வைகோ காட்டம்: ஏஜெண்டு R.N. ரவியை பாஜக அலுவலகத்தில் வைத்து அரசியல் செய்யுங்கள்..!

“உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மூக்குடைபட்ட பிறகும் கூட, துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறார் ஆளுநர் R.N. ரவி; பாஜகவின் ஏஜெண்டாக செயல்படும் R.N. ரவியை ஆளுநர் பாஜக அலுவலகத்தில் வைத்து கொண்டு அரசியல் செய்யாமல் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காட்டமாக விமர்சித்தார்.

தமிழ்நாடு ஆளுநர் R.N. ரவியைக் கண்டித்தும், வஃபு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மதிமுக சார்பில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார். இந்தப் போராட்டத்தில் வைகோ பேசுகையில், ஜனநாயகத்தின் அடித்தளம் என்பது சிறுபாமையினரை பாதுகாப்பதுதான். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அனைத்து மதங்களும் தங்களுடைய உரிமையை இழக்கும் நிலை ஏற்படும்.

இந்தியாவின் ஒருமைப்பாடு காப்பாற்றப்படாது. தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி பெயர்களை சட்டமன்றத்தில் உச்சரிக்க மாட்டேன் என்று R.N. ரவி சொல்கிறார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மூக்குடைபட்ட பிறகும் கூட, துணை வேந்தர்கள் மாநாட்டை R.N. ரவி நடத்துகிறார் . பாஜகவின் ஏஜெண்டாக செயல்படும் R.N. ரவியை ஆளுநர் அலுவலகத்தில் வைத்து கொண்டு அரசியல் செய்யாமல், பாஜக கட்சி அலுவலகத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள் என வைகோ கடுமையாக விமர்சனம் செய்தார்.