அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காதது குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் மணிப்பூர் சென்று பார்வையிட்டு வந்த பின்னர், பிரதமர் நரேந்திர மோடியின் மீது, இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தார்கள். அதன் மீது நடைபெற்ற விவாதத்தில் பேசினார்கள்.

அப்போது மத்திய அரசு எங்கெல்லாம் தவறு செய்கிறது.. ஜிஎஸ்டி வரி விதிப்பால் நாட்டுக்கு எப்படி பாதிப்பு ஏற்படுகிறது.. மொழி திணிப்பால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஏதேச்சதிகாரம், ஒரே நாடு ஒரே மொழி இது மாதிரி எல்லாம் இந்திய ஜனநாயகத்திற்கு எதிராக செய்து கொண்டு வருகிறார்கள் என்று திமுக எம்பி கனிமொழி பேசினார். அப்போது அவர் நீங்க இந்தி மொழியை திணிக்கிறீர்கள்.. இந்தியாவின் பிற மொழிகளையும் பாருங்க என்பது தான் கனிமொழி பேச்சின் அர்த்தமாக இருந்தது.

தமிழில் உள்ள இலக்கியத்தை படிங்க.. உதாரணத்திற்கு சிலப்பதிகாரத்தை பாருங்கள் என்று மேற்கோள் தான் காட்டினார். சட்டசபையில் ஜெயலலிதா சேலையை திமுகவினர் பிடித்து இழுத்ததாக நிர்மலா சீதாராமன் பேச்சு.. சம்பவம் உண்மையா ? ஆனால் இன்றைக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும் போது , மணிப்பூர் சம்பவத்தை பற்றி மருத்துக்குக் கூட பேசவில்லை. மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று பேசவில்லை.. அதைவிட்டுவிட்டு அரசியல் மேடை போல் அவையை மாற்றி உள்ளது பாஜக அரசாங்கம்.. வடக்கே வேங்கடமும், தெற்கே குமரியும் தெற்கிலும், கிழக்கிலும் கடலும் தமிழகத்தின் எல்லைகளாக இருந்தது என்று பாடப்புத்தகத்தில் மாணவர்கள் படிக்கிறார்கள்.

இதில் மாபொசியின் விளக்கத்தை சொன்னார்கள் .. மொழி வாரியாக மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு எல்லைகள் மாறி உள்ளது. ஆனால் சிலப்பதிகாரத்தில் சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது என்று கற்பனையான ஆதாரமற்ற விஷயத்தை எழுதி கொடுத்ததை நிர்மலா சீதாராமன் படித்துள்ளார். இந்தியா என்ற சப்ஜெக்ட் எல்லாம் சிலப்பதிகாரம் காலக்கட்டத்தில் இல்லை.. பல சமஸ்தானங்கள் இருந்தது. வெள்ளையர்கள் வசதிக்காக இந்தியா என்று நிர்வாக ரீதியாக உருவாக்கப்பட்டது.

நிர்மலா சீதராமன் புரிதல் இல்லாமல் பட்ஜெட். வரி உள்பட பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார் என்று பார்த்தால், வரலாறு குறித்தும் அரசியல் குறித்தும் புரிதல் இல்லாமல் யாரோ எழுதிக்கொடுத்ததை பேசுகிறார். இரண்டாவது ஜெயலலிதா சப்ஜெக்ட்டை எடுத்ததே மிகப்பெரிய அநாகரீகம்.. சாதாரண சாமானிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.. பெண்கள் வல்லுறவுக்கு ஆக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்கள் வெளிப்படையாக மானபங்கம் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அதை பற்றி பேசுவதற்கு கொஞ்சம் கூட நாகரீகம் தெரியாமல் , நிர்மலா சீதாராமன், அரசியல் நாடகம் செய்த ஜெயலலிதாவின் செயலை, அதாவது ஜெயலலிதாவின் அரசியல் விளையாட்டை போய் பேசுவது, இவர்களின் சிறு புத்தி மற்றும் சிறுபிள்ளைத்தனமாகும். ஒன்றுமே இல்லை நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பிளையிங் கிஸ் கொடுத்ததாக பாஜக எம்பிக்கள் கூறினார்கள் அவர்களிடம் எப்படி தரமான வாதத்தை பார்க்க முடியும்” என்று திமுக எம்எல்ஏ பரந்தாமன் கூறினார்.

உஷாரய்யா..! உஷார்..!! அதிகம் சம்பாதிக்க ஆசைப்பட்டு ‘டார்க் கிரிமினல்’களின் மோசடியில் பணத்தை இழக்க வேண்டாம்… ஆன்லைன் கிரைம்

உலக அளவில் மனிதர்களின் செயல்பாடுகளை இணைய வசதி வேகப்படுத்தியதன் விளைவு இன்று இணையத்தின் பயன்பாடுகள் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை தாண்டி எதிர்மறை செயல்பாடுகளையும் செய்து கொண்டுள்ளது.கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டெலி கிராம் போன்ற பொதுமக்கள் மத்தியில் அதிகம் பயன்பாட்டில் இருக்கும் தளங்கள் மூலம் குற்றச் செயல்பாடுகளும் அதிகரித்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

நாளுக்கு நாள் சமூக வலைதள குற்றங்களின் வடிவங்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. அதனை பயன்படுத்தும் வலைதள பயனாளர்கள் நூதன மோசடிகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டாமல் இருப்பதும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகவும் இருக்கிறது என்று காவல் துறையினர் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் மூலமான பாலியல், மிரட்டல் தொடர்புடைய குற்றங்களை தாண்டி தற்போது தகவல் திருட்டு,பண மோசடி குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் சமீப நாட்களில் ஆன்லைனில் பகுதி நேர வேலையில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பல படித்த இளைஞர்கள், தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் புகார் அளிக்க வரிசையில் காத்திருக்கின்றனர்.

படிக்காதவர்கள் ஏமாறும் காலம் போய் படித்தவர்களே பல லட்சங்களை இழக்கும் நிலை குறித்து விசாரித்ததில் ‘டார்க் கிரிமினல்’-கள் குறித்த தகவல் தெரிய வந்துள்ளது. இதுவரை நடைபெற்ற சைபர் பண மோசடி குற்றங்களில் ‘டார்க்-கிரிமினல்’ யாரும் சிக்கவில்லை எனபது அதிர்ச்சியான தகவலாக உள்ளது. கம்ப்யூட்டர், இணைய சேவை வசதி இருந்தால் வி.பி.என் தொழில்நுட்பம் மூலம் மோசடி குற்றங்களை அரங்கேற்றி ‘டார்க் கிரிமினல்’கள் பணத்தை சுருட்டி வருகின்றனர்.

இளைஞர்கள் பலர் அதிகம் சம்பாதிக்க தங்களது நேரத்தை அதிகம் செலவழிக்க தயாராக இருக்கின்றனர். இவர்கள்தான் ‘டார்க் கிரிமினல்’களின் இலக்காக மாறுகிறது. வாட்ஸ்-அப் எண்களுக்கு வரும் குறுஞ்செய்திகள்தான் சைபர் மோசடிகளின் முதல்படி. அதை நம்பும் இளைஞர்கள் குறுஞ் செய்தியில் இருக்கும் இணைப்பு வழியாகச் சென்றால் சுலபமான வேலையை கொடுத்து பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறுகின்றனர்.

அது உண்மையா என்று நம்புவதற்காக முதலில் 1,000 ரூபாயில் தொடங்கும் முதலீட்டுக்கு லாபம் அதிகம் கிடைத்ததும் அது லட்சங்களில் முதலீடாக மாறுகிறது. அதன் பிறகுதான் ‘டார்க் கிரிமினல்’களின் வேலை ஆரம்பிக்கிறது. அவர்கள் நமக்கு காட்டும் லாப கணக்கு பணத்தை வங்கிக் கணக்குக்கு மாற்றவே முடியாது என்பதுதான் உண்மை. அந்த பணம் ஏற்கெனவே ‘டார்க் கிரிமினல்’களின் கைகளுக்கு மாறியிருக்கும்.

சமீபத்தில் தனியார் கல்லூரி பேராசிரியரின் வங்கிக் கணக்கு பெங்களூரு காவல் துறையால் முடக்கப்பட்டது. அது குறித்து அவர் விசாரித்தபோது ‘டார்க் கிரிமினல்’களிடம் பகுதி நேர வேலை செய்து வரும் அவரது வங்கிக் கணக்கை ‘டார்க் கிரிமினல்’கள் பயன்படுத்தி பெங்களூருவைச் சேர்ந்த நபரின் பணத்தை கை மாற்றியுள்ளனர்.

கணிசமான கமிஷனுக்காக ஆசைப்பட்டு அவரது வங்கிக் கணக்கை ‘டார்க் கிரிமினல்’கள் பயன்படுத்த கல்லூரி பேராசிரியர் அனுமதித்தது தான் காரணமாக இருந்துள்ளது. அதுவும் பெங்களூருவைச் சேர்ந்த 18 பேரின் பணம் பேராசிரியரின் வங்கிக் கணக்கு வழியாக கை மாறி இருக்கிறது. கடைசியில் பேராசிரியரும் டார்க் கிரிமினல்களிடம் பணத்தை இழந்ததுடன் அவரது வங்கிக் கணக்கும் கருப்பு பட்டியலில் சேர்ந்துவிட்டது.

சைபர் மோசடி குற்றங்கள் குறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘கடந்த சில மாதங்களாக பகுதி நேர வேலை எனக்கூறி டெலிகிராம் செயலி வழியாக பணத்தை இழந்தவர்களின் புகார்களின் எண்ணிக்கை 80 சதவீதமாக இருக்கிறது. யாருமே பகுதி நேர வேலைக்கு ஆசைப்பட்டு உங்கள் பணத்தை இழக்க வேண்டாம். மோசடியில் ஈடுபடும் ‘டார்க் கிரிமினல்’களை கண்டுபிடிப்பதில் சவால்கள் நிறைய உள்ளன. அவர்கள் பயன்படுத்தும் சிம் கார்டுகளின் பயன்பாடு பல மாநிலங்களில் தென்படுகிறது.

உதாரணமாக வேலூரில் ஏமாற்றப் படும் பணம் 4 அல்லது 5 மாநில வங்கிக் கணக்குகள் வழியாக கைமாறுகிறது. பணம் எடுக்கப்பட்ட கடைசி வங்கிக் கணக்கை கருப்பு பட்டியலில் கொண்டு வந்தால் அது டார்க் கிரிமினல்களிடம் ஏமாந்த ஒரு நபரின் கணக்காக இருக்கிறது. அந்த கணக்கிற்கு வரும் சில லட்சங்கள் பணத்தை மீட்க பல மாநில காவல் துறையினர் காத்திருக்கின்றனர். அதிகம் சம்பாதிக்கலாம் என்று யார் கூறினாலும் நம்ப வேண்டாம்’’ என்று தெரிவிக்கின்றனர்.

நீல சூப்பர் மூன்.. நைட் வானத்தை பாருங்க..

இந்த பிரபஞ்சம் பல ஆச்சரியங்களை உள்ளடக்கியது. பல நேரங்களில் வானில் ஏற்படும் பல மாற்றங்கள் நம்மை வியக்க வைக்கும். இதுபோன்ற நிகழ்வுகளை ஒரு முறை நாம் மிஸ் செய்தால் அதன் பிறகு இதைப் பார்க்கப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருக்கும். அப்படியொரு ஆச்சரியமான நிகழ்வு தான் இப்போது நடக்க உள்ளது. இதை நீங்கள் மிஸ் செய்தால் மீண்டும் இதைப் பார்க்க 9 ஆண்டுகளுக்கு மேலாகக் காத்திருக்க வேண்டுமாம். நமது பூமியின் ஒரே துணைக்கோள் நிலவு. இது பூமியில் இருந்து பல லட்சம் கிமீ தொலைவில் சுற்றி வருகிறது. இதற்கிடையே இந்த ஆகஸ்ட் மாதம் சந்திரன் மிகவும் பெரியதாகவும் பிரகாசமாகவும் தெரியுமாம்.

நேற்றைய தினம் நிலவைப் பார்த்திருந்தால் கவனித்திருக்கலாம். வானில் சூப்பர் மூன் (supermoon) தெரிந்திருக்கும். இதை மிஸ் செய்துவிட்டால் கவலைப்படாதீர்கள். இம்மாத இறுதியில் இதை விட அரிய நீல சூப்பர் மூன் தெரியுமாம். பூமி எப்படி சூரியனைச் சுற்றுகிறதோ.. அதேபோலத் தான் நிலவும் நமது பூமியைச் சுற்றி வருகிறது. இது அனைவருக்கும் தெரியும்.. அப்படிச் சுற்றி வரும் போது பூமிக்கு மிக அருகில் நிலவு வரும் நிகழ்வு தான் சூப்பர் மூன் என்று அழைக்கப்படும். நிலவின் சுற்றுப்பாதையில் பூமிக்கு அருகில் இருக்கும் போது இந்த நிகழ்வு நிகழ்கிறது. இந்த நிகழ்வில் வழக்கத்தைக் காட்டிலும் நிலவு பெரிதாகவும் பிரகாசமானதாகவும் இருக்கும்.

இந்த மாதம் முழுக்கவே நிலவு சற்று பெரிதாகவும் பிரகாசமாகவுமே தெரியும். இது வழக்கமான முழு நிலவைக் காட்டிலும் 8% பெரியதாகவும் 16% பிரகாசமாகவும் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் 3 அல்லது 4 முறை மட்டுமே பூமிக்கு நிலவுக்கு மிக அருகில் வரும். அதைத்தான் நாம் சூப்பர் மூன் என அழைக்கிறோம். இந்த சூப்பர் மூன் நிகழ்வு கடைசியாக ஜூலை 3-ம் தேதி நடந்தது. இந்தாண்டு மொத்தம் சூப்பர் மூன் நிகழ்வுகள் நடக்க உள்ளது. அதில் இரண்டு சூப்பர் மூன் நிகழ்வு இந்த மாதத்திலேயே நடக்குமாம்.

முதலாவது சூப்பர் மூன் நேற்று இரவு வந்துள்ள நிலையில், அடுத்து அரிதான சூப்பர் மூன் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வர உள்ளது. இதை மிஸ் செய்தால் பிறகு மீண்டும் இதைக் காண 2032 வரை காத்திருக்க வேண்டும். “சூப்பர் மூன்” என்பது பூமிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறது என்பதைக் குறிக்கிறது என்றால் நீல நிலவு எத்தனை முறை நிலவு நமது பூமியைச் சுற்றி வருகிறது என்பதைக் குறிக்கும். பொதுவாகச் சந்திரன் பூமியைச் சுற்றி வர 27.3 நாட்கள் ஆகும். அதேநேரம் ஒரு காலண்டர் மாதத்தில் இரண்டாவது முறையாக முழு நிலவு இருக்கும் போது அதை நாம் நில நிலவு எனக் குறிப்பிடுகிறோம். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒரே மாதத்தில் இரண்டு முறை பவுர்ணமி வரும் போது அதை நாம் நீல நிலவு என்று குறிப்பிடுகிறோம்.

நீல நிலவு என்பது 2, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு என்றாலும் கூட, சூப்பர் மூன் நிகழ்வின் போது இந்த நீல நிலவும் வருவது அதிசயம் தான். கடைசியாக டிசம்பர் 2009-ம் ஆண்டு தான் இந்த நீல சூப்பர் மூன் வந்துள்ளது. இப்போது மீண்டும் இந்தாண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி இது நிகழவுள்ளது. அன்றைய தினம் நிலவு மிகவும் பொரியாகவும் பிரகாசமானதாகவும் இருக்குமாம்.

வீட்டில் இருந்தபடியே தினமும் சம்பாதிக்க.. புதிய வகை மோசடி…

வெளிநாட்டில் இருந்து வேலை கொடுப்பதாக கூறி ஒர்க் ஃப்ரம் ஹோம் என்று சொல்லி ஆன்லைன் மூலம் நம்முடைய பணத்திற்கு ஆப்பு வைக்கின்ற மோசடி கும்பல் புதுவகை மோசடி அரங்கேறி வருகிறது. ஒருத்தரை ஏமாற்ற வேண்டும் என்றால் முதலில் அவரது ஆசையை தூண்ட வேண்டும் என்று சொல்வார்கள். இன்று ஆன்லைனில் பணம் திருடும் மோசடி கும்பல் பலரும் பலருக்கும் ஆசையை விதைத்து பணத்தை அறுவடை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆன்லைன் லோன் ஆப்கள் ஒருபக்கம் ஏற்றி வருகிறது என்றால் இப்பொது புதுவிதமாக வேலை தேடுபவர்களை குறிவைத்துள்ளது மற்றொரு கும்பல். குறிப்பாக வீட்டில் இருந்தே வேலை பார்க்க நினைப்பவர்களை குறி வைத்து இந்த மோசடி கும்பல் ஆன்லைன் மூலம் வலை விரிக்கிறது. இணையதளத்தில் பண மோசடி செய்து வரும் சைபர் கிரைம் குற்றவாளிகள் தற்போது புதிய வகை யுக்தி ஒன்றை கையாண்டு வருகிறார்கள். உங்களின் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் அப்பிற்கு ஒரு லிங்க் உடன் தகவல் அனுப்புகிறார்கள்.

அதில் நீங்கள் வேலை தேடும் நபர் என்பதை அறிகிறோம், எங்கள் நிறுவனம் அமெரிக்காவில் உள்ளது அதில் உங்களுக்கு பணியாற்ற விருப்பம் இருந்தால் வீட்டில் இருந்தபடியே தினமும் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் என கூறப்படுகிறது. இந்த லிங்கை தொட்டால் telegram செயலியில் உள்ள குழுவில் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். அதன்பிறகு எங்கள் நிறுவனத்தில் இணைந்ததற்கு நன்றி நாங்கள் பதினைந்து வகையான மிகவும் எளிதான டாஸ்க்குகளை தருகிறோம் அதில் வெற்றி பெற்றால் 30 சதவீதம் கமிஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

முன்பணமாக 500 ரூபாய் வரை வங்கி கணக்கிற்கு அனுப்புகிறோம் எனவும் உங்கள் வங்கி கணக்கு ஐஎஃப்எஸ்சி கோட் உள்ளிட்ட விவரங்களை அனுப்பும்படி கேட்கிறார்கள். அதன் பிறகு ஆயிரம் ரூபாய் செலுத்துங்கள் கமிஷன் தொகையுடன் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறி முன்பணம் கொடுத்த பிறகு உங்களிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை சுருட்டி விட்டு தொடர்பை துண்டித்து விடுவார்கள்.

இந்த மோசடி அதிக அளவு பெண்கள் மற்றும் வேலை தேடும் வரை குறி வைத்து அரங்கேறிக் கொண்டிருக்கிறது. எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் பல மோசடி தொடர்பாக உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் சைபர் கிரைம் காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.

இடம் வாங்கி போட்டிருந்தால், அவ்வப்போது உங்கள் நிலத்தை போய் பாருங்க..!

சென்னையில் இடம் வாங்கி போட்டிருந்தால், அவ்வப்போது உங்கள் நிலத்தையும் கண்காணித்து கொண்டே இருங்கள் அந்த நிலத்திற்கு முறையாக பட்டா பெற்று வைத்துக்கொள்ளுங்கள். போலி பவர் பத்திரத்தை தயாரித்து உங்களுக்கே தெரியாமல் யாராவது உங்கள் நிலத்தை மோசடியாக விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. இன்று சென்னை அம்பத்தூர் லெனின் நகர் 20-வது குறுக்குத் தெருவில் வசித்துவரும் ஆந்திர மாநில சேர்ந்த ராஜாராம் என்பவர் ஊறுகாய், முறுக்கு, பிஸ்கட் தயாரித்து கடைகளுக்கு வினியோகம் செய்து விற்பனை செய்து வருகிறார்.

ராஜாராம் உழைப்பால் சென்னை கொரட்டூர், மூகாம்பிகை நகரில் சுமார் 4800 சதுர அடி நிலத்தை வாங்கி போட்டிருந்தார். இந்நிலையில் கொரட்டூர், மூகாம்பிகை நகரில் இருந்த நிலங்கள் 2 வீட்டு மனைகளாக மாறி இருந்திருக்கிறது. ஆள்மாறாட்டம் செய்து விற்பனை செய்யப்பட்டு இருப்பதும் உறுதியானது. இதை கண்டு ராஜாராம் அதிர்ச்சி அடைந்தார். விஜி என்பவர் போலியான ஆவணங்கள் மூலம் பவர் பெற்று அதன் மூலம் மோசடி செய்ததை கண்டுபிடித்தார்.

இதுபற்றி புகார் அளிக்க ஆவடி காவல் கண்கணிப்பாளர் அலுவலகத்திற்கு போன ராஜாராம் அங்கிருந்த மத்திய குற்றப்பிரிவுக்கு பத்திர மோசடி குறித்து புகார் கொடுத்தார். இதையடுத்து புகாரை ஏற்று ஆவடி காவல் கண்கணிப்பாளர் சங்கர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன் பேரில், உதவி கண்கணிப்பாளர் பொன்சங்கர் தலைமையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மத்திய குற்றப்பிரிவு காவல்துறை நடத்திய விசாரணையில் அரியலூர் மாவட்டம், சின்ன வளையம், குடியாத்தம் தெருவை சேர்ந்த ஜோதி என்பவருடைய மனைவி விஜி தான் மோசடி செய்தது தெரியவந்தது. எப்படிப்பட்ட மோசடி என்றால், ராஜாராமின் தங்கை விஜி என போலியான ஆவணம் தயாரித்து, அதன்மூலம் ராஜாராம் தனது தங்கை விஜிக்கு பவர் கொடுத்ததாகவும் மாற்றி இருக்கிறார்.

அதன் பின்னர் விஜி அதை வைத்து சென்னை கொளத்தூர் திருமலை நகரை சேர்ந்த கொத்தசுப்புராயுடு, ஆந்திர மாநிலம் மதில்மேடு பொன்னியம்மன் தெருவை சேர்ந்த பழனி மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் அஜய் ஆர்சாட் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி ஆகிய 3 பேருக்கும் ராஜாராமுக்கு சொந்தமான 2 வீட்டுமனைகளையும் 3 ஆக பிரித்து விஜி விற்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை விஜியை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

பொதுமக்களுக்கு தமிழ்நாடு சைபர் கிரைம் எச்சரிக்கை..!

வாட்ஸ் ஆப் செயலிக்கு மாற்றாக வாட்ஸ் ஆப் செயலியை விட வேகம், குறைந்த டேட்டா பயன்படுத்துவது, அதிக மெசேஜ் அனுப்ப முடியும் போன்ற வசதிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டதான் டெலிகிராம். இந்த டெலிகிராமில் பல ஜீபி பைல்களை எளிதாக அனுப்ப முடியும். அதனால் இதை மெசேஜிங் தளமாக பயன்படுத்துவது போய் பைரஸி தளமாக பயன்படுத்த தொடங்கி உள்ளனர். பல்வேறு பைரஸி வெப்சைட்களை அடித்து நொறுக்கி இந்த தளம் பைரஸி வீடியோக்களில் முதலிடம் பிடித்து உள்ளது.

புதிதாக வெளியாகும் பெரும்பாலான படங்கள் எல்லாம் எளிதாக இந்த டெலிகிராமில்தான் வெளியாகிறது. ஏன் வெப் சீரிஸ் தொடர்கள் கூட டெலிகிராமில்தான் இலவசமாக வெளியாகிறது. இதை எல்லாம் தடுக்க முடியாமல் திரைத்துறை நிறுவனங்களும், ஓடிடி நிறுவனங்களும் திணறி வரும் அளவிற்கு டெலிகிராம் பயன்பாடு உள்ளது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் டெலிகிராமில் ஆபாச படங்களுக்கு என்றும் பல தளங்கள் உள்ளன. முக்கியமான விஷயம் டெலிகிராமில் வீடியோ விற்பனை செய்வது மிகப்பெரிய வியாபாரம் ஆகி உள்ளது. டெலிகிராமில் ஆபாச வீடியோக்களை விற்பனை, பெண்களை வீடியோ எடுத்து குறிப்பிட்ட தொகைக்கு விற்பனை செய்வது, சிறுமிகள், பெண்கள் ஆகியோரின் பாலியல் வீடியோக்களை காசுக்கு விற்பது பெரிய தொழில் ஆகி உள்ளது.

இவ்வளவு பணம் கொடுத்தால் இந்த வீடியோ ஒன்று பெண்களின் வீடியோக்களை பலர் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில்தான் டெலிகிராமில் பல்வேறு குழுக்களில் இருக்கும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்று தமிழ்நாடு காவல்துறையினர் மூலம் விடப்பட்டு உள்ளது.

சமீபத்தில் சென்னையை சேர்ந்த தமிழ் மாறன், ஈரோட்டை சேர்ந்த ஆர்யா என்ற இரண்டு இளைஞர்களை காவல்துறை கைது செய்தனர். இவர்கள் இருவரும் ஐடி ஊழியர்கள் ஆவர். இவர்கள் பொது இடங்களில் நிற்கும் பெண்களை புகைப்படம் எடுப்பது. வீடியோ எடுப்பது போன்ற வேலைகளை செய்துள்ளனர்.

இதை டெலிகிராமில் குழு தொடங்கி காசுக்கு விற்று உள்ளனர். ஆபாச கமெண்ட் செய்து, இந்த வீடியோக்களுக்கு இவ்வளவு என்று தொகை நிர்ணயம் செய்து விற்பனை செய்துள்ளனர். வணிக வழக்கம், பல்பொருள் அங்காடி, மால்கள், பேருந்து நிலையங்களில் இருக்கும் பெண்களை புகைப்படம் எடுத்துள்ளனர். அதோடு ஐடி நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்களையும் புகைப்படம் எடுத்துள்ளனர்.

அவர்களுடன் நட்பாகி, அவர்களுடன் நெருக்கமாகி இருப்பது போலவும் புகைப்படம் எடுத்துள்ளனர். இதை எல்லாம் டெலிகிராமில் காசுக்கு விற்று உள்ளனர். இந்த நிலையில்தான் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில்தான் பெண்களை புகைப்படம், வீடியோ எடுத்து ஆபாசமாக அதை இணையத்தில் வெளியிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை உத்தரவிட்டு உள்ளனர். அதேபோல் இது போன்ற குழுக்களில் மக்கள் இருக்க கூடாது. மீறி இருந்தால் குழுவில் இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.