அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அவர்கள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்கள் மாவட்ட கண்காணிப்பு குழு மூலம் வருடம் தோரும் கோடை விடுமுறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி கலந்து கொண்டு வாகனங்களை ஆய்வு செய்தனர். தமிழ்நாடு பள்ளிப் பேருந்துகள் ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு சிறப்பு விதிகள், 2012 -இன் படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் வருடாந்திர பாதுகாப்பு சோதனைகளை மாவட்ட அளவிலான குழுவால் கட்டாயமாக்குகிறது.
அந்த ஆய்வின் போது, தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டிகள், அவசரகால வெளியேற்றங்கள், கதவு வழிமுறைகள், ஜன்னல்களில் பாதுகாப்பு கிரில்கள், இருக்கை ஏற்பாடுகள், வேகக் கட்டுப்பாட்டு கருவிகள், ஃபுட்போர்டுகள் மற்றும் பிரதிபலிப்பு நாடாக்கள் போன்ற முக்கியமான பாதுகாப்பு அம்சங்களை அதிகாரிகள் சரிபார்த்தனர். சிசிடிவி கேமராக்கள், நேரடி காட்சி மானிட்டர்கள், ஓட்டுநர் உரிமங்கள், அனுமதி மற்றும் காப்பீட்டு ஆவணங்கள் மற்றும் உமிழ்வு சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டன.