ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள நவால்கர் தாலுகாவில் உள்ள தனியன் பஞ்சாயத்தில் ஒரு நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் இரண்டு ஆழ்துளைக் கிணறுகளும் இருந்தபோதிலும், சீரான தண்ணீர் விநியோகம் கிடைப்பதில்லை. கடந்த ஐந்து முதல் ஆறு மாதங்களாகத் தண்ணீர்ப் பிரச்சினை நீடித்து வரும் நிலையில், கிராமத்தின் தண்ணீர் நகரத்திற்குத் திருப்பி விடப்படுவதால் கிராம மக்கள் ஒவ்வொரு துளி தண்ணீருக்காகவும் ஏங்கிக் கொண்டிருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் அதே சமயம் பல வீடுகளுக்கு அசுத்தமான தண்ணீர் சென்றடைவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தாங்கள் தண்ணீர் பிரச்சனையை மாதக்கணக்கில் புகார் அளித்தும், ஆனால் சம்பத்தப்பட்ட அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை. இதனை தொடர்ந்து, பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த இணைப் பொறியாளர் அந்தரா மீனா அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களை சமதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது, அங்கு கூடியிருந்த பெண்கள், கடந்த ஐந்து முதல் ஆறு மாதங்களாகத் தண்ணீர்ப் பிரச்சினை நீடித்து வருவதாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டினார். அங்கு திரண்டிருந்த பெண்களில் சிலர், “எங்கள் வீடுகளில் குடிநீர் கூட இல்லை,” என்றனர். மற்றவர்களோ, “ஒவ்வொரு முறையும் நாங்கள் டேங்கர்களை தண்ணீர் அழைக்க வேண்டியுள்ளது,” என்று கூறி போராட்டதை தொடர்ந்தனர்.
அப்போது அங்கு கூடியிருந்த பெண்களின் போராட்டம் வலுப்பதைக் கண்ட இணைப் பொறியாளர் அந்தரா மீனா வாகனத்தில் ஏறி அமர்ந்தார். ஆனால், இணைப் பொறியாளர் அந்தரா மீனாவை பெண்கள் அங்கேயே இருக்க என கூறி வாகனத்தைச் சுற்றி ஒரு கூட்டம் கூடியது. மேலும் அவர்கள் தங்கள் பிரச்சனைகளை விளக்கத் தொடங்கினர்.
அப்போது, காலையில் இரண்டு முதல் ஐந்து நிமிடங்களுக்கு மட்டுமே தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இவ்வளவு குறுகிய நேரத்தில் தங்கள் குடும்பம் முழுவதையும் எப்படி நடத்துவது என்று மக்கள் கேள்வி எழுப்ப இணைப் பொறியாளர் அந்தரா மீனா வாகனத்தில் ஏறி அழத் தொடங்கியபோது, அவர் அழுவதைக் கண்டதும், அங்கு கூடியிருந்த மக்களும் ஒரு கணம் அமைதியானார்கள். அப்போது ஒரு பெண், “நாங்கள் பல நாட்களாக அழுது கொண்டிருக்கிறோம், இன்று நீங்களோ அழுகிறீர்கள்” என்று கூறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.