சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து திருவள்ளூர் தெற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் தெற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் பிரியா பாரதி தலைமை தாங்கினார்.
இதில் பூந்தமல்லி நகர காங்கிரஸ் தலைவர் இமயவரம்பன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பூவை ரமேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் நடராஜன், வார்டு தலைவர்கள் ரவி கிருஷ்ணன், பூவை சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநில தலைவர் ஹசீனா சையத் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்.
மேலும் பாஜக அரசின் மெத்தனப் போக்கையும் சர்வாதிகாரப் போக்கையும் கண்டித்தும், நேஷனல் ஹெரால்டு பொய் வழக்கு, கேஸ் சிலிண்டர், பெட்ரோல் டீசல் விலைவாசி உயர்வு, வக்ஃப் சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பு ஆகியவற்றை கண்டித்தும் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மகிளா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பூந்தமல்லி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.