உலக அளவில் பட்டாசு ஏற்றுமதியில் சீனாவுக்கு இணையாக தமிழ்நாட்டின் சிவகாசி பட்டாசுகளையும் சர்வதேச சந்தைக்குக் கொண்டு செல்ல புதிய ஏற்றுமதிக் கொள்கை வகுக்கப்படும் என்று தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீர்த்தனா, “சிவகாசியில் மிகச்சிறந்த உள்கட்டமைப்பும், தொழிலாளர்களின் அசாத்திய திறமையும் இருந்தபோதிலும், இன்னும் முழுமையான அளவில் சட்டப்பூர்வமான ஏற்றுமதி நடைமுறைகள் சாத்தியப்படாமல் உள்ளது. இதனைச் சரிசெய்யும் வகையில், சட்டரீதியாக உள்ள வழிமுறைகளை ஆராய்ந்து, முறையான ஏற்றுமதிக் கொள்கை ஒன்று உருவாக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
விருதுநகர் மாவட்டத்திற்கு அருகில் சர்வதேச தரத்திலான துறைமுகங்கள் இருப்பதால், இங்கிருந்து எளிதாக வெளிநாடுகளுக்குப் பட்டாசுகளைக் கொண்டு சேர்க்க முடியும். அண்மையில் கொரியா சென்றிருந்த போது சிவகாசி பட்டாசுகள் குறித்து விளக்கப்பட்டதாகவும், அதற்கு அந்நாட்டுப் பிரதிநிதிகள் மிகுந்த வரவேற்பு அளித்து முறையான அழைப்பு விடுத்துள்ளதாகவும் கீர்த்தனா தெரிவித்தார். மேலும் போலந்து போன்ற நாடுகளில் இருந்து தனிநபர் ஒருவரே சுமார் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை இறக்குமதி செய்யத் தயாராக இருக்கும் நிலையில், இதற்கான சாத்தியக்கூறுகள் சிவகாசிக்கு அதிகமாகவே உள்ளன.
எனவே,அண்ணன் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இந்த ஏற்றுமதிக் கொள்கைக்கான சட்ட நடைமுறைகளை முழுமையாகப் படித்து, சிவகாசி பட்டாசை உலக நாடுகளுக்குப் பாதுகாப்பாகவும் சட்டப்பூர்வமாகவும் ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பேசுபொருள்ளானது.
இந்த கருத்திற்கு பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சடஜிப்ட் தொடர்பு கொண்டு ஒட்டுமொத்த போலந்து நாட்டின் ஓராண்டு பட்டாசு தொழிலின் சந்தை மதிப்பே தோராயமாக ரூ. 1000 முதல் 1500 கோடி வரைதான் இருக்கும். அப்படி இருக்கும் போது ஒரே ஒரு தொழில் அதிபர் உங்க பாஷையில் சொன்னால் ஒரே ஒரு கஸ்டமர் 6,000 கோடி ரூபாய்க்கு எப்படி ஆடர் கொடுக்க முடியும்.
நீங்கள் எடுக்கும் முயற்சிகள் தமிழ்நாட்டிற்கு தொழிலை ஈர்க்கும் முயற்சிகளாக இருக்கவேண்டும். நீங்க ஆட்சியமைத்த பிறகு எத்தனை முயற்சிகள் ஆந்திராவுக்கு போயிருக்கு என்று பெறுங்கள். நீங்க பிரஸ்மீட் கட் பண்ணி ரீலிஸ் போடுவதாலோ இல்லை ரியல் எஸ்டேட் அட்வெஸ்மென்ட் மாதிரி போடுவதால் எந்த பயனும் இல்லை.