கார்கில் போரின் 27-வது நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே பெதப்பம்பட்டியில் அமைந்துள்ள ராஜலட்சுமி செங்குசுவாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சார்பில் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து கார்கில் போரில் உயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் சென்றனர்.
1998-1999 குளிர்காலத்தில், இந்தியப் பக்கத்திலுள்ள பகுதிக்குள் பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் சில பிரிவுகள் “ஆபரேஷன் பத்ரி” என்ற பெயரில் இரகசியமாகப் பயிற்சி அளித்து அனுப்பிக் கொண்டிருந்தன. காஷ்மீருக்கும் லடாக்குக்கும் இடையிலான இணைப்பைத் துண்டிப்பதும் , சியாச்சின் பனிப்பாறையிலிருந்து இந்தியப் படைகளை வெளியேறச் செய்வதும் பாகிஸ்தானின் ஊடுருவலின் நோக்கமாக இருந்தது.
மேலும் பரந்த காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண இந்தியாவை பேச்சுவார்த்தை நடத்த நிர்பந்திப்பதே இதன் நோக்கமாக இருந்தது . ஆரம்பத்தில், ஊடுருவலின் தன்மை மற்றும் அளவு பற்றி அதிகம் அறியாததால், அப்பகுதியில் இருந்த இந்தியப் படைகள் ஊடுருவியவர்களை ஜிஹாதிகள் என்று கருதி, சில நாட்களுக்குள் அவர்களை வெளியேற்றுவதாக அறிவித்தன.
பின்னர், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் மற்ற பகுதிகளில் ஊடுருவல் கண்டுபிடிக்கப்பட்டதும், ஊடுருவியவர்கள் பயன்படுத்திய தந்திரங்களில் இருந்த வேறுபாடும், தாக்குதல் திட்டம் மிகவும் பெரிய அளவில் இருந்தது என்பதை இந்திய இராணுவம் உணர வைத்தது. இதனை முறியடிக்க இந்திய வாஜ்பாய் அரசு, 2,00,000 இந்தியப் படைகளைத் திரட்டி ‘ஆபரேஷன் விஜய்’ என்ற பெயரில் 1999-ஆம் ஆண்டு மே 10-ந் தேதி ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.

ஜூலை 26, 1999 அன்று, பாகிஸ்தான் இராணுவப் படைகள் தாங்கள் ஆக்கிரமித்திருந்த நிலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டதன் மூலம் போர் மொத்தம் 85 நாட்களுக்கு பின் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. இதனால் அது கார்கில் விஜய் திவாஸ் எனக் குறிக்கப்பட்டது. போரின் போது இந்திய ஆயுதப் படைகளைச் சேர்ந்த 527 வீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்தனர்.
தாய்நாட்டுக்காக தங்களது உயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு தலை வணங்கி கார்கில் போர் நினைவு தினம் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி ‘விஜய் திவஸ்’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், கார்கில் போரின் 27-வது நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே பெதப்பம்பட்டியில் அமைந்துள்ள ராஜலட்சுமி செங்குசுவாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சார்பில் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து கார்கில் போரில் உயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் ஊர்வலம் சென்றனர்.

இந்த நிகழ்வில் ஏராளமான RGM பள்ளி மாணவ, மாணவிகள் கைகளில் பதாகைகளை ஏந்தி தேசப்பற்று முழக்கங்களை எழுப்பினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி தாளாளர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்கள், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கண்ணன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஊர்வலம் சென்ற மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து இடையூறு இல்லாமல் சரி செய்து கொடுத்தனர்.