நாகர்கோவிலை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவரிடம் பேஸ்புக்கில் இளம்பெண்களில் ஆபாச புகைப்படங்கள், கிளுகிளுப்பான படங்களை பதிவிட்டு, உல்லாசமாக இருக்கலாம் என பதிவிட்டு இளம்பெண் ஒருவர் பணத்தை பறித்துள்ளார். ஏமாறுபவர்கள் இருக்கின்ற வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்ற பழமொழிக்கு இணங்க இன்ஸ்டாகிராம், OLX , பேஸ்புக் போன்ற செயலிகளில் மக்களை கவரும் வகையில் விளம்பரங்களை தயாரித்து இணையத்தின் மூலம் விதவிதமான விளம்பரங்களின் மூலமாக பல மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. காலத்து ஏற்ப அப்டேட் செய்து அதற்கு தகுந்தாற்போல் ஏமாற்றி மோசடி செய்து பணம் பறித்து வருவதையே வேலையாக வைத்துள்ளனர்.

இத்தகைய மோசடி சம்பவங்களில் யாரும் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வுகளை செய்தாலும் இந்த சம்பவங்கள் குறைந்தபாடில்லை. அந்த வகையில், நாகர்கோவில் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும் 40 வயது நபர் ஒருவர் பேஸ்புக் அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது அவர் பெண் ஒருவரின் ஐடியை பார்த்துள்ளார். அந்த பதிவில் ஆண்ட்டி நம்பர் 600, பிரீ type நம்பர் 300, ஹவுஸ் ஓய்ப் நம்பர் 700, காலேஜ் கேர்ஸ் நம்பர் 700 போன்று இருந்தது. மேலும் ஒரு வீடியோவில் இளம்பெண் ஒருவர் பேசுவது வீடியோவில், “இங்கே உள்ள பெண்களிடம் பேச வேண்டும் என்றால் பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்திய பிறகு அதில் ஒரு செல்போன் எண் வரும்.

அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டால், ஆபாச உரையாடல் செய்யும் பெண்களும், ஆபாச சாட்டிங் செய்யும் பெண்களும் வீடியோ கால் மூலம் திரையில் தோன்றுவார்கள். விருப்பப்பட்டால், அவர்களிடம் உல்லாசமாகவும் இருக்கலாம் என அந்த பெண் வீடியோவில் பேசுவது போன்று இருந்தது. மேலும் இந்த வீடியோக்களுடன் சில கிளுகிளுப்பான வீடியோக்களும் இருந்துள்ளன. இதையடுத்து அந்த ஊழியர் ரூ.1,500 வரை ஆன்லைன் மூலமாக பணம் அனுப்பி இருக்கிறார். அதில் குறிப்பிட்டது போலவே ஒரு செல்போன் எண்ணும் இருந்துள்ளது. ஆனால் அந்த எண்ணை தொடர்புகொண்ட போது சுவிட்ச் ஆஃப் என வந்துள்ளது. இதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அந்த ஊழியர் உணர்ந்துள்ளார்.

இது குறித்து உடனடியாக அவர் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் சைபர் கிரைம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், நாகர்கோவிலில் வீடு எடுத்து தங்கியிருந்த 20 வயதான நபிலா பேகம் என்ற இளம்பெண் தான் போலியாக பேஸ்புக் கணக்கு தொடங்கி அதில் ஆபாச படங்கள், வீடியோக்களை பதிவேற்றி அதில் சிக்கும் ஆண்களிடம் பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. நபிலா பேகமை காவல்துறையினர் கைது செய்தனர். இதன்பின்னர் அவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் தக்கலையில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.