பஞ்சமி நிலம் மீட்பு குறித்து போராட்ட அறிவிப்பு: வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்திற்கு உட்பட்ட வாணாபுரம் கிராமத்தில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொந்தமான, பஞ்சமி நிலத்தை ஆதிக்க சாதியினர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகிறார்கள் மதுபான கடை வாடகை விட்டுள்ளார்கள் அந்த நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கக்கோரி தலித் விடுதலை இயக்கம் மற்றும், தோழமை அமைப்புகள் ஒன்றிணைந்து ஏர் உழும், போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது, அதன்டிப்படையில் இன்று  தேதியில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

இதில் தண்டராம்பட்டு வட்டாட்சியர், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர், தண்டராம்பட்டு காவல் ஆய்வாளர், கலந்து கொண்டனர், பஞ்சமி நிலத்தில் உள்ள, அரசு மதுபானக் கடையை உடனடியாக அப்புறப்படுத்தி விடுவதாகவும், மற்றும் முனுசாமிக்கு சொந்தமான நிலத்தை 15 நாட்களில் ஒப்படைத்ததாகவும் மற்றும் 200 ஏக்கர் பஞ்சமி நிலத்தை 1 மாதத்தில் மீட்டுக் கொடுப்பதாகவும் அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளார்கள்.