ஒரே ஒரு படிப்பை மட்டும் லட்சியமாகக் கொண்டு வாழ்வது சாதனை அல்லவென்றும், “மருத்துவம் மட்டும்தான் படிப்பா, வேறு படிப்பே இல்லையா?” என்று குறிப்பிட்டும் விஜய் பேசியது சமூக வலைதளங்களில் மேற்கோள் காட்டி சென்னையில் எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், “ஒரு குழந்தை நான்கு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு முயற்சி செய்தது. நாங்கள் ‘நீட் வேண்டாம்’ என்று சொல்வதற்கான காரணம் இதுதான். நான்கு ஆண்டுகள் முயற்சி செய்த பிறகும், நான்காவது ஆண்டில் கூட அந்த மாணவிக்கு மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்கவில்லை.
இன்று அதிக மதிப்பெண்கள் பெற்று பலர் பொறியியல் படிக்கிறார்கள். ஆனால், பொறியியல் பட்டம் முடித்த பிறகு அதற்கேற்ற தொழில்முறை மதிப்பும், வேலைவாய்ப்பும் அனைவருக்கும் கிடைக்கிறதா என்றால் இல்லை. தற்போது திறமையான தச்சர்களுக்கே அதிக தேவை உள்ளது. இன்று ஒரு தச்சரை வேலைக்கு அழைக்க வேண்டும் என்றாலும், குறைந்தது ஒரு வாரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அவர்களுக்கான தேவை மிகவும் அதிகமாக உள்ளது.
எனவே, எல்லா தொழில்களுக்கும் மதிப்பும் தேவையும் இருக்கிறது. ஒவ்வொரு தொழிலையும் ஒரு நல்ல வேலைவாய்ப்பாகவும், ஒரு மதிப்புமிக்க தொழிலாகவும் கருத வேண்டும்.” என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாரின் பேச்சு சமூக வலைதளங்களில் விவாதங்களையும் எதிர்வினைகளையும் பெற்றுள்ளது.
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாரின் பேச்சுக்கு ஒரு நெட்டிசன், “நிர்மல் குமார் தான் பெத்த புள்ளைய பிளம்பர், கார்பெண்ட்டர் துறைக்கு அனுப்பலாமே, விஜய் தான் பெத்த புள்ளைய அந்த துறைக்கு அனுப்பலாம். ஊரான் வீட்டு பிள்ளைகளை அதை செய்ய சொல்லும் போதே கேடுகெட்ட அழுக்கு புத்தி வெளியே தெரிகிறது” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மற்றொரு நெட்டிசன், பிளம்பர் எலக்ரீசியன் வேலை டிமான்ட் இருக்குன்னா நீங்கள் அமைச்சராக இருந்து என்ன பண்ணுணீங்க இன்னும் சென்னை மற்றும் பிற பகுதிகளில் கரண்ட் இல்லை பேசாமல் நீங்கள் ராஜினாமா பண்ணிட்டு எலக்ட்ரீசிமன் வேலைக்கு போங்க அதுவும் நல்ல தொழில்தானே என விமர்சனம் செய்துள்ளார்.
மற்றொரு நெட்டிசன், “நான் என்ன படிக்கணும்னு நான் தான் முடிவு பண்ணுவேன்… நான் என்ன படிக்கணும்னு முடிவு பண்ண நீங்க யாரு? பா.ஜ.க சைலண்ட்டா த.வெ.க ரூபத்துல உள்ள வந்துட்டான். இதனால என்னென்ன பாதிப்பு வரும்னு தெரியாம இதுக்கும் முட்டுக்கொடுக்க வருவானுங்க பாருங்க” என்று பதிவிட்டுள்ளார்.
நான்காவதாக ஒரு நெட்டிசன், “எந்த வேலையும் தவறானது இல்லை தான். ஆனால், அவரவர் விருப்பப்படி தான் படிக்க வேண்டும்… நீங்கள் என்ன சொல்வது இதைப்படி அதைப்படி என்று… 4 ஆண்டுகளாக கனவையும், விடாமுயற்சியையும் துரத்தும் மாணவியின் எதிர்காலத்தை சிதைக்க நீங்கள் யார், குலக்கல்வி, சாதனத்தில் மெல்ல தினிக்க பாக்காதீங்க ஆர்.எஸ்.எஸ்” என்று விமர்சனம் செய்துள்ளார்.